Latest Updates
-
அடுத்தமுறை சிக்கன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு குழம்பு வையுங்க.. இட்லிக்கு டக்கரா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 14 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பணமழை கொட்டப்போகுதாம் -
ஜூன் 15-ல் உருவாகும் புதாதித்ய யோகத்தால் ராஜவாழ்க்கை வாழப்போகும் 3 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
நாட்டுக்கோழி வாங்குனா கர்நாடகா ஸ்டைலில் இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - சுருக்குனு வேற லெவலில் இருக்கும் -
இந்த வாரம் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா? இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் காத்திருக்காம் -
200 பேர் மட்டுமே வாழும் இந்தியாவின் தனித்துவமான 8 கிராமங்கள் - இந்த கிராமங்களுக்கு போறதே ரொம்ப கஷ்டமாம் -
1 கப் அவல் இருந்தா ஈவ்னிங் டைம்ல இந்த பக்கோடாவை செஞ்சு பாருங்க - மொறுமொறுனு சூப்பரா இருக்கும் -
சாணக்கிய நீதி படி இந்த 6 குணங்களில் ஒன்று உங்களுக்கு இருந்தாலும் உங்களுக்கு ஆயுள் ரொம்ப கம்மியாம் - ஜாக்கிரதை -
உருளைக்கிழங்கை இந்த மாதிரி கல்யாண வீட்டு ஸ்டைல் பால் கறி செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
ஜூன் 28-ல் நிகழும் குரு-செவ்வாய் சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
சிங்கங்கள் ஏன் மனிதர்கள் சஃபாரி வாகனத்தில் இருக்கும்போது தாக்குவதில்லை தெரியுமா? அதன் ரகசியம் இதுதான்...!
காட்டிலேயே மிகவும் வலிமையான மிருகம் எதுவென்றால அனைவரும் சிங்கம் என்று ஒரே பதிலைத்தான் கூறுவார்கள். ஏனெனில் சிங்கம்தான் காட்டின் ராஜா என்ற கருத்து மக்களிடையே ஆழமாக வேரூன்றியுள்ளது. சிங்கத்தின் கம்பீரமான உருவமும், ஆற்றலும் இந்த கருத்தை வலுவாக ஆதரிக்கின்றன. சிங்கங்கள் பொதுவாக காரணம் இல்லாமல் யாரையும் தாக்காது, அதனால்தான் சிங்கங்கள் மற்ற மிருகங்களுடன் ஒன்றாக இருப்பதை வீடியோக்களில் பார்த்திருப்போம்.
சிங்கங்கள் தேவையில்லாமல் தாக்காது என்பது உண்மையாக இருந்தாலும், அவை மனிதர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். பொதுவாக சிங்கங்கள் மனிதர்களைப் பார்க்கும்போது, அவர்கள் அச்சுறுத்தப்படுவதாக உணரலாம், குறிப்பாக அவர்கள் பயத்தில் ஓடத் தொடங்கினால், அவை அச்சுறுத்தப்படுவதாக உணரலாம். மேலும் சிங்கங்கள் தங்கள் குட்டிகளுடன் அல்லது இரவில் அதிக ஆக்ரோஷத்துடன் இருக்கும்.

சிங்கங்கள் ஏன் மனிதர்களை தாக்குகின்றன?
சிங்கத்தைத் தூண்டுவது என்பது தற்கொலைக்குச் சமம். ஏனெனில் அது தற்காப்பு முயற்சியில் தாக்கக்கூடும். காட்டின் ராஜாவான அதன் அருகில் செல்வதே அதைத் திடுக்கிடச் செய்ய போதுமானதாக இருக்கும், எனவே அதன் பிரதேசத்தைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தை அது உணரலாம்.. அதனால் உங்களை தாக்க முற்படலாம்.
பொதுவாக, சிங்கங்கள் மனிதர்களை இரையாகப் பார்ப்பதில்லை. ஆனால் அவற்றின் எதிர்வினை மனிதர்களின் நடத்தையால் பெரிதும் பாதிக்கப்படலாம். ஒரு மனிதன் தனியாக நடந்து அல்லது ஓடினால், பாதிக்கப்படக்கூடிய நிலையில் இருந்தால், இந்த வலிமையான மிருகங்கள் அதை இரையின் அறிகுறி என்று புரிந்து கொள்ளலாம். அதேசமயம் வயதான மற்றும் காயமடைந்த சிங்கங்கள் மற்ற சிங்கங்கள் போல நடந்து கொள்ளாது. அவை ஆக்ரோஷத்துடன் நடந்து கொள்ளும். எந்தவொரு சூழ்நிலையிலும், சரியான மேற்பார்வையாளர்கள் இல்லாமல் சிங்கங்கள் வசிக்கும் பகுதிகளில் இருக்கக்கூடாது.
சஃபாரி வாகனத்தில் இருக்கும்போது சிங்கங்கள் ஏன் தாக்குவதில்லை?
நீங்கள் மிருக்காட்சி சாலைகளுக்கு செல்லம் சஃபாரி வாகனத்தில் சென்று சிங்கம் போன்ற வலிமையான மிருகங்களை பார்க்க வாய்ப்பு கிடைக்கலாம். சஃபாரி வாகனத்தில் செல்லும்போத, நீங்கள் மிகவும் பாதுகாப்பாக இருப்பீர்கள். சிங்கங்கள் உங்களை தாக்குவதற்கு ஒருபோதும் முயற்சிக்காது.
இது ஏன் என்று எப்போதாவது சிந்தித்து உள்ளீர்களா? காரணம் சற்று ஆச்சரியமாக இருக்கலாம், ஏனெனில் இந்த சஃபாரி வாகனங்களில் பொருத்தப்பட்டிருக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் இதற்கு எந்த தொடர்பும் இல்லை.
சிங்கங்கள் சஃபாரி வாகனங்களை பொதுவாக பெரிய மிருகங்களாக உணர்கின்றன, எனவே அவை அவற்றைத் தாக்குவதில்லை. அதேபோல, யானைகள் போன்ற பெரிய விலங்குகளை தனியாக ஒருபோதும் தாக்குவதில்லை. சிங்கங்கள், பெரும்பாலும் காட்டின் ராஜாக்கள் என்று அழைக்கப்படுகின்றன, ஆனால் அவை வெல்ல முடியாதவை அல்ல, யானை போன்ற பெரிய மிருகங்கள் அவற்றை காயப்படுத்தலாம்.
மனிதர்களை சிங்கங்கள் பெரிய மிருகமாக கருதுவதில்லை. ஆனால் அவர்கள் காரில் இருக்கும் போது சிங்கங்கள் வெற்றி வாய்ப்புகளை எடைபோடுகின்றன. பெரிய சஃபாரி வாகனம் அவர்களால் மற்றொரு ஆபத்தான மிருகமாகவே பார்க்கப்படுகிறது. சிங்கங்கள் பொதுவாக சஃபாரி காரிலிருந்து விலகியிருக்க இதுவே காரணம்.
சிங்கத்தின் தாக்குதலிலிருந்து பாதுகாக்கும் மற்ற நடவடிக்கைகள் என்ன?
சஃபாரி வாகனங்களுடன் பழகுவதற்கு சிங்கங்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சி பெரும்பாலும் இயற்கையை பாதுகாக்கும் நிறுவனங்கள் மற்றும் அதன் பணியாளர்களால் செய்யப்படுகிறது. பின்னர், பெரிய விலங்குகள் அமைதியாக பயணிக்கும் கார்களை இயற்கையின் இயற்கையான பகுதியாக உணர்ந்து அவற்றைத் தாக்குவதில்லை.
சஃபாரியில் செல்லும்போது என்ன பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும்?
சஃபாரி வாகனம் பாதுகாப்பானதாக இருந்தாலும், சஃபாரி சுற்றுப்பயணத்தில் நீங்கள் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
எந்த சூழ்நிலையிலும் வாகனத்தில் இருந்து இறங்குவது ஆபத்தானது. மேலும், சிங்கங்கள் வாகனத்தை நெருங்கினால், அவை அச்சுறுத்தப்படலாம் என்பதால் எழுந்து நிற்கவோ அல்லது உங்கள் தலையை வெளியே நீட்டவோ கூடாது. உங்கள் வாழ்க்கையில் ஏதேனும் அசாதாரண சூழலில், நீங்கள் சிங்கத்தை காட்டில் சந்தித்தால், அமைதியாக இருங்கள் மற்றும் ஓடுவதைத் தவிர்க்கவும். மேலும், உங்கள் கைகளை உயர்த்தி, திடீர் அசைவுகள் எதையும் செய்யாமல் உங்களை பெரிதாகக் காட்ட முயற்சிக்கவும். மேலும், பயணத்திற்கு முன் உங்கள் வழிகாட்டிகள் உங்களுக்கு வழங்கும் அனைத்து பாதுகாப்பு வழிமுறைகளையும் கண்டிப்பாக பின்பற்றவும்.



Click it and Unblock the Notifications
