மனித இனம் அழிந்த பிறகு பூமியை ஆளப்போவது எந்த உயிரினம் தெரியுமா? அடக்கொடுமையே இதுவா பூமியை ஆளப்போகுது...!

பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் டைனோசர்கள் பூமியின் ஆதிக்கம் செலுத்தும் உயிரினமாக இருந்ததாக கூறப்படுகிறது. காலப்போக்கில் பூமி பரிணாம வளர்ச்சிக்கு உள்ளாகி டைனோசர்கள் அழிந்து பல்வேறு உயிரினங்கள் தோன்றின. மனித இனம் தோன்றிய பிறகு அவர்களே பூமியில் ஆதிக்கம் செலுத்தும் உயிரினமாக மாறினார்கள்.

இந்த மாற்றமும் நிரந்தரமானதல்ல, டைனோசர்கள் அழிந்தது போல இன்னும் சில லட்ச வருடங்களுக்கு பின்னர் மனித இனமும் முடிவுக்கு வரலாம். மனிதர்கள் முற்றிலுமாக இல்லாத ஒரு கிரகத்தை நீங்கள் எப்போதாவது கற்பனை செய்திருக்கிறீர்களா? இந்த யோசனை புதிரானது மற்றும் அமைதியற்றது. இதுபோன்ற கற்பனையை நாம் பல ஹாலிவுட் படங்களில் பார்த்திருப்போம்.

Which Animal Will Rule Earth After Humans in Tamil

மனிதர்கள் இல்லாதபோது பூமி தொடர்ந்து செயல்பட முடியுமா? ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் இந்த விஷயத்தைப் பற்றி ஆராய்ந்துள்ளனர். இயற்கையானது சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை தகவமைத்துக் கொண்டு புதிய உயிரினங்கள் ஆதிக்கம் செலுத்தும் எதிர்காலத்தைப் பற்றிய ஒரு பார்வையை அவர்களின் சிந்தனைகள் வழங்குகின்றன.

பூமியின் எதிர்காலம்

மனிதர்கள் உட்பட பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களும் பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது என்பது நாம் அறிந்ததே. ஆராச்சியாளர்களின் கூற்றுப்படி, இது படிப்படியான மாற்றத்தின் செயல்முறையாகும். "பெரும்பாலான பரிணாம வளர்ச்சிகள் தீங்கு விளைவிக்கும், ஆனால் ஒரு சில ஒரு நன்மையை வழங்குகின்றன," என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த நன்மை பயக்கும் பிறழ்வுகள் வாழ்க்கையை தகவமைத்து பரிணமிக்க அனுமதிக்கின்றன. ஆனால் எந்த இனமும் நிரந்தரமானது அல்ல என்பதை மறந்து விடக்கூடாது.

"அனைத்து உயிரினங்களின் தலைவிதியும் அழிவுதான்" என்று கூறப்படுகிறது. "மனித இனத்தின் அழிவு வெகு தொலைவில் இருக்கும் என்று நம்புவோம்" என்று அவர்கள் கூறியுள்ளனர். இயற்கையின் சுழற்சியைப் பற்றிய இந்தப் பார்வை, பூமியின் வரலாற்றில் மனிதகுலத்தின் பங்கைப் பற்றிய சிந்தனையைத் தூண்டுகிறது, அதே நேரத்தில் மனித இனத்தின் அழிவிற்குப் பிறகு எந்த உயிரினம் ஆதிக்கம் செலுத்தும் என்ற ஆர்வத்தையும் தூண்டுகிறது.

Which Animal Will Rule Earth After Humans in Tamil

பூமியை ஆளப்போகும் அடுத்த உயிரினம்

ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, மனிதர்களுக்குப் பிறகு, பூமி ஒரு புதிய வகையான பரிணாம வளர்ச்சியைக் காணக்கூடும். ஆக்டோபஸ்கள் அதிக ஆதிக்கம் செலுத்தும் பாத்திரத்தை வகிக்கும் ஒரு வலுவான வாய்ப்பு உள்ளது. அவற்றின் புத்திசாலித்தனம், தகவமைப்புத் திறன் மற்றும் சிக்கலைத் தீர்க்கும் திறன்கள் அவற்றை ஒரு ஆதிக்கம் செலுத்துபவராக மாற்றுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

ஆக்டோபஸ்கள் ஏற்கனவே இதுகுறித்த குறிப்பிடத்தக்க திறன்களைக் காட்டியுள்ளன, கருவிகளைப் பயன்படுத்துதல் மற்றும் தொட்டிகளிலிருந்து தப்பித்தல் போன்ற வீடியோக்களை நாம் பார்த்திருப்போம். "அவை நாகரிகத்தை உருவாக்கும் இனமாக பரிணமிக்கக்கூடும்" என்று ஆரய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அவற்றின் மேம்பட்ட நரம்பியல் அமைப்பு மற்றும் சக்திவாய்ந்த நரம்பு மண்டலம் இந்த யோசனையை ஆதரிக்கின்றன.

இருப்பினும், ஆக்டோபஸ்கள் நிலத்தில் வாழ முடியாத ஒரு சவாலை எதிர்கொள்கின்றன. ஆனால் " காலப்போக்கில் பரிணாம வளர்ச்சியுடன், அவை தண்ணீருக்கு வெளியே சுவாசிக்கும் வழிகளை உருவாக்கக்கூடும்" என்று ஆராய்ச்சியாளர் கூறியுள்ளனர். இந்த பரிணாம மாற்றங்கள் எதிர்காலத்தில் ஆக்டோபஸ்கள் நிலப்பரப்பு விலங்குகளை வேட்டையாட வழிவகுக்கும்.

"பூமியில் மனிதர்களின் எதிர்காலம் எண்ணற்ற காரணங்களால் வடிவமைக்கப்படுகிறது," என்று ஆய்வுகள் கூறுகிறது. இந்த எதிர்பாராத திருப்பங்கள் பூமியில் எதிர்காலத்தை கணிப்பதை சாத்தியமற்றதாக மாற்றியுள்ளது.

Story first published: Saturday, January 18, 2025, 12:08 [IST]
Desktop Bottom Promotion