உலகின் பணக்கார பிச்சைக்காரர் இந்தியாவில்தான் இருக்கிறார்... அவரோட சொத்து மதிப்பு தெரிஞ்சா மயக்கமே வந்துரும்...

பொதுவாக பிச்சைகாரர்கள் என்றால் பரிதாபத்துக்கு உரியவர்கள் என்று கருதப்படுகிறார்கள். பொதுவாக பிச்சைக்காரர்கள் என்றால் தங்களின் வாழ்வாதாரத்திற்காக மற்றவர்களை சார்ந்திருப்பவர்கள் என்று அறியப்படுகிறார்கள். ஆனால் மும்பையை சேர்ந்த ஒரு பிச்சைக்காரரான பாரத் ஜெயின் இந்த கருத்தை தலைகீழாக மாற்றியுள்ளார்.

அவர் இந்தியாவின் மட்டுமல்ல உலகிலேயே மிகவும் வசதியான பிச்சைக்காரராக அறியப்படுகிறார். பிரபல நாளிதழின் அறிக்கையின் படி, அவர் மிடில் கிளாஸ் மக்களால் நினைத்துக் கூட பார்க்க முடியாத செல்வத்தை உருவாக்கியுள்ளார். அவர் கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துக்களுக்கு அதிபதியாக இருக்கிறார் மற்றும் இந்தியாவின் பல நன்கு படித்த நிபுணர்களை விட அதிக பணம் சம்பாதிக்கிறார். அவரது வாழ்க்கை பிச்சைக்காரர்கள் பற்றிய பொதுவான கண்ணோட்டத்தை முற்றிலும் மாற்றியுள்ளது.

World s Richest Beggar Owns Flats Worth Rs 1 4 Crore

உலகின் பணக்கார பிச்சைக்காரர்

"உலகின் பணக்கார" பிச்சைக்கார் என்று அழைக்கப்படும் பாரத் ஜெயின், சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ் (CSMT) மற்றும் ஆசாத் மைதானம் உள்ளிட்ட மும்பையைச் சுற்றியுள்ள நெரிசலான இடங்களில் அடிக்கடி காணப்படுகிறார். அவர் இப்போது பல அசையா சொத்துக்களையும், இந்தியாவின் பல மாத சம்பளம் வாங்கும் மக்களின் வருமானத்தையும் விட அதிகமாக கிட்டதட்ட ரூ.7.5 கோடி மதிப்புள்ள சொத்துக்களுக்கு உரிமையாளராக உள்ளார்.

பாரத் ஜெயினின் மாத சம்பளம்

பாரத் ஜெயின் ஆரம்ப காலத்தில் கடுமையான வறுமையை எதிர்த்துப் போராடினார், இது அவரை முறையான கல்வியைப் பெற முடியாமல் தடுத்தது, ஆனால் அந்த தடைகள் அவரது முயற்சிகளையும், முன்னேற்றத்தையும் தடுக்க அவர் அனுமதிக்கவில்லை. மன உறுதியுடன், அவர் தனக்கென ஒரு வாழ்க்கையை மட்டுமல்ல, தனது குடும்பத்திற்கும் ஒரு ஆடம்பரமான வாழ்க்கையை அமைத்துக் கொடுத்துள்ளார்.

அவர் திருமணம் செய்துகொண்டு இரண்டு மகன்களை பெற்றார், அவர்கள் இருவரும் நன்கு படித்தவர்கள். எகனாமிக் டைம்ஸ் படி, பாரத் ரூ 7.5 கோடி சொத்து மதிப்புடையவர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது, அவர் மாதத்திற்கு ரூ.60,000 முதல் ரூ.75,000 வரை வருவாய் ஈட்டுகிறார், இது இந்தியாவின் பெரும்பாலான பொறியாளர்கள் மற்றும் மற்ற தொழில் வல்லுநர்கள் சம்பாதிப்பதை விட அதிகமாகும்.

பிச்சை எடுப்பதை எப்படி தொழிலாக தேர்ந்தெடுத்தார்?

நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக, பாரத் ஜெயின் தனது முக்கிய தொழிலாக பிச்சை எடுப்பதையே தேர்ந்தெடுத்து வருகிறார். அவர் பிச்சை எடுக்கும் இடம் மற்றும் வழிப்போக்கர்களின் நல்லெண்ணத்தைப் பொறுத்து அவரது சராசரி தினசரி வருவாய் மாறுபடும். அவர் பெரும்பாலும் தினமும் சராசரியாக ரூ.2,000 முதல் ரூ.2,500 வரை சம்பாதிப்பதாக அறிக்கை மேலும் குறிப்பிடுகிறது. ஜெயின் வழக்கமாக ஒரு நாளைக்கு 10 முதல் 12 மணி நேரம் வரை எந்த இடைவேளையும் இல்லாமல் சீரான முறையில் வேலை செய்கிறார், இதன்மூலம் மாதம் ரூ.60,000 முதல் ரூ.75,000 வரை ஒப்பீட்டளவில் நிலையான வருமானத்தை ஈட்ட முடிகிறது. இந்த விசித்திரமான தொழிலில் அவர் தொடர்ந்து ஈட்டிய வருமானம் அவருக்கு ஒப்பீட்டளவில் ஆறுதலை அளித்துள்ளது.

பாரத் ஜெயினின் சொத்துக்கள்

பிச்சை எடுப்பதன் மூலம் கிடைக்கும் வருமானத்திற்கு மேலாக, பாரத் ஜெயின் சில பயனுள்ள முதலீடுகளை மேற்கொண்டுள்ளார். மும்பையில் அவருக்கு இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன, அவற்றின் மதிப்பு கிட்டத்தட்ட ரூ.1.4 கோடி. தானேயில் உள்ள அவரது இரண்டு கடைகளிலிருந்து மாத வாடகையாக ரூ.30,000 கிடைக்கிறது.

மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் மற்றும் ஆசாத் மைதானம் போன்ற அதிக போக்குவரத்து மற்றும் பரபரப்பான இடங்களில் பாரத் ஜெயின் பெரும்பாலும் பிச்சை எடுப்பதைக் காணலாம், ஒரு கோடீஸ்வரர் பிச்சையெடுப்பதை பெரும்பாலான மக்கள் ஆச்சரியமாக பார்க்கிறார்கள்.

Story first published: Tuesday, June 24, 2025, 16:35 [IST]
Desktop Bottom Promotion