Latest Updates
-
குப்பையை பணம் கொடுத்து இறக்குமதி செய்யும் வினோத நாடு - எந்த நாடு? ஏன் இப்படி செய்கிறது தெரியுமா? -
ஆகஸ்ட் இறுதியில் நடக்கும் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம்: இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
செப்டம்பரில் சுக்கிரன் துலாம் ராசிக்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் யார் தெரியுமா? -
கொத்தவரங்காயை இந்த பக்குவத்தில் பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
மஷ்ரூம் செட்டிநாடு மசாலா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - காரசாரமா சூப்பர் சைடிஷா இருக்கும் -
இதய நோய் வரக்கூடாதா? அப்ப அமெரிக்க டாக்டர் சொல்ற இந்த 5 பழக்கங்களை வெச்சுக்கோங்க.. -
கடல் நீர் முழுவதும் குடிநீராக மாறினால் உலகில் என்னென்ன மாற்றங்கள் நடக்கும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் வரை இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
தக்காளி தோசையும், உடுப்பி வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 18 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்குமாம்
இறந்தவர்களின் நகைகள் மற்றும் உடைகளை அணிவதில் உள்ள ஆபத்து என்ன? கருட புராணம் சொல்லும் எச்சரிக்கை என்ன தெரியுமா?
மரணம் ஒரு மறுக்க முடியாத உண்மை. இவ்வுலகில் பிறந்த அனைவருமே ஒரு நாள் இறந்துதான் ஆக வேண்டும். இந்த பூமியில் வாழ்க்கைப் பயணத்தை முடித்த பிறகு, உயிர் உடலை விட்டு வெளியேற வேண்டும். மரணத்திற்குப் பிறகு இறந்தவரின் நினைவுகளும், அவர்களுடன் தொடர்புடைய விஷயங்களும் மட்டுமே நம்மிடையே இருக்கும். நாம் விரும்பும் ஒருவர் இறந்தால், அவர்களின் நினைவாக அவர்களின் உடைமைகளை நம்மிடம் வைத்திருக்கிறோம். அது உபயோகப்படுத்தக் கூடிய பொருளாக இருந்தால் அதனை நாம் பயன்படுத்துகிறோம்.

இறந்தவர்களின் பொருட்களை பயன்படுத்துவது சரியா? ஜோதிடத்தில் இப்படி சில விஷயங்கள் சொல்லப்பட்டிருக்கிறது. இறந்தவரின் நகைகளையோ, ஆடைகளையோ அணியக்கூடாது என்று கூறப்படுகிறது. ஒருவர் இறந்தவுடன் அவருடைய பொருள்களை என்ன செய்வது? இறந்தவர்களின் பொருட்களை தொடர்ந்து உபயோகிக்கலாமா என்பதை மேற்கொண்டு மேற்கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
இறந்தவர்களின் நகைகளை அணியலாமா?
ஜோதிடரீதியாக தங்கம் சூரியனுடன் தொடர்புடையது. சூரியன் ஒரு ஆற்றல்மிக்க கிரகமாகக் கருதப்படுகிறது, அதைச் சுற்றி அனைத்து கிரகங்களும் சுழலும். இறந்தவரின் ஆபரணங்களை அணிவது சூரியனின் சக்தியின் எதிர்மறையான விளைவுகளை உயிருடன் இருப்பவர்களின் வாழ்க்கையில் ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
இறந்தவரின் தங்க நகைகளை அணியும் போது, உங்கள் உடல் எதிர்மறை ஆற்றலை சந்திக்கலாம். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் ஜாதகத்தில் சூரியனின் நிலை பலவீனமடையத் தொடங்குகிறது. சூரியனின் பலவீனமான நிலை காரணமாக, உங்கள் உடல்நலம் மற்றும் நிதி நிலை உட்பட அனைத்திலும் பின்னடைவு ஏற்படும்.
இறந்தவர்களின் நகைகளை அணிவதால் ஏற்படும் விளைவுகள்?
இறந்தவரின் நகைகளை யாராவது அணிந்தால், அது உடலின் ஆற்றலை எதிர்மறையாக பாதிக்கத் தொடங்கும் என்று நம்பப்படுகிறது. இறந்தவரின் தங்க ஆபரணங்களை அணியும்போது அவர்களின் ஜாதகத்தில் சூரியன் பலவீனமடையத் தொடங்குகிறது மற்றும் அதன் எதிர்மறை விளைவுகள் வாழ்க்கையில் வெளிப்படத் தொடங்குகின்றன.
இதற்கு முக்கிய காரணம், தங்கம் சூரியனின் உலோகம், மற்றும் ஒரு நபரின் நகைகளின் சூரிய ஆற்றல் அவர்கள் இறந்த பிறகு குறைகிறது. உயிருள்ள ஒருவர் அந்த ஆபரணங்களை அணிந்தால், இந்த ஆபரணத்தின் பல தீய விளைவுகள் அவர்களின் வாழ்க்கையில் தோன்ற ஆரம்பிக்கின்றன. இறந்தவரின் நகைகளை அணிவது உங்கள் வேலையை எதிர்மறையாக பாதிக்கும் மற்றும் வியாபாரத்தில் நஷ்டத்தை ஏற்படுத்தும்.
இறந்தவர்களின் ஆடையை அணியலாமா?
கருட புராணத்தின் படி இறந்தவர்களின் ஆடைகளை தெரியாமல் கூட அணியக்கூடாது. இறந்தவர்களின் ஆடைகளும் ஆன்மாக்களை ஈர்க்கக்கூடும். குறிப்பாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இறந்தவர்களின் ஆடையை அணியும் போது அவர்கள் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும். இறந்தவர்களுக்கும் அவர்களுக்கு பிடித்தமான ஆடைகளுக்கும் இடையே ஒரு பிணைப்பு இருக்கும். இதனை உடைப்பது மிகவும் கடினமாகும்.
கருடப் புராணம் கூறுவது என்ன?
உயிருடன் இருப்பவர் இறந்தவரின் நகைகளையோ அல்லது வேறு ஏதேனும் பொருளையோ பயன்படுத்தினால் அவர்களின் ஆத்மா சாந்தி அடையாது என்று கருட புராணம் கூறுகிறது. இதைச் செய்வதன் மூலம், இறந்தவரின் ஆன்மா எப்போதும் உங்கள் அருகில் இருக்கும். அவர்களால் முக்தி அடைய முடியாது.
இறந்தவர்களின் ஆன்மாவின் ஈர்ப்பு எப்போதும் உயிருடன் இருக்கும் மேலும் பித்ரு தோஷத்தையும் உண்டாக்கும். அதனால்தான் இறந்தவரின் விருப்பமான பொருட்களை, குறிப்பாக நகைகள் மற்றும் ஆடைகளைப் பயன்படுத்துவது தீங்கு விளைவிக்கும் என்று கருதப்படுகிறது. ஆனால் இறந்தவரின் நினைவாக அவர்களின் நகைகளை வைத்துக்கொள்ளலாம், ஆனால் அதை உடலில் அணியக்கூடாது.
எப்படி அணிய வேண்டும்?
இறந்தவரின் நகைகளைப் பயன்படுத்த விரும்பினால், அதை சுத்தம் செய்த பிறகு அணியலாம். தங்க நகைகளை சுத்தம் செய்ய கங்கை நீரில் 24 மணி நேரம் ஊற வைக்கலாம். சில மந்திரங்களைப் பயன்படுத்தி அவற்றை தீங்கற்றதாக மாற்றலாம். இதைச் செய்த பிறகு, இறந்தவரின் நகைகளைப் பயன்படுத்தலாம். இந்த பரிகாரம் இறந்தவரின் ஆன்மாவுக்கு நகைகள் மீதான பற்றையும் முடிவுக்குக் கொண்டுவருகிறது.
நீங்கள் இறந்தவரின் நகைகளை அணிய விரும்பினால், சுத்திகரிக்கப்பட்ட பிறகும், நகைகளை நேரடியாக உடலில் அணிய வேண்டாம். சுத்திகரிக்கப்பட்ட பிறகு சில நாட்களுக்கு மஞ்சள் நூலால் கட்ட வேண்டும். மஞ்சள் நூலால் கட்டி 21 நாட்களுக்குப் பிறகு அணியலாம்.



Click it and Unblock the Notifications
