Latest Updates
-
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது...
விஜய் ரூபானி போல விமான விபத்தில் இறந்த இந்திய அரசியல் தலைவர்களின் பட்டியல்... இவ்வளவு பேர் இறந்துள்ளார்களா?
Ahmedabad Plane Crash: விமான விபத்துகள் நடப்பது சமீபத்தில் அதிகரித்து வருகிறது. நேற்று அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே ஏர் இந்தியா போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம் விபத்துக்குள்ளானது இந்தியா முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. விமானத்தில் பயணித்த ஒருவரை தவிர அனைவரும் இறந்துவிட்டதாக அறிவித்துள்ள நிலையில் விமானத்தில் பயணித்த குஜராத்தின் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியும் இறந்து விட்டதாக அறிக்கைகள் கூறுகிறது.
விஜய் ரூபானியின் இழப்பு விமான விபத்துகளில் இறந்த முக்கிய இந்திய தலைவர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்தியா கோர விபத்துக்கான ஆழ்ந்துள்ள நிலையில், இந்த பேரழிவுக்கான காரணம் குறித்து விசாரணைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இந்த விபத்து விமானப் பாதுகாப்பு குறித்த கேள்விகளுக்கு மீண்டும் வழிவகுத்துள்ளது. இந்த பதிவில் விமான விபத்தில் இறந்த இந்திய அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

சுபாஷ் சந்திர போஸ்
விமான விபத்து என்று வந்தாலே அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது சுபாஷ் சந்திர போஸ் அவர்களை பற்றித்தான். இந்திய சுதந்திர போராட்டத்தின் தலைவர்களில் முக்கியமான ஒருவரான நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், ஆகஸ்ட் 18, 1945 அன்று தைஹோகுவிலிருந்து புறப்படும்போது அவரது ஜப்பானிய விமானம் விபத்துக்குள்ளானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விமான விபத்தில் அவர் படுகாயமடைந்தார், ஆனால் அதற்குப்பின் அவருக்கு என்ன நடந்தது என்பது இன்றுவரை மர்மமாகவே உள்ளது.
ஹோமி ஜே. பாபா
விமான விபத்துகள் அரசியல்வாதிகளை மட்டுமல்ல விஞ்ஞானிகளையும் விட்டு வைக்கவில்லை. ஜனவரி 24, 1966 அன்று, இந்தியாவின் அணுசக்தி திட்டத்தின் தந்தையான டாக்டர் ஹோமி ஜஹாங்கீர் பாபா ஒரு மோசமான விமான விபத்தில் இறந்தார். மும்பையிலிருந்து ஜெனீவாவுக்குப் பயணம் செய்த போது, அவர் பயணித்த ஏர் இந்தியா விமானம் 101, ஆல்ப்ஸில் உள்ள மோன்ட் பிளாங்கில் மோதியது. இந்த துயர விபத்தில் பாபா உட்பட விமானத்தில் இருந்த 117 பேரும் உயிரிழந்தனர்.
மோகன் குமாரமங்கலம்
முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான மோகன் குமாரமங்கலம், மே 30, 1973 அன்று, அவர் பயணித்த இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் புது தில்லிக்கு அருகில் விபத்துக்குள்ளானதில் மரணித்தார். அவரது அகால மரணம் இந்தியாவில் விமானப் பாதுகாப்பு குறித்த அச்சத்தை ஏற்படுத்தியது.
சஞ்சய் காந்தி
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் மகன் சஞ்சய் காந்தி, ஜூன் 23, 1980 அன்று டெல்லியில் உள்ள சஃப்தர்ஜங் விமான நிலையத்தில் விமானப் பயிற்சி செய்து கொண்டிருந்தபோது, தனியார் விமான விபத்தில் உயிரிழந்தார். அவரது திடீர் மறைவு நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியதுடன், வேகமாக வளர்ந்து வந்த அரசியல் நட்சத்திரத்தின் வாழ்க்கைக்கு திடீர் முற்றுப்புள்ளி வைத்தது. அவரது மரணம் இன்றும் மர்மமாகவே உள்ளது.
மாதவ்ராவ் சிந்தியா
குவாலியர் அரச குடும்பத்தைச் சேர்ந்தவரும், காங்கிரஸ் அமைச்சரவையில் அமைச்சருமாக இருந்த மாதவ்ராவ் சிந்தியா, செப்டம்பர் 30, 2001 அன்று உத்தரபிரதேசத்தின் மெயின்புரி அருகே ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். அவர் இறந்தபோது அவருக்கு வயது வெறும் 46 வயதுதான், மோசமான வானிலை காரணமாக இடைத்தேர்தல் பிரச்சாரம் செய்யச் சென்றிருந்தபோது அவர் எதிர்பாராத விதமாக இறந்தார்.
சௌந்தர்யா
ஏப்ரல் 17, 2004 அன்று, பிரபல தென்னிந்திய நடிகை சௌந்தர்யா ஒரு தனியார் விமான விபத்தில் இறந்தார். பெங்களூருவில் உள்ள ஜக்கூர் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, அவர் பயணித்த விமானம் விபத்துக்குள்ளானது. துரதிர்ஷ்டவசமாக, விபத்தின் போது அவர் ஏழு மாத கர்ப்பிணியாக இறந்தார் மேலும் அவருடன் பயணித்த அனைவரும் இறந்தனர்.
டோர்ஜி காண்டு
அருணாச்சலப் பிரதேச முதலமைச்சர் டோர்ஜி காண்டு, மே 4, 2011 அன்று தவாங்கிலிருந்து இட்டாநகருக்குப் பயணம் செய்தபோது ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தார். சேலா பாஸ் அருகே மலைப்பகுதியில் பவன் ஹான்ஸ் ஹெலிகாப்டர் விபத்தில் டோர்ஜியும் மற்ற நான்கு பயணிகளும் உயிரிழந்தனர்.
ஓ. பி. ஜிண்டால் மற்றும் சுரேந்தர் சிங்
வேளாண் அமைச்சர் சுரேந்தர் சிங் மற்றும் தொழிலதிபரும் ஹரியானா அமைச்சருமான ஓ.பி. ஜிண்டால் ஆகியோர் மார்ச் 31, 2005 அன்று உத்தரபிரதேசத்தின் சஹாரன்பூர் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தனர். சண்டிகரில் இருந்து விமானத்தில் இருந்து திரும்பி வரும் வழியில் அவர்களின் யூரோகாப்டர் விபத்துக்குள்ளானதில் அவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
ஜெனரல் பிபின் ராவத்
டிசம்பர் 8, 2021 அன்று, தமிழ்நாட்டின் குன்னூர் அருகே இந்திய விமானப்படையின் Mi-17 ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய பாதுகாப்புப் படையின் தளபதி ஜெனரல் பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் பன்னிரண்டு பேர் உயிரிழந்தனர். மோசமான வானிலை காரணமாக, ஊட்டிக்குச் செல்லும் வழியில் அவரது ஹெலிகாப்டர் விபத்துக்கு உள்ளானது.
ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி
செப்டம்பர் 2, 2009 அன்று நல்லமலா மலைகளில் நடந்த மோசமான ஹெலிகாப்டர் விபத்தில் ஆந்திரப் பிரதேச முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி உயிரிழந்தார். பிரச்சார சுற்றுப்பயணத்திலிருந்து திரும்பும் வழியில், அவரது பெல் 430 ஹெலிகாப்டர் மோசமான மழையினால் மோதி விபத்துக்குள்ளானது. அதில் பயணம் செய்த மற்றவர்களும் விபத்தில் இறந்தனர்.



Click it and Unblock the Notifications












