திருப்பதி ஏன் தமிழ்நாட்டிற்கு பதில் ஆந்திராவிடம் ஒப்படைக்கப்பட்டது? அதற்கு பின்னால் உள்ள வரலாறு என்ன தெரியுமா?

சமீப காலமாக இந்தியா முழுவதும் பரவலாக பேசப்படும் ஒரு விஷயமென்றால் அது திருப்பதி தொடர்பானதுதான். இன்டர்நெட் முழுவதும் திருப்பதி தொடர்பான வீடியோக்களும், தகவல்களுமே கொட்டிக் கிடக்கின்றன. இந்த பரபரப்பில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான விஷயம் திருப்பதி எப்படி ஆந்திர மாநிலம் வசம் சென்றது என்பதுதான். இந்த பதிவில் திருப்பதி எப்படி ஆந்திராவிடம் ஒப்படைக்கப்பட்டது, அதற்க்குப் பின்னால் நடந்த போராட்டங்கள் என்ன, மொழி அரசியல் என்னவென்று தெரிந்து கொள்ளலாம்.

திருப்பதி கோவில்

திருப்பதியில் உள்ள உலகப்புகழ் பெற்ற வெங்கடேஸ்வரர் கோவில், இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற ஆன்மீகத் தலங்களில் ஒன்றாகும். இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதுமிருந்து ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த கோவிலுக்கு வருகை தருகின்றனர். திருப்பதி கோவில் உலகின் பணக்கார கோவில்களில் ஒன்றாக அறியப்படுகிறது. கோவிலுக்கு வருகைதரும் பக்தர்கள் தங்கம், நகைகள், பணம் மற்றும் பிற விலையுயர்ந்த பொருட்களை நன்கொடையாக வழங்குகிறார்கள், அவ்வாறு செய்தால் அவர்களின் செல்வம் இரட்டிப்பாகும் என்பது நம்பிக்கை.

Why Did Tirupati Given To Andhra Pradesh Instead of Tamil Nadu in Tamil

ஏன் தமிழ்நாட்டுடன் இணையவில்லை?

பழங்கால தமிழ் கல்வெட்டுகளைக் கொண்ட இந்த புகழ்பெற்ற கோவில் ஏன் ஆந்திராவில் உள்ளது? இந்திய மக்கள் தங்கள் தாய்மொழியை அடிப்படையாகக் கொண்ட மாநிலங்களுக்காக போராடிய 1930 களிலிருந்து இந்த மாற்றத்திற்குப் பின்னால் உள்ள வரலாறு தொடங்குகிறது.

சுதந்திரத்திற்கு முந்தைய போராட்டம்

1947 ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்னரே தாய்மொழியின் அடிப்படையில் மாநிலங்கள் பிரிக்கப்பட வேண்டும் என்ற குறிக்கோளை முன்னிறுத்தி போராட்டம் தொடங்கி அதற்கான இயக்கமும் உருவாக்கப்பட்டது. 1895 ஆம் ஆண்டு ஒடிசாவில் தொடங்கப்பட்ட இந்த இயக்கம் 1936 ஆம் ஆண்டில் வெற்றி பெற்றது, இது மற்ற மொழி பேசுபவர்களை தங்கள் சொந்த மொழி அடிப்படையிலான மாநிலத்திற்காக போராட தூண்டியது.

தென்னிந்திய போராட்டங்கள்

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, இந்தியாவின் தென் பகுதி மெட்ராஸ் மாநிலம் என்று பெயரிடப்பட்டது மற்றும் பொட்டி ஸ்ரீராமுலு என்ற தெலுங்கு சுதந்திரப் போராட்ட வீரர் 1952 இல் தனது சமூகத்திற்காக தனி மாநிலம் கோரி போராடத் தொடங்கினார். அவர் 50 நாட்களுக்கு மேல் நீடித்த உண்ணாவிரதத்தை மேற்கொண்டார், இறுதியில் அந்த போராட்டத்திலேயே உயிரிழந்தார். அதே நேரத்தில், தமிழ் விடுதலைப் போராட்ட வீரர் மா.பொ.சிவஞானம் (மா.பொ.சி) சென்னை மதராஸ் மாநிலத்தின் கீழ் இருக்க வேண்டும் என்று போராடினார்.

மொழிவாரி மாநிலங்களின் உருவாக்கம்

பொட்டி ஸ்ரீராமுலுவின் மரணத்தைத் தொடர்ந்து, பெரிய கலவரம் வெடித்தது.இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு முதலில் மொழிவாரி மாநிலங்களை ஏற்றுக்கொள்ள மறுத்தாலும் இறுதியில் அந்த கோரிக்கையை ஒப்புக்கொண்டார். மெட்ராஸ் மாநிலத்தின் சில பகுதிகள் ஆந்திரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாடு எனப் பிரிக்கப்பட்டது.

மேலும் கர்நாடகா மற்றும் கேரளா போன்ற பிற மொழி அடிப்படையிலான மாநிலங்களும் அப்போது உருவாக்கப்பட்டன. ஆனால், சென்னையை ஆந்திராவில் சேர்க்க வேண்டும் என்ற பொட்டி ஸ்ரீராமுலுவின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. மாறாக, திருப்பதி கோவில் மற்றும் ஸ்ரீ காளஹஸ்தி கோவில் போன்ற புகழ்பெற்ற ஆன்மீகத் தலங்களைக் கொண்ட சித்தூர் ஆந்திர மாநிலத்தின் கீழ் வந்தது.

மாநில மறுசீரமைப்பு ஆணையத்தின் முடிவு

இந்த முடிவுக்கு தமிழ்நாட்டை சேர்ந்த தலைவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர், மேலும் ஆய்வு செய்து எல்லைகளை நிர்ணயம் செய்ய 'மாநில மறுசீரமைப்பு ஆணையம்' உருவாக்கப்பட்டது. இந்த ஆணையம் சித்தூரைச் சேர்ந்த பெரும் சமூகம் (தமிழ் அல்லது தெலுங்கு) கருதப்பட மாட்டாது என்ற அளவுகோலைக் கொண்டு வந்தது, ஆனால் மாவட்டத்தில் எந்த சமூகத்தினர் அதிக நிலம் வைத்துள்ளனர் என்பதன் அடிப்படையில் முடிவு செய்யப்படும் என்று கூறியது.

ஆணையம் திருத்தணி, வள்ளிமலை, திருவெங்காடு போன்ற இடங்களை தமிழ்நாட்டுடன் இணைத்து, மீதமுள்ள(திருப்பதி மலை உட்பட) பகுதிகளை ஆந்திராவுடன் இணைத்தது. சித்தூரில் பெரும்பான்மையான தெலுங்கு பேசும் மக்கள் இருந்ததால் இந்த முடிவெடுக்கப்பட்டதாக ஆணையம் விளக்கமளித்தது. மாநிலங்கள் மறுசீரமைப்புச் சட்டம் 1956 இல் உருவாக்கப்பட்டது, அதனால்தான் உலகப் புகழ் பெற்ற திருப்பதி கோவில் தமிழகத்திற்குப் பதில் ஆந்திராவிடம் சென்றது.

Story first published: Friday, October 4, 2024, 17:08 [IST]
Desktop Bottom Promotion