மூன்றாம் உலகப்போர் நடக்கும் போது எந்தெந்த நாடுகள் பாதுகாப்பாக இருக்கும் தெரியுமா? லிஸ்ட் இதோ...!

இரண்டாம் உலகப்போர் முடிந்து கிட்டத்தட்ட 80 ஆண்டுகள் முடியப்போகிறது. இந்த 80 வருடங்களில் பல்வேறு நாடுகளிடையே ஆயுத மோதல்கள் நடந்துள்ளன, ஆனால் உலகப்போர் மூளும் சூழ்நிலை இதுவரை ஏற்படவில்லை. ஆனால் தற்போது உலகம் முழுவதும் ஒரு பதட்டமான சூழல் நிலவி வருகிறது. தற்போது உலகம் இரண்டு பெரிய ஆயுத மோதல்களை எதிர்கொண்டு வருகிறது. ஒன்று மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நடைபெற்று வருகிறது, மறுபுறம் ஐரோப்பாவில், ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையில் போர் நடந்து வருகிறது.

பாபா வங்கா, நோஸ்ட்ரடாமஸ் போன்ற எதிர்காலத்தை துல்லியமாக கணித்த ஞானிகளும் மூன்றாம் உலகப்போர் நிச்சயம் நடைபெறும் என்று கணித்துள்ளனர். ஒருவேளை மூன்றாம் உலகப்போர் மூண்டால் அது அணு ஆயுதப் போராகத்தான் இருக்கும். ரஷ்யா-உக்ரைன் யுத்தம் ஆபத்தானதாக மாறியுள்ளது, ஏனெனில் ரஷ்ய ஜனாதிபதி எந்தவொரு அணுஆயுதம் உள்ள நாடு ரஷ்யாவை தாக்க உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கினால், அந்த நாட்டிற்கு பலமடங்கு தீவிரத்துடன் பதிலடி கொடுக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

Which Countries Are Safe to Live If World War III Happens in Tamil

இப்படிப்பட்ட சூழ்நிலையில், அணு ஆயுதம் போர் வெடித்தால் என்ன நிலை ஏற்படும் என்று உலகமே திகைத்து நிற்கிறது. அணு ஆயுதப் போர் தொடங்கினால் எப்படி தொடங்கும், யார் அதிகம் பாதிக்கப்படுவார்கள், யார் பாதுகாப்பாக இருப்பார்கள் போன்ற கேள்விகள் பெரும்பாலான மக்களின் மனதில் உள்ளது.

ஆய்வுகளின் படி, அணு ஆயுத யுத்தமானது கதிர்வீச்சு, வெப்பம், குண்டுவெடிப்பு விளைவுகள், வளிமண்டலத்தில் ஏற்படும் கடுமையான மாற்றங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பை சீர்குலைக்கும் அசாதாரண வானிலை போன்ற கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும். இந்த மோசமான பாதிப்புகள் மிகப்பெரிய அளவில் உலகளவில் சுமார் 7 பில்லியன் மக்கள் இறக்க வாய்ப்புள்ளது, முக்கியமாக பெரும்பாலான மக்கள் பட்டினியால் மரணமடைய வாய்ப்புள்ளது.

பிரபல இதழில் வெளியிடப்பட்ட சமீபத்திய ஆய்வின்படி, போருக்குப் பிந்தைய சூழலில் உணவு உட்கொள்ளலை ஆதரிக்கும் திறன் காரணமாக அர்ஜென்டினா, பிரேசில், உருகுவே, பராகுவே, ஆஸ்திரேலியா, ஐஸ்லாந்து மற்றும் ஓமன் உள்ளிட்ட நாடுகள் பெருமளவில் பட்டினியைத் தவிர்க்கலாம். அதேசமயம் அமெரிக்கா, கனடா, ஐரோப்பாவின் பெரும்பகுதி மற்றும் ரஷ்யா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகள் பட்டினியால் பாதிக்கப்படும் அதிக ஆபத்தில் உள்ளன.

போருக்குப் பின் பட்டினி என்பது ஒரு பெரிய கவலையாக இருக்கும், ஆனால் உடனடி அச்சுறுத்தல் குண்டுவெடிப்பிலிருந்தே தொடங்கும். குண்டு வெடிப்பின் போது ஜன்னல்கள் மற்றும் கதவுகள் இல்லாத ரகசிய அறையில் இருப்பது பாதுகாப்பானதாக இருக்கும் என்று அறிக்கை கூறுகிறது. மேலும் புவியியல்ரீதியாகவும், அரசியல்ரீதியகவும் சில நாடுகள் அணு ஆயுத போரிலிருந்து பாதுகாப்பாக இருக்கும்.

அண்டார்டிகா

அண்டார்டிகா ஒரு நாடாக இல்லாவிட்டாலும், இது பரந்த விரிந்த தென்கோடி கண்டமாகும், அதன் தீவிர தனிமை காரணமாக இந்த பட்டியலில் இடம் பெறுகிறது. மூச்சடைக்கக்கூடிய நிலப்பரப்புகள் மற்றும் பனிக்கட்டி நிலப்பரப்புகளுக்குப் புகழ் பெற்ற இந்த கண்டம், கிரகத்தின் தென்பகுதியில் உள்ளதால் அணுஆயுத தாக்குதலால் பாதிக்கப்பட வாய்ப்புக் குறைவு. ஆனால் இங்கு செல்வதே மிகவும் கடினமாகும்.

பிஜி தீவு

பரந்து விரிந்த பசிபிக் பெருங்கடலில் அமைந்திருக்கும் ஃபிஜி ஒரு தனிமைப்படுத்தப்பட்ட தீவு நாடாக விளங்குகிறது, இது குறைவான மக்கள்தொகை மற்றும் அமைதியான வெளியுறவுக் கொள்கைகளை கொண்ட நாடாக உள்ளது. இதன் புவியியல் மற்றும் அரசியல் சூழல் காரணமாக அணு ஆயுதப் போரின் அச்சுறுத்தல்களிலிருந்து வெகு தொலைவில் உள்ளது.

ஐஸ்லாந்து

இந்த நாடு உலக அமைதி குறியீட்டின் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது, இது ஐஸ்லாந்தை ஒரு தனிமையான மற்றும் சிறந்த நாடாக மாற்றுகிறது. ஏராளமான புதிய நீர் இருப்புக்கள், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் கடல் வளங்கள் ஆகியவற்றால் ஐஸ்லாந்து தன்னிறைவு பெற்ற நாடாக உள்ளது. எனவே போருக்குப் பின் அத்தியாவசிய வளங்களுக்காக மற்ற நாடுகளைச் சார்ந்திருக்க வேண்டிய அவசியம் இந்த நாட்டுக்கு இல்லை.

இவை மட்டுமின்றி கிரீன்லாந்து, நியூசிலாந்து, துவாலு, பூடான், இந்தோனேசியா, சுவிட்சர்லாந்து மற்றும் அயர்லாந்து போன்ற நாடுகளும் அணுஆயுத போரால் பாதிக்கப்படாமல் இருக்கலாம்.

Story first published: Wednesday, November 27, 2024, 12:49 [IST]
Desktop Bottom Promotion