Just In
- 15 min ago செவ்வாய் பெயர்ச்சியால் ஏப்ரல் 23 முதல் இந்த 3 ராசிக்காரங்க ரொம்பவும் கவனமா இருக்கணும்...
- 1 hr ago உங்க முகத்தில் சுருக்கங்கள் வந்து வயசான மாதிரி தெரியுறீங்களா? அப்ப தேங்காய் எண்ணெயை இப்படி யூஸ் பண்ணுங்க...!
- 3 hrs ago பெண்களின் இடுப்பின் அளவு அவர்களின் கருவுறுதல் திறனை பாதிக்குமாம்... ஆய்வு சொல்லும் அதிர்ச்சி முடிவு...!
- 4 hrs ago இந்த உணவுகளில் முட்டையை விட துத்தநாகமும் மற்ற ஊட்டச்சத்துக்களும் அதிகமாக உள்ளதாம்... தினமும் சாப்பிடுங்க...!
Don't Miss
- News கோவையில் அண்ணாமலை வெல்வாரா? பாஜகவுக்கு அதிர்ச்சி தந்த தந்தி டிவி சர்வே.. வெற்றி யாருக்கு தெரியுமா?
- Automobiles மாருதி கார்களை வாங்க எப்போதுமே ஒரு பெரிய கூட்டம் இருக்கு!! மார்ச் மாதத்தில் நடந்தது என்ன?
- Sports தவிக்க விட்டுட்டாரே.. ரோஹித் செயலால் நொந்து போன ஹர்திக் பாண்டியா.. தோனியை பார்த்து கதறல்
- Movies Actor Vikram: நான் சொல்லாமலேயே என்னுடைய தேவைகளை புரிந்து கொண்ட விக்ரம்.. பாலா ஓபன்!
- Finance ஒன்றுக்கும் மேற்பட்ட UAN நம்பர்களை ஆன்லைனில் இணைப்பது எப்படி? ரொம்ப ஈசி இதை பாலோ பண்ணுங்க..!
- Technology BSNL சூப்பர் பிளான்.. 50GB டேட்டா.. 3600 SMS.. 36 நாள் வேலிடிட்டி.. தரமான ப்ரீபெய்ட் திட்டம்? என்ன விலை?
- Travel தமிழ்நாட்டுக்கு உள்ளேயும், பக்கத்துலயும் இவ்வளோ அழகான பெரிய நீர்வீழ்ச்சிகள் இருக்கு தெரியுமா?
- Education யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் ரிலீஸ்..லக்னோ இளைஞர் ஆதித்யா ஸ்ரீவஸ்தவா முதலிடம்
தாத்தாவிற்கு இருந்தால் பேரனுக்கும் இருக்கலாம் ! அது என்ன?
தாத்தாவிடமிருந்து பேரப்பிள்ளைகளுக்கு அப்படியே தங்களின் ஜீனை கடத்துவது உயிரியலில் அதிசய நிகழ்வுகளில் ஒன்று.
உருவத்திலும் மட்டுமல்ல, குணத்திலும் அவர்கள் அவர்களின் அப்பா, தாத்தாவைப் போலவே இருப்பார்கள். நல்ல குணங்களும், கெட்ட குணங்களும் மட்டும் அவர்களைப் போய் சேரவில்லை. உங்களின் மன நிலையும்தான். புரியவில்லையா?
நீங்கள் எப்போதும் மன அழுத்தத்துடனோ, அல்லது உங்கள் தந்தை மன அழுத்தத்துடன் இருந்தாலோ, அது உங்களின் அடுத்து வரும் சந்ததியினருக்கும் இதே பிரச்சனைகள் நீடிக்கும் என்று கொலம்பியா பல்கலைக் கழகம் தனது ஆய்வை சமர்ப்பித்துள்ளது.
சுமார் 19 வயதுள்ள 251 பேர் அடங்கிய டீன் ஏஜ் பருவத்தினரிடம் ஆய்வை மேற்கொண்டபோது, அவர்களின் சென்ற இரு தலைமுறைகளையும் ஆய்வுக்கு உட்படுத்தினர்.
இதில் மன அழுத்தம், நம்பிக்கையின்மை, எதிர்மறை எண்ணங்கள், தற்கொலை தூண்டப்படும் எண்ணம் ஆகியவை பெற்றுள்ள பிள்ளைகளை ஆராய்ந்த போது, அவர்களின் தாத்தாவிற்கோ, அல்லது தந்தைக்கோ இது மாதிரியான பிரச்சனைகள் இருந்தது தெரிய வந்துள்ளது.
மன அழுத்தம் தாத்தாவிற்கு இல்லாமல் அப்பாவிற்கு மட்டும் இருந்தால், அது குழந்தையின் மனோ நிலையும் பாதிக்கின்றது. ஆனால் தாத்தாவிற்கும் இருந்து, அப்பாவிற்கும் இருந்தால் மூன்று மடங்கு பேரனுக்கும் வர வாய்ப்புள்ளது என வெயிஸ்மான் என்ற கொலம்பிய பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் கூறுகிறார்.
எனவே மன அழுத்தம் என்பது உங்களோடு முடிந்துவிடுவதில்லை. உங்களையும் தாண்டி மூன்று தலைமுறைக்கு பாதிக்கிறது. இது வெறும் சுற்று சூழ் நிலை மட்டும் சார்ந்தது அல்ல, உடலின் மரபணு சார்ந்த நிலை எனவும் கூறியிருக்கிறார் வெயிஸ்மான்.
நாம் விதைப்பதை தான் அறுவடை செய்ய முடியும். நல்ல விஷயங்களை நீங்கள் குழந்தைகளுக்கு சொல்லித் தர வேண்டியதில்லை. உங்களிடம் கற்றுக் கொள்ளும்படி நீங்கள்தான் நடந்து கொள்ள வேண்டும். ஏனெனில் நாம் அவர்களுக்கு சொல்வதை விட நாம் செய்வதைதான் அவர்கள் செய்வார்கள்.