Latest Updates
-
தக்காளியும், கொத்தமல்லியும் இருந்தா.. ஒருடைம் இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 27 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மோசமான நாள் காத்திருக்காம் -
செவ்வாய் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
அட்டகாசமான ஆந்திரா கத்திரிக்காய் தக்காளி சட்னி ரெசிபி - செஞ்சு பாருங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கோடைக்கால திருமணமா? வெயிலின் தாக்கத்தில் இருந்து விருந்தினர்களைக் காக்க இந்த 5 விஷயங்களைச் செய்ய மறக்காதீங்க! -
ஆண்களுக்கு இளம் வயதிலேயே வழுக்கை விழ காரணமாக இருக்கும் முக்கிய உணவுகள் - பார்த்து சாப்பிடுங்க -
திருமண உறவில் பாலியல் வன்கொடுமை: சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ள பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அதிர்ச்சி உண்மைகள்! -
இந்த தேதியில் பிறந்த பெண்கள் அவங்க கணவரை கோடீஸ்வரராக்கும் அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்களாம் -
முட்டையை இந்த மாதிரி பட்டாணியுடன் சேர்த்து குருமா செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
வாஸ்து செடிகள்: 42°C வெயிலிலும் வீட்டை ஜில்லுனு வச்சுக்கணுமா? இந்த செடிகள் இருந்தா போதும்!
தாத்தாவிற்கு இருந்தால் பேரனுக்கும் இருக்கலாம் ! அது என்ன?
தாத்தாவிடமிருந்து பேரப்பிள்ளைகளுக்கு அப்படியே தங்களின் ஜீனை கடத்துவது உயிரியலில் அதிசய நிகழ்வுகளில் ஒன்று.
உருவத்திலும் மட்டுமல்ல, குணத்திலும் அவர்கள் அவர்களின் அப்பா, தாத்தாவைப் போலவே இருப்பார்கள். நல்ல குணங்களும், கெட்ட குணங்களும் மட்டும் அவர்களைப் போய் சேரவில்லை. உங்களின் மன நிலையும்தான். புரியவில்லையா?

நீங்கள் எப்போதும் மன அழுத்தத்துடனோ, அல்லது உங்கள் தந்தை மன அழுத்தத்துடன் இருந்தாலோ, அது உங்களின் அடுத்து வரும் சந்ததியினருக்கும் இதே பிரச்சனைகள் நீடிக்கும் என்று கொலம்பியா பல்கலைக் கழகம் தனது ஆய்வை சமர்ப்பித்துள்ளது.
சுமார் 19 வயதுள்ள 251 பேர் அடங்கிய டீன் ஏஜ் பருவத்தினரிடம் ஆய்வை மேற்கொண்டபோது, அவர்களின் சென்ற இரு தலைமுறைகளையும் ஆய்வுக்கு உட்படுத்தினர்.
இதில் மன அழுத்தம், நம்பிக்கையின்மை, எதிர்மறை எண்ணங்கள், தற்கொலை தூண்டப்படும் எண்ணம் ஆகியவை பெற்றுள்ள பிள்ளைகளை ஆராய்ந்த போது, அவர்களின் தாத்தாவிற்கோ, அல்லது தந்தைக்கோ இது மாதிரியான பிரச்சனைகள் இருந்தது தெரிய வந்துள்ளது.
மன அழுத்தம் தாத்தாவிற்கு இல்லாமல் அப்பாவிற்கு மட்டும் இருந்தால், அது குழந்தையின் மனோ நிலையும் பாதிக்கின்றது. ஆனால் தாத்தாவிற்கும் இருந்து, அப்பாவிற்கும் இருந்தால் மூன்று மடங்கு பேரனுக்கும் வர வாய்ப்புள்ளது என வெயிஸ்மான் என்ற கொலம்பிய பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் கூறுகிறார்.
எனவே மன அழுத்தம் என்பது உங்களோடு முடிந்துவிடுவதில்லை. உங்களையும் தாண்டி மூன்று தலைமுறைக்கு பாதிக்கிறது. இது வெறும் சுற்று சூழ் நிலை மட்டும் சார்ந்தது அல்ல, உடலின் மரபணு சார்ந்த நிலை எனவும் கூறியிருக்கிறார் வெயிஸ்மான்.
நாம் விதைப்பதை தான் அறுவடை செய்ய முடியும். நல்ல விஷயங்களை நீங்கள் குழந்தைகளுக்கு சொல்லித் தர வேண்டியதில்லை. உங்களிடம் கற்றுக் கொள்ளும்படி நீங்கள்தான் நடந்து கொள்ள வேண்டும். ஏனெனில் நாம் அவர்களுக்கு சொல்வதை விட நாம் செய்வதைதான் அவர்கள் செய்வார்கள்.



Click it and Unblock the Notifications


