Latest Updates
-
18 மாதங்களுக்கு பின் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சரவணபவன் நெய் மணக்கும் வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் அசத்தலா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களிடம் நல்ல குணங்களை விட கெட்ட குணங்கள்தான் அதிகமாக இருக்குமாம் -
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம்
தாத்தாவிற்கு இருந்தால் பேரனுக்கும் இருக்கலாம் ! அது என்ன?
தாத்தாவிடமிருந்து பேரப்பிள்ளைகளுக்கு அப்படியே தங்களின் ஜீனை கடத்துவது உயிரியலில் அதிசய நிகழ்வுகளில் ஒன்று.
உருவத்திலும் மட்டுமல்ல, குணத்திலும் அவர்கள் அவர்களின் அப்பா, தாத்தாவைப் போலவே இருப்பார்கள். நல்ல குணங்களும், கெட்ட குணங்களும் மட்டும் அவர்களைப் போய் சேரவில்லை. உங்களின் மன நிலையும்தான். புரியவில்லையா?

நீங்கள் எப்போதும் மன அழுத்தத்துடனோ, அல்லது உங்கள் தந்தை மன அழுத்தத்துடன் இருந்தாலோ, அது உங்களின் அடுத்து வரும் சந்ததியினருக்கும் இதே பிரச்சனைகள் நீடிக்கும் என்று கொலம்பியா பல்கலைக் கழகம் தனது ஆய்வை சமர்ப்பித்துள்ளது.
சுமார் 19 வயதுள்ள 251 பேர் அடங்கிய டீன் ஏஜ் பருவத்தினரிடம் ஆய்வை மேற்கொண்டபோது, அவர்களின் சென்ற இரு தலைமுறைகளையும் ஆய்வுக்கு உட்படுத்தினர்.
இதில் மன அழுத்தம், நம்பிக்கையின்மை, எதிர்மறை எண்ணங்கள், தற்கொலை தூண்டப்படும் எண்ணம் ஆகியவை பெற்றுள்ள பிள்ளைகளை ஆராய்ந்த போது, அவர்களின் தாத்தாவிற்கோ, அல்லது தந்தைக்கோ இது மாதிரியான பிரச்சனைகள் இருந்தது தெரிய வந்துள்ளது.
மன அழுத்தம் தாத்தாவிற்கு இல்லாமல் அப்பாவிற்கு மட்டும் இருந்தால், அது குழந்தையின் மனோ நிலையும் பாதிக்கின்றது. ஆனால் தாத்தாவிற்கும் இருந்து, அப்பாவிற்கும் இருந்தால் மூன்று மடங்கு பேரனுக்கும் வர வாய்ப்புள்ளது என வெயிஸ்மான் என்ற கொலம்பிய பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் கூறுகிறார்.
எனவே மன அழுத்தம் என்பது உங்களோடு முடிந்துவிடுவதில்லை. உங்களையும் தாண்டி மூன்று தலைமுறைக்கு பாதிக்கிறது. இது வெறும் சுற்று சூழ் நிலை மட்டும் சார்ந்தது அல்ல, உடலின் மரபணு சார்ந்த நிலை எனவும் கூறியிருக்கிறார் வெயிஸ்மான்.
நாம் விதைப்பதை தான் அறுவடை செய்ய முடியும். நல்ல விஷயங்களை நீங்கள் குழந்தைகளுக்கு சொல்லித் தர வேண்டியதில்லை. உங்களிடம் கற்றுக் கொள்ளும்படி நீங்கள்தான் நடந்து கொள்ள வேண்டும். ஏனெனில் நாம் அவர்களுக்கு சொல்வதை விட நாம் செய்வதைதான் அவர்கள் செய்வார்கள்.



Click it and Unblock the Notifications


