Latest Updates
-
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை -
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
இந்தியாவின் இந்த சமூகத்தில் பெண்கள்தான் ஆதிக்கம் செலுத்துபவர்களாம்... ஆண்கள் இங்க அடங்கிதான் போகணும்...!
நம் இந்தியா பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் பழக்கவழக்கங்கள் நிறைந்த ஒரு நாடாகும். இங்கு ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு தனித்துவமான கலாச்சாரம் உள்ளது மற்றும் திருமண சடங்குகள் உள்ளது. இதில் சில சடங்குகள் மிகவும் வினோதமானவையாக உள்ளன. மேகாலயா எப்போதுமே இந்தியாவின் மற்ற மாநிலங்களிலிருந்து தனித்துவமானதாக உள்ளது..
இந்த மாநிலம் நாட்டிலேயே மிகவும் கவர்ச்சிகரமான இயற்கை அதிசயங்கள் மற்றும் கலாச்சாரம் மற்றும் ஆர்வமுள்ள பாரம்பரியத்தின் வளமான வரலாறு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது காசி மற்றும் காரோ பழங்குடியின மக்களின் தாயகமாகவும் உள்ளது. தாய்வழி கட்டமைப்பைப் பின்பற்றும் சில பழங்குடியினரில் இவர்கள் முக்கியமானவர்கள்.

நம் நாட்டில் பெண்களின் நிலை இன்றும் பின்தங்கிய நிலையில்தான் உள்ளது. ஆனால் பெண்கள் ஆதிக்கம் செலுத்தும் கலாச்சாரம் கொண்ட சமூகங்கள் இருப்பது கேட்பதற்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கலாம்.
பெண் குழந்தைகளை கொண்டாடும் சமூகம்
கடந்த காலங்களில் இந்தியாவில் பெண் குழந்தைகள் பிறப்பது துரதிர்ஷ்டமாக பார்க்கப்பட்டது, பலரும் விருப்பமே இன்றி பெண் குழந்தைகளை ஏற்றுக்கொண்டனர். ஆனால் விதிவிலக்காக ஷில்லாங் போன்ற இந்த பழங்குடியினர் வசிக்கும் இடங்களில் ஒரு பெண் குழந்தை பிறப்பது மிகுந்த மகிழ்ச்சி மற்றும் கொண்டாட்டமான நிகழ்வாக பார்க்கப்பட்டது.
பெண்களின் சம உரிமை
காசி மற்றும் காரோ பழங்குடியின மக்களிடையே நகர்ப்புற மற்றும் கிராமப்புற குடும்பங்களில் பெண்களை நடத்துவதில் எந்த வேறுபாடும் இல்லை. அவர்களின் வீட்டைப் பார்த்தாலே, அவர்களின் கலாச்சாரத்தில் உள்ள தெளிவான வேறுபாட்டை நாம் அறிந்து கொள்ளலாம். பெண்கள் மற்றும் ஆண்கள் இருவரும் தங்கள் கடமைகள், வேலைகள் மற்றும் குறிப்பாக மதுவைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.
செல்வத்தின் பாதுகாவலராக பெண்களே இருக்கிறார்கள்
இந்த சமூகம் தாய்வழி உறவின் அடிப்படையில் செயல்படுகிறது. ஒரு தாயின் சொத்து தந்தையிடமிருந்து மகனுக்கு மாற்றப்படாமல், அவரது மகளுக்கு மாற்றப்படுகிறது. ஆண்களை விட காசி பெண்கள் அதிக உரிமைகளை அனுபவிக்கின்றனர். சமூகத்தில், குழந்தைகள் தங்கள் தாயின் குடும்பப்பெயரை ஏற்றுக்கொள்கிறார்கள்.
தாயின் சகோதரர்கள் மூதாதையர் சொத்தின் உரிமையாளராகக் கருதப்பட்டாலும், குடும்பத்தில் உள்ள இளைய மகளுக்கே சொத்துக்கள் ஒப்படைக்கப்படுகிறது. இது இங்குள்ள பெண்களுக்கு பெரிதும் அதிகாரம் அளித்துள்ளது, மேலும் நாட்டின் மற்ற பகுதிகளில் அரிதாகவே காணப்படும் முக்கியத்துவத்தையும் அவர்களுக்கு வழங்கியுள்ளது.
வாழ்க்கைத்துணையை தேர்தெடுக்கும் உரிமை
ஊடக அறிக்கைகளின்படி, இந்த சமூகங்களில் பெண்கள்தான் தங்கள் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஆனால், மாநிலத்தில் ஒரே குலத்தைச் சேர்ந்த இருவர் திருமணம் செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது. மேலும் சில பிரபலமான மரபுகளில் பெண்கள் ஆண்களுக்கு ப்ரபோஸ் செய்யும் நடைமுறையும் அடங்கும்.
ஆண்கள் மாமியார் வீட்டில் வசிக்கிறார்கள்
இந்தியாவின் மற்ற பகுதிகளைப் போல அல்லாமல், காசி பழங்குடியின ஆண்கள் வழக்கமாக திருமணத்திற்கப் பிறகு பெண் மற்றும் அவரது குடும்பத்தினரின் வீட்டிற்குச் சென்று வாழ்கின்றனர். இது இந்தியாவில் உள்ள பிற சமூகங்களுக்கு முற்றிலும் முரணானது.



Click it and Unblock the Notifications
