Latest Updates
-
இன்றைய ராசிபலன் 09 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் கதவை தட்டப்போகுதாம் -
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கும் விஷ யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
குழந்தையில் தொப்புளில் சாம்பல் பூசாதீங்க!

தொப்புள் கொடி
கருவில் இருக்கும் குழந்தைக்கும் தொடர்பில் இருக்கும் தொப்புள் கொடியை கட் செய்துதான் குழந்தையை வெளியே எடுப்பார்கள். குழந்தையில் வயிற்றில் சிறிய அளவில் நீட்டிக்கொண்டிருக்கும் தொப்புள் கொடியை கிளிப் மாட்டியிருப்பார்கள். இந்த பகுதியை தொற்றுநோய் தாக்காமல் பாதுகாக்க வேண்டும்.
ஐந்து நாட்களுக்குள் இந்த தொப்புள் கொடி காய்ந்து விழுந்து விடும். ஆனால் இன்றைக்கும் சில கிராமங்களில் தொப்புள் கொடிக்கு சுண்ணாம்பு, சாம்பல் போன்றவற்றை தடவினால் சீக்கிரம் தொப்புள் காய்ந்து விடும் என்று பூசுவார்கள். ஆனால் அது குழந்தையின் உயிருக்கே உலை வைத்துவிடும். தொப்புளில் சுண்ணாம்பு பூசுவதால் குழந்தை டெட்டனஸ் என்னும் ஜன்னி தாக்கி இறந்துவிடும்.
சீம்பால் தர மறுப்பு
குழந்தை பிறந்த உடனே தாய்க்கு சுரக்கும் சீம்பாலை சூனியக்காரியின் பால் என கொடுக்க மறுத்துவிடுவார்கள். இது தவறான செயலாகும். மஞ்சள் நிறத்தில் சுரக்கும் அந்த தாய்பாலில்தான் குழந்தைக்கு தேவையான அனைத்து சத்துக்களும் உள்ளன.
கண்ணில் எண்ணெய்
குழந்தையின் கண், காது, மூக்கு ஆகிய பகுதிகளில் எண்ணெய் விடுவார்கள். இது ஆபத்தானது. நேராக நுரையீரலை சென்று தாக்கி தொற்று நோயை ஏற்படுத்திவிடும்.
நீல நிற கண்கள்
பிறந்த குழந்தையின் கண்கள் நீல நிறத்தில் இருந்தால் குடும்பத்திற்கு ஆகாது என்பார்கள். இது தவறான கருத்து. குழந்தையின் கண்களின் நிறத்திற்கு காரணமான கார்னியா படிப்படியாக வளர்ச்சியடைந்து ஒரிஜினல் நிறத்திற்கு மாறும். 6 மாதங்களில் கண்களில் ஒரிஜினல் நிறம் கிடைத்து விடும்.
சூரிய ஒளியில் காட்டுதல்
காலையில் சூரிய ஒளியில் குழந்தையை காட்டுவது அவசியம் என்று பிறந்த குழந்தையை வாட்டி எடுப்பார்கள். இது தவறான செயல். இதனால் குழந்தையின் மென்மையான தோல் பகுதியில் கொப்புளங்கள் ஏற்படும்.



Click it and Unblock the Notifications