இந்த மாவட்டம்தான் இந்தியாவின் போர்க்கள நகரமாம்... இந்த பெயருக்கு பின்னால் இருக்கும் காரணம் என்ன தெரியுமா?

ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக ஆங்கிலயேர்கள் இந்தியாவை ஆட்சி செய்த பிறகு, 1857 ஆம் ஆண்டு இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் ஒரு முக்கிய தருணமாக இருந்தது. பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்திற்கு எதிரான கிளர்ச்சியால் இந்தியா முழுவதும் புரட்சி தீ எரிந்து கொண்டிருந்த சமயம் அது. இந்த எழுச்சியில் முக்கிய பங்கு வகித்த பல்வேறு பிராந்தியங்களில், ஒரு மாவட்டம் மட்டும் அதன் கடுமையான எதிர்ப்பு மற்றும் போர்தந்திர முக்கியத்துவத்திற்காக தனித்து நின்றது.

அந்த மாவட்டம் உத்தரபிரதேசத்தில் உள்ள ஃபதேபூர்தான், இந்த நகரம் சுதந்திர போராட்டத்தில் அதன் குறிப்பிடத்தக்க பங்களிப்பின் காரணமாக 'போர்க்கள நகரம்' என்று அழைக்கப்பட்டது.

Which District of Uttar Pradesh Is Called as Battlefield City in Tamil

1857 ஆம் ஆண்டின் கிளர்ச்சியின் தொடர்ச்சியாக இந்த மாவட்டத்தின் பிறப்பு ஜனவரி 4, 1858 இல் ஒரு துப்பாக்கிசூட்டுடன் தொடங்கியது. ஃபதேபூரில் உள்ள டுசோவ்லி கிராம மக்கள், அரசாங்க வருவாய் மக்களிடமிருந்து சேகரிக்கும் சப்ராசிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்தச் செயல் அப்பகுதியில் அதிகரித்து வரும் பிரிட்டிஷ் எதிர்ப்பு உணர்வுகளுக்கு ஒரு தெளிவான நிரூபணமாக இருந்தது.

இதேபோன்ற சம்பவம் ஜனவரி 10, 1858 அன்று குல்லன்பூர் தாலுகாவில் நடந்தது, அங்கு வருவாய் வசூலிக்க அனுப்பப்பட்ட சப்ராசிகள் பொதுமக்களால் சிறைபிடிக்கப்பட்டனர். அவர்கள் பிரிட்டிஷ் அரசின் சப்ராசிகள் அல்ல, ஜமீன்தாரின் ஆட்கள் என்று பின்னர் தெரிய வந்ததும் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இது ஒரு செய்தியை தெளிவாக உலகத்துக்கு உணர்த்தியது, ஃபதேபூர் மக்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஒன்றுபட்டனர் என்பதுதான் அது.

இந்த சம்பவங்கள் விதிவிலக்கானதாகக் கருதப்படவில்லை. அவை பெரிய அளவிலான புரட்சிகர நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இருந்தன, இது ஃபதேபூர் மக்களின் வழக்கமான செயலாக மாறியது. அரசாங்க வருவாயை செலுத்த மறுப்பதும், அரசாங்க ஊழியர்களைப் சிறைபிடிப்பதும் மக்களுக்கு பெரும் வெற்றிகளை அடையாளப்படுத்தியது மற்றும் இயக்கத்தின் கடுமையான தன்மையை வெளிப்படுத்தியது. அடாவடித்தனமான அரசின் கொள்கைகள் மற்றும் விதிகளை எதிர்த்து ஒருமனதாக வந்த மக்களிடையே ஒற்றுமை உணர்வு மாவட்டம் முழுவதும் பரவியது.

இந்த காலகட்டத்தில், ஃபதேபூரின் குறிப்பிடத்தக்க புரட்சியாளர்களில் ஒருவராக தாக்கூர் ஜோதா சிங் அத்தையா என்பவர் இருந்தார். 1857 ஆம் ஆண்டு கிளர்ச்சியின் போது அவர் ஒரு முக்கிய நபராக இருந்தார் மற்றும் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக போராட ஃபதேபூர் மக்களை தொடர்ந்து ஊக்குவித்தார். ஏப்ரல் 28, 1858 அன்று, ஜோதா சிங் அத்தையா மற்றும் அவரது 51 தோழர்கள் ஆங்கிலேயர்களால் புளிய மரத்தில் தூக்கிலிடப்பட்டனர், இந்த கொடூரமான செயல், சுதந்திரத்திற்கான தேடலில் ஃபதேபூர் மக்கள் செய்த தியாகத்தின் அடையாளமாக மாறியது.

அதன்பின்னர் அடுத்த நூற்றாண்டிலும், ஃபதேபூர் மீண்டும் புரட்சிகர நடவடிக்கைகளின் மையமாக மாறியது. ஆகஸ்ட் கிராந்தி என்றும் அழைக்கப்படும் வெள்ளையனே வெளியேறு இயக்கம் இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் ஒரு தவிர்க்க முடியாத பகுதியாகும். இந்த போராட்டத்திற்கு உத்தரபிரதேசத்தின் ஃபதேபூர் மாவட்டம் உட்பட நாடு முழுவதும் பரவலான பங்கேற்பு வழங்கப்பட்டது . சுதந்திரப் போராட்டத்தின் தொடக்கத்திலிருந்தே அதன் ஒரு பகுதியாக இருந்த தேசியவாதிகளின் தீவிர அமைப்பு மற்றும் அணிதிரட்டல் ஆகியவற்றால் ஃபதேபூரில் இருந்த இயக்கம் முக்கியமானதாக இருந்தது.

வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது ஃபதேபூரில் இருந்த எதிர்ப்பு உணர்வு இந்த மரபின் தொடர்ச்சியாக இருந்தது. நாடு முழுவதும் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் குறிப்பிடத்தக்க அம்சமாக இருந்த, இந்த இயக்கத்திற்கு ஃபதேபூர் மாவட்டத்தின் பங்களிப்பு முக்கியமானதாக இருந்தது, மேலும் இந்த மாவட்டத்தில் போராட்டத்தின் ஒரு பகுதியாக இணை அரசாங்கங்கள் நடத்தப்பட்டது. இந்த இணையான அரசாங்கங்கள் காலனித்துவ அதிகாரத்திற்கு எதிரான சுய-ஆட்சி மற்றும் எதிர்ப்பின் சின்னங்களாக வெளிப்பட்டன.

சுதந்திரப் போராட்டத்தில் ஃபதேபூரின் பங்கு அதன் குடிமக்களுக்கு இப்போதும் பெருமை சேர்ப்பதாக இருக்கிறது. 'போர்க்கள நகரம்' என்ற பெயர், ஃபதேபூரின் உறுதியான மனப்பான்மைக்கும், இந்திய வரலாற்றின் வரலாற்றில் அதன் பங்குக்கும் பொருத்தமான பெயராகும்.

Story first published: Saturday, June 8, 2024, 10:00 [IST]
Desktop Bottom Promotion