அணுகுண்டு சோதனையில் ஏன் வெங்காயமும், உருளைக்கிழங்கும் பயன்படுத்தப்படுகிறது தெரியுமா?

தற்போது தொழில்நுட்பம் வளர்ந்துள்ள உலகில் மிகவும் ஆபத்தான ஆயுதம் என்றால் அது அணுகுண்டுதான். இரண்டாம் உலகப்போரின் போது அமெரிக்காவில் ஜப்பானில் வீசப்பட்ட அணுகுண்டு ஏற்படுத்திய பேரழிவுகள் வரலாற்றின் மறக்க முடியாத துயரச் சம்பவமாகும். ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகியில் வெடித்த அணுகுண்டுகள் இலட்சக்கணக்கான மக்களின் உயிரைப் பறித்தது, மேலும் இந்த அணுகுண்டு வெடிப்பால் ஏற்பட்ட பாதிப்புகள் இன்றும் தொடர்கிறது.

அதிர்ஷ்டவசமாக உலகில் ஒன்பது நாடுகளிடம் மட்டுமே அணுகுண்டு உள்ளது மற்றும் அந்த சக்திவாய்ந்த நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது. அணுகுண்டு மற்றும் அதன் சோதனை பற்றிய பல சுவாரஸ்யமான உண்மைகளை நாம் செய்திகள் மூலமாகவும், திரைப்படங்கள் மூலமாகவும் தெரிந்து வைத்திருக்கிறோம், ஆனால் வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு அணுகுண்டு சோதனைகளில் முக்கியப்பங்கு வகிக்கின்றன என்பதை நீங்கள் எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

Why Onions and Potatoes Are Used in Nuclear Bomb Testing in Tamil
Photo Credit:

பொக்ரானில் இந்தியா நடத்திய அணுகுண்டு சோதனையில், நம் நாடு பல டன் வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கை பயன்படுத்தியதாக தகவல்கள் கூறுகின்றன. இந்தியாவின் முன்மாதிரியைப் பின்பற்றி, மற்ற நாடுகளும் தங்கள் அணுகுண்டு சோதனைகளில் வெங்காயம் மற்றும் தக்காளியைப் பயன்படுத்தியுள்ளன.

அணுகுண்டு சோதனையில் வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது மற்றும் ஏன் பயன்படுத்தப்படுகிறது என்பது சுவாரஸ்யமான தலைப்பாக இருக்கலாம். அணுகுண்டு சோதனையில் வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு பயன்படுத்தப்படுவது பற்றிய அனைத்து தகவல்களையும் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

அணுகுண்டு சோதனையில் வெங்காயத்தின் பங்கு

வெங்காயம் அணு குண்டு சோதனையில் கதிர்வீச்சின் அளவைக் குறைக்கப் பயன்படுகிறது. அணு வெடிப்பு ஆல்பா, பீட்டா மற்றும் காமா கதிர்களை வெளியிடுகிறது, அதிர்ஷ்டவசமாக வெங்காயத்திற்கு இந்த கதிர்வீச்சுகளை உறிஞ்சும் திறன் உள்ளது, இதற்காக மில்லியன் கணக்கான டன் வெங்காயம் அணு சோதனை தளத்தில் புதைக்கப்படுகிறது. அணுகுண்டு வெடிப்பின் போது, கதிர்வீச்சைக் கட்டுப்படுத்துவது மிகவும் முக்கியம், ஏனென்றால் கதிர்வீச்சு மனிதர்களுடன் தொடர்பு கொண்டால், இரத்த திசுக்கள் உடனடியாக அழிந்துவிடும்.

கதிர்வீச்சால் பாதிக்கப்படும் உயிரணுக்களை வெங்காய சாற்றின் மூலம் மேம்படுத்த முடியும் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஃபிளாவனாய்டுகள் மற்றும் ஃபீனாலிக் அமிலங்களால் நிரப்பப்பட்ட வெங்காயம் இயற்கையாகவே ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் ஆன்டி-ஜெனோடாக்ஸிக் பண்புகளைக் கொண்டுள்ளது.

Why Onions and Potatoes Are Used in Nuclear Bomb Testing in Tamil
Photo Credit:

வெங்காயத்தின் பிற நன்மைகள்

அணுகுண்டு சோதனைகளில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சின் விளைவுகளை ஆய்வு செய்ய வெங்காய வேர்கள் பயன்படுத்தப்படுவதாக வேறுசில ஆய்வுகள் கூறுகின்றன. வெங்காயம் சேமித்து வைத்திருக்கும் போது வெளிப்படும் காமா கதிர்வீச்சின் அளவைக் கூட குறிக்கும். மேலும், பாபா அணு ஆராய்ச்சி மையம் (BARC) கதிர்வீச்சு மற்றும் குளிர் சேமிப்பு ஆகியவற்றைப் பயன்படுத்தி வெங்காயத்தின் ஆயுளை அதிகரிக்க புதிய நுட்பத்தை கண்டுபிடித்துள்ளது.

அணு சோதனையில் உருளைக்கிழங்கின் பங்கு

உருளைக்கிழங்கும், கதிர்வீச்சின் விளைவுகளை குறைக்க அணுகுண்டு சோதனையில் பயன்படுத்தப்படுகின்றன. மேலும், அணுகுண்டு வெடிப்புகளால் பாதி அழியக்கூடிய உணவுகள் எவ்வாறு பாதிக்கப்படுகின்றன என்பதைப் பார்க்க உருளைக்கிழங்கு பயன்படுத்தப்படுகிறது. சமீபத்திய அறிவியல் சாதனையில், டென்னசி பல்கலைக்கழகத்தின் தாவர அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் உருளைக்கிழங்கை ஊறவைப்பதின் நன்மைகளைக் கண்டறிந்துள்ளனர், இது காமா கதிர்வீச்சு மூலம் ஏற்படும் ஆபத்தான விளைவுகளிலிருந்து மக்களைப் பாதுகாக்க உதவும் என்று கண்டறிந்துள்ளது.

Desktop Bottom Promotion