17 கோடி ஏக்கர் நிலம் வைத்துள்ள இந்தியாவின் மிகவும் சக்திவாய்ந்த தனியார் அமைப்பு எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க...

உலகம் தோன்றிய காலம் முதலே நிலத்தை கைப்பற்றுவதுதான் மனிதர்களின் மிகப்பெரிய இலட்சியமாக இருந்து வருகிறது. ஏனெனில் நிலம் ஒரு சொத்து என்பதையும் தாண்டி அது அதிகாரத்தின் அடையாளமாக இருக்கிறது. அதனால்தான் இப்போதும் தனிநபர் முதல் அரசாங்கங்கள் வரை நிலத்தை கைப்பற்றுவதில் மிகவும் ஆர்வமாக இருக்கின்றன.

நிலத்தின் பயன்பாடுகளைத் தவிர, நிலம் செல்வம், அதிகாரம் மற்றும் சமூக அந்தஸ்தை பிரதிபலிக்கிறது. எனவே, நிலம் பொருளாதாரங்கள், அரசியல் மற்றும் சமூகங்களை வடிவமைக்க முடியும். இந்தியா போன்ற மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட மற்றும் பன்முகத்தன்மை கொண்ட ஒரு தேசத்தில், அதன் பொருளாதார வளர்ச்சியிலும், பாரமபரியத்திலும், கலாச்சார மேம்பாட்டிலும் நிலம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.

Who Is the India s Biggest Land Owner After Indian Government

நிலம் நீண்ட காலமாக செல்வம் மற்றும் அதிகாரத்தின் அடையாளமாக இருந்து வருகிறது. உலகின் அனைத்து போர்களும் நிலத்தை அடிப்படையாக வைத்தே எழுந்துள்ள. மனித வளர்ச்சிக்கு நிலம் மிகவும் அவசியம், ஏனெனில் அது விவசாயம், வீட்டுவசதி, பள்ளிகள், தொழிற்சாலைகள் மற்றும் வழிபாட்டு தலங்களுக்கு இடத்தை வழங்குகிறது. இந்தியா தோராயமாக 3.29 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ள நிலத்தைக் கொண்டுள்ளது. இதில் மூன்று அமைப்புகள் மட்டுமே இந்தியாவின் பெரும்பகுதி நிலத்தை கட்டுப்படுத்துகிறது. அவை எந்தெந்த அமைப்புகள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

இந்தியாவில் அதிக நிலத்தை வைத்துள்ள அமைப்பு எது?

இந்தியாவின் பெரும்பாலான நிலங்கள் இந்திய அரசுக்கு சொந்தமானதாகும். இந்தியாவின் மிகப்பெரிய நில அமைப்பு இந்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. இரண்டாவது பெரிய நில உரிமையாளராக இந்திய கத்தோலிக்க திருச்சபை உள்ளது. பிப்ரவரி 2021 நிலவரப்படி, இந்திய ஒன்றிய அரசு தோராயமாக 15,531 சதுர கிலோமீட்டர் நிலத்தை வைத்திருப்பதாக Government Land Information System (GLIS) கூறுகிறது. இந்த நிலம் 116 பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் 51 மத்திய அமைச்சகங்களுக்கு இடையில் பிரிக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசிடம் உள்ள நிலம் எவ்வளவு பெரியது?

இந்திய அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்படும் நிலம் பல நாடுகளின் மொத்த நிலப்பரப்பை விட மிகப்பெரியது. எடுத்துக்காட்டாக, இது கத்தார் (11,586 சதுர கிமீ), பஹாமாஸ் (13,943 சதுர கிமீ), ஜமைக்கா (10,991 சதுர கிமீ), லெபனான் (10,452 சதுர கிமீ), காம்பியா (11,295 சதுர கிமீ), சைப்ரஸ் (9,251 சதுர கிமீ), புருனே (5,765 சதுர கிமீ), பஹ்ரைன் (778 சதுர கிமீ) மற்றும் சிங்கப்பூர் (726 சதுர கிமீ) ஆகியவற்றை விட அதிகமாக சொந்தமாகக் கொண்டுள்ளது. இந்தியாவில் உள்ள அமைச்சகங்களில், ரயில்வே அமைச்சகம் மிகப்பெரிய நிலப்பரப்பைக் கொண்டுள்ளது, அதைத் தொடர்ந்து பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் நிலக்கரி அமைச்சகம் ஆகியவை தோராயமாக 2926.6 சதுர கிமீ நிலத்தைக் கொண்டுள்ளன.

Who Is the India s Biggest Land Owner After Indian Government

இந்திய கத்தோலிக்க திருச்சபையிடம் உள்ள நிலத்தின் அளவு

இந்திய கத்தோலிக்க திருச்சபை நாடு முழுவதும் 7 கோடி ஹெக்டேர் (அதாவது 17.29 கோடி ஏக்கர்) நிலத்தைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நிலங்களில் தேவாலயங்கள், கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் உட்பட ஏராளமான கட்டிடங்கள் உள்ளன, மேலும் இந்த சொத்தின் மதிப்பு மட்டும் கிட்டதட்ட ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் இருக்கும். 1947 க்கு முன்பு, இந்தியாவில் கத்தோலிக்க திருச்சபை அதன் பெரும்பாலான நிலங்களை பிரிட்டிஷ் அரசாங்கத்திடமிருந்து பெற்றது. பிரிட்டிஷ் ஆட்சி காலகட்டத்தில் 1927 இல் இந்திய திருச்சபைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. கத்தோலிக்க திருச்சபை இந்தியா முழுவதும் நிலத்தை சொந்தமாகக் கொண்டுள்ளது.

யாரால் வழிநடத்தப்படுகிறது?

இந்த மாபெரும் நிலப்பரப்பு கிறிஸ்தவ மதத் தலைவரான போப் பிரான்சிஸால் வழிநடத்தப்படுகிறது. கோவாவிலிருந்து வடகிழக்கு மாநிலங்கள் வரை இந்த நிலம் பரவியுள்ளது. கத்தோலிக்க திருச்சபைatholic Bishops' Conference of India-யால் நிர்வகிக்கப்படுகிறது. 2012 ஆம் ஆண்டில், இந்தியாவில் 2457 மருத்துவமனை மருந்தகங்கள், 240 மருத்துவ அல்லது நர்சிங் கல்லூரிகள், 28 பொதுக் கல்லூரிகள், 5 பொறியியல் கல்லூரிகள், 3765 மேல்நிலைப் பள்ளிகள், 7319 தொடக்கப் பள்ளிகள் மற்றும் 3187 நர்சரி பள்ளிகள் இருந்தன, இவை அனைத்தும் இந்திய கத்தோலிக்க திருச்சபையின் கீழ் உள்ளன.

Story first published: Friday, February 13, 2026, 11:29 [IST]
Desktop Bottom Promotion