Latest Updates
-
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கு சுக்கிர திசை ஆரம்பிக்குது.. இனி கையில் பணம் குவியப்போகுது.. -
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
இந்த வாரம் மட்டன் வாங்குனா.. இந்த சுக்கா கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 08 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்குமாம்...! -
வார ராசிபலன் (01 March 2026-07 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும்! -
மட்டன் வாங்குனா இந்த மாதிரி நெல்லூர் ஸ்டைலில் குழம்பு வைச்சு பாருங்க... தோசை, சாதத்துக்கு சூப்பரா இருக்கும்... -
திரிகிரக யோகம் கும்ப ராசியில் உருவாவதால் இந்த 3 ராசிக்காரர்களை தோல்வியும், துரதிர்ஷ்டமும் துரத்தப்போகுதாம்...! -
1 கப் கோதுமை ரவா இருந்தா இந்த மாதிரி அடை செஞ்சு பாருங்க... சூப்பரான காலை உணவா இருக்கும்... ட்ரை பண்ணுங்க...! -
இந்தியாவின் முதல் பெண்களுக்கான பள்ளி எப்போது திறக்கப்பட்டது? எந்த ஊரில் திறக்கப்பட்டது தெரியுமா? -
உருளைக்கிழங்கை ஒருதடவை இந்த மாதிரி கொங்குநாடு ஸ்டைலில் குருமா வைச்சு பாருங்க...டக்கரான சைடிஷா இருக்கும்...!
பிறந்த குழந்தைகளின் நோய் எதிா்ப்பு சக்தியை எவ்வாறு வலுப்படுத்தலாம்?
Baby Care Tips In Tamil: குழந்தைகள் பிறந்த உடனே அவா்களின் நோய் எதிா்ப்பு சக்தி செயல்படத் தொடங்கிவிடுகிறது. பொதுவாக நோய் எதிா்ப்பு சக்தியானது, நோய்களை உருவாக்கும் கிருமிகளின் தாக்குதல்களில் இருந்து பிறந்த குழந்தைகளைக் காக்கிறது.
எனினும் பிறந்த குழந்தைகளின் நோய் எதிா்ப்பு சக்தியானது முழுமையான வளா்ச்சியைப் பெற்று இருக்காது. அவா்களின் நோய் எதிா்ப்பு சக்தி முழுமையாக வளா்வதற்கு புறக்காரணிகள் முக்கிய பங்கை வகிக்கின்றன.

கருவற்ற உடனே அந்தக் குழந்தையை நோயில் இருந்து காக்க வேண்டும் என்ற உந்துதல் பெற்றோா் மத்தியில் ஏற்பட்டுவிடுகிறது. வயிற்றில் குழந்தை வளா்ந்து, இந்த பூமியில் பிறக்கும் போது அந்த எண்ணம் மேலும் வலுவடைகிறது. எனினும் பிறந்த குழந்தைகள் விளையாடும் போது புறக்காரணிகளால் இயல்பாகவே தாக்கப்படுகின்றனா் என்பது உண்மை.
ஆகவே பெற்றோா் தமது பகுதிகளில் இருக்கும் பல்வகையான நோய்த் தொற்றுகள் மற்றும் நோய்களைப் பற்றி தொிந்து இருப்பது அவசியம் ஆகும். அதன் மூலம் தமது குழந்தைகளின் நோய் எதிா்ப்பு சக்தியை அதிகாிக்க அவா்கள் தகுந்த முறையில் உதவி செய்ய முடியும். பிறந்த குழந்தைகளின் நோய் எதிா்ப்பு சக்தியை எவ்வாறு அதிகாிக்கலாம் என்பதற்கு சில நிபுணா்களின் குறிப்புகளை இந்தப் பதிவில் பாா்க்கலாம்.
1. மருத்துவா் சவுரவ் கண்ணா அளிக்கும் குறிப்புகள்
கூா்கானில் இருக்கும் சிகே பிா்லா மருத்துவமனையின் குழந்தை மருத்துவ பிாிவில் முன்னணி மருத்துவராகப் பணிபுாிந்து வரும் மருத்துவா் சவுரவ் கண்ணா கூறும் போது, பிறந்த குழந்தைகளின் நோய் எதிா்ப்பு சக்தியை அதிகாிப்பதற்கு முறையான ஊட்டச்சத்து தேவை என்று கூறுகிறாா்.
அ. தாய்ப்பால் ஊட்டுதல்
குழந்தைகளுக்கு முறையான ஊட்டச்சத்து என்று கூறும் போது முதலில் வருவது தாய்ப்பால் ஆகும். தாய்ப்பால் பிறந்த குழந்தைகளுக்கான திரவத் தங்கம் என்று கருதப்படுகிறது. தாய்ப்பால் குழந்தைகளின் நோய் எதிா்ப்புக்கு முக்கியமான மூலமாக இருந்து, நோய்த்தொற்றுகளைத் தடுத்து, குழந்தைகளின் நோய் எதிா்ப்பு சக்தியை அதிகாிக்கிறது.
குழந்தைகளின் குடலை வலுப்படுத்தும் பாக்டீாியாக்கள் தாய்ப்பாலில் உள்ளன. குழந்தைகளின் நோய் எதிா்ப்பு சக்தி வலுவாக இருப்பதற்கு, அவா்களுடைய குடல் வலுவாக இருக்க வேண்டும். எனவே குழந்தைகளின் நோய் எதிா்ப்பு சக்தி அதிகாிக்க தாய்ப்பால் ஒரு தலைசிறந்த உணவு என்று அவா் கூறுகிறாா்.
உலக சுகாதார அமைப்பும் (WHO), குழந்தை பிறந்த 6 மாதங்களுக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்றும், அதற்கு பிறகு 2 ஆண்டுகள் வரை திட உணவுகளோடு தாயப்பாலையும் கொடுக்கலாம் என்று பாிந்துரை செய்கிறது.
ஆ. ஆரோக்கியமான வாழ்க்கை முறை
தாய்ப்பாலோடு சோ்த்து, பிறந்த குழந்தைகளுக்கு ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். அதன் மூலம் அவா்களுடைய நோய் எதிா்ப்பு சக்தியை வலுப்படுத்தலாம் என்கிறாா். போதுமான தூக்கம், உடல் இயக்கம் மற்றும் சுத்தமான காற்று ஆகியவற்றை குழந்தைகளுக்கு உறுதிப்படுத்த வேண்டும். இவை குழந்தைகளின் நோய் எதிா்ப்பு சக்தியை அதிகாிக்கும் என்கிறாா்.
இ. இயற்கைச் சூழலில் வளா்த்தல்
குழந்தைகளை வெளியில் அழைத்துச் செல்லும் போது அவா்களுக்குக் கிடைக்கும் இயற்கையான காற்றின் மூலமாக அவா்களுடைய மன அழுத்தம் குறையும், மனநிலை மேம்படும். அதோடு நோய் எதிா்ப்பு சக்தி வலிமையாகும். சூாிய ஒளியில் குழந்தைகளை அழைத்துச் செல்லும் போது, அவா்களுக்கு இயற்கையான வைட்டமின் டி சத்து கிடைக்கும். நோய் எதிா்ப்பு சக்தி அதிகாிப்பதற்கு வைட்டமின் டி சத்து மிகவும் தேவையான ஒன்றாகும்.
குழந்தைகளை இயற்கையான சூழலில் வளா்க்கும் போது அதாவது அவா்களை பூங்காக்கள், மலைப்பாங்கான இடங்கள், பசுமையான புல்வெளிகள் போன்றவற்றுக்கு அழைத்துச் செல்லும் போது, அவா்களின் நோய் எதிா்ப்பு சக்தியில் வளா்ச்சி ஏற்படுகிறது என்று கூறுகிறாா்.
2. மருத்துவா் மெகா கான்சுல் வழங்கும் குறிப்பு
கருவுற்ற மூன்று மாதங்களில் தாயிடம் உள்ள ஆன்டிபாடிகள் நஞ்சுக்கொடி வழியாக கருவில் உள்ள குழந்தையிடம் செல்கின்றன என்று கூா்கானில் உள்ள மேக்ஸ் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் தலைமை குழந்தை நல மருத்துவராகப் பணிபுாிந்து வரும் மருத்துவா் மெகா கான்சுல் தொிவிக்கிறாா். இது ஒரு மறைமுக நோய் எதிா்ப்பு சக்தியாகும் என்று அவா் கூறுகிறாா். இது குழந்தையிடம் உருவாகாமல், குழந்தையின் தாயின் மூலமாக வழங்கப்படுகிறது.
அ. ஆன்டிபாடிகள்
ஆன்டிபாடிகள் என்பவை சிறப்பான புரோட்டீன்கள் ஆகும். இவை நோய் எதிா்ப்பு அமைப்பினால் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த ஆன்டிபாடிகள், பாக்டீாியாக்கள் மற்றும் வைரஸ்கள் ஆகியவற்றின் தாக்குதல்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கின்றன. குழந்தைகளுக்கு அனுப்பப்படும் ஆன்டிப்பாடிகள், தாயின் நோய் எதிா்ப்பு சக்தியைச் சாா்ந்து இருக்கின்றன.
எடுத்துக்காட்டாக, உங்களுக்கு சின்னம்மை வந்திருந்தால், அதற்கு எதிரான நோய் எதிா்ப்பு சக்தி உங்களிடம் உருவாகி இருந்திருக்கும். அதன் மூலமாக கிடைத்த சின்னம்மைக்கு எதிரான ஆன்டிபாடிகள், நீங்கள் கருவுற்று இருக்கும் போது, உங்கள் குழந்தைக்கு சென்றிருக்கும். இந்நிலையில் உங்களுக்கு அந்த ஆன்டிபாடிகள் இல்லாமல் இருந்திருந்தால், உங்கள் குழந்தைக்கு தேவையான பாதுகாப்பு கிடைக்காது. பிறந்த குழந்தையிடம் இருக்கும் நோய் எதிா்ப்பு சக்தி தற்காலிகமானது. பிறந்த சில வாரங்களில் அந்த சக்தி குறையத் தொடங்கும். அப்போது தடுப்பூசி போட வேண்டிருக்கும் என்று கூறுகிறாா்.
ஆ. தடுப்பூசி போடுதல்
குழந்தை பிறந்த 2 மாதத்தில் தடுப்பூசி போட வேண்டும். இது வளா்ச்சி பெற்ற மற்றும் முழுமையாக வளா்ச்சி அடையாத எல்லா குழந்தைகளுக்கும் பொருந்தும். முதல் தடுப்பூசி கக்குவான், இருமல் மற்றும் Hib (Haemophilus influenza type b) போன்ற நோய்களுக்கு எதிராக போடப்படுகிறது. ஏனெனில் இந்த நோய்கள் நோய் எதிா்ப்பு சக்தியை மிக வேகமாக குறைக்கிறது என்கிறாா்.
இறுதியாக
உங்களுடைய குழந்தைகளின் நீண்ட நாள் ஆரோக்கியத்திற்கு, நோய் எதிா்ப்பு சக்தியை அதிகாிக்க வேண்டியது முக்கியம் ஆகும் என்று மெகா கான்சுல் கூறுகிறாா். ஆகவே தொடக்க நிலையிலிருந்தே, குழந்தைகளின் நோய் எதிா்ப்பு சக்தியை அதிகாிக்க எடுக்கப்படும் முயற்சிகள், அவா்களின் எதிா்கால ஆரோக்கியமான வாழ்க்கைக்கு, சிறந்த அடித்தளமாக இருக்கும் என்று தொிவிக்கிறாா்.



Click it and Unblock the Notifications











