Latest Updates
-
டேட்டிங் ஆப் மூலம் நடக்கும் பில் மோசடி! இந்த அறிகுறிகள் தெரிந்தால் உடனே உஷாராகுங்கள்! -
வெயிலால் முகத்தில் எண்ணெய் அதிகம் வழியுதா? அப்ப இந்த முல்தானி மெட்டி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
மே மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு கூரைய பிச்சு பண மழை கொட்டப்போகுது... -
வெந்தயக் கீரை பருப்பு கூட்டு - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
கோடை வெயிலில் வீடு சூடாக இருக்கா? இந்த செடிகளை வளர்த்தால் குளிர்ச்சியும் பணமும் தேடி வரும்! -
100% மருந்து மாத்திரையின்றி கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 'டயட் சார்ட்' ஃபாலோ பண்ணுங்க.. -
கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைக்கணுமா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும், ஏசி தேவையில்லை! -
லட்சுமி நாராயண ராஜயோகம்: மே மாதத்தில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது! -
தக்காளியும், கொத்தமல்லியும் இருந்தா.. ஒருடைம் இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 27 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மோசமான நாள் காத்திருக்காம்
இந்திய பட்ஜெட்டை தயாரிக்கும் முன் ஏன் நிதி அமைச்சர் அல்வா செய்கிறார்? அதன் முக்கியத்துவம் என்ன தெரியுமா?
Union Budget 2024: சமீப காலங்களில் ஒன்றிய அரசின் பட்ஜெட் போடுவதற்கு முன் அல்வா கிண்டும் விழா நடைபெறுவது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. இந்த விழாவைப் பற்றிய செய்தியை நாம் பட்ஜெட்டின் சில நாட்களுக்கு முன் வழக்கமாக பார்த்து வருகிறோம். இதற்கான காரணம் என்னவென்று எப்போது சிந்தித்து இருக்கிறீர்களா?
அல்வா விழா என்றால் என்ன?
பாராளுமன்றத்தில் ஒன்றிய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு 9-10 நாட்களுக்கு முன்பு நிதி அமைச்சகம் அல்வா கிண்டும் விழாவை நடத்தும் பாரம்பரியம் இது. இந்த விழா மத்திய பட்ஜெட் அச்சடிக்கும் பணியின் தொடக்கத்தைக் குறிக்கிறது.

இந்த விழா எங்கு நடைபெறுகிறது?
இந்த சம்பிரதாய நடவடிக்கை மத்திய டெல்லியில் உள்ள நிதி அமைச்சகத்தின் (வடக்கு பிளாக்) அடித்தளத்தில் நடைபெறுகிறது. இங்கு பட்ஜெட்டை அச்சடிக்க பிரத்யேக அச்சு இயந்திரம் உள்ளது. இந்த ஆண்டுக்கான பட்ஜெட் ஜூலை 23-ம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது.
இந்த விழாவில் என்ன நடக்கும்?
பாரம்பரியத்தின் படி, பிரபலமான இந்திய இனிப்பு உணவான அல்வா, பெரிய இரும்பு கடாயில் தயாரிக்கப்பட்டு நிதி அமைச்சக ஊழியர்களுக்கு பரிமாறப்படுகிறது. நிதியமைச்சர் அடுப்பை பற்ற வைத்தப் பிறகு பாரம்பரியம் தொடங்குகிறது. இந்த ஆண்டு விழா ஜூலை 16 அன்று நடைபெற்றது மற்றும் அதிகாரப்பூர்வ X தளத்தில் அதன் விவரங்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டன, அதில், "யூனியன் பட்ஜெட் 2024-25 க்கான பட்ஜெட் தயாரிப்பு செயல்முறையின் இறுதிக் கட்டம் மத்திய நிதி அமைச்சர் முன்னிலையில் வழக்கமான அல்வா விழாவுடன் தொடங்கியது.
அல்வா விழாவின் முக்கியத்துவம்
இந்த விழாவானது, முன்மொழியப்பட்ட பட்ஜெட்டின் 'லாக்-இன்' ஐத் தொடங்குகிறது, இதனால் அது பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் வரை சந்தையில் கசிந்துவிடாது. ஆவணங்கள் மீது ரகசியம் காக்க, அடுத்த 9-10 நாட்களுக்கு, நார்த் பிளாக் அடித்தளம் ஒரு கோட்டையாக மாற்றப்ட்டு பாதுகாக்கப்படுகிறது.
சுவாரஸ்யமான தகவல்கள்
சுமார் 9 முதல் 10 நாட்களுக்கு, பட்ஜெட் தயாரிக்கும் அல்லது அச்சிடும் பணியில் ஈடுபட்டுள்ள நிதி அமைச்சக அதிகாரிகள் தனிமைப்படுத்தப்பட்டு, அவர்களது குடும்பத்தினர் உட்பட வெளியுலகில் இருந்து முற்றிலும் துண்டிக்கப்படுகின்றனர். ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால், அதிகாரிகளின் குடும்ப உறுப்பினர்கள் ஒரு குறிப்பிட்ட எண்ணிற்கு செய்தியை அனுப்ப வசதி உள்ளது, ஆனால் நேரடி தொடர்பு அனுமதிக்கப்படாது. நார்த் பிளாக்கின் அடித்தளத்தில் 1980 முதல் 2020 வரை 40 ஆண்டுகளாக பட்ஜெட் ஆவணங்களை அச்சிடுவதற்கு பாரம்பரியமாக பயன்படுத்தப்பட்ட ஒரு அச்சகம் உள்ளது, அதன் பிறகு பட்ஜெட் டிஜிட்டல் முறையில் மாற்றப்பட்டது.
அதன் சம்பிரதாய அம்சங்களுக்கு அப்பால், இந்த நிகழ்வு குழு உறுப்பினர்களிடையே ஒற்றுமை மற்றும் குழுப்பணி உணர்வை வளர்க்கிறது, நாட்டின் நிதித் திட்டங்களை இறுதி செய்யத் தேவையான கூட்டு முயற்சியைப் பிரதிபலிக்கிறது.
அல்வா விழா பட்ஜெட் தயாரிப்பின் இறுதிக் கட்டத்தின் தொடக்கத்தைக் குறிப்பது மட்டுமின்றி, இந்தியாவின் நிதிக் கொள்கைகளை வடிவமைப்பதில் அர்ப்பணிப்பு மற்றும் உன்னிப்பின் உணர்வை வெளிப்படுத்துகிறது. இது இந்திய ஆட்சிக் காலண்டரில் மிக முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றான மரபுகள் மற்றும் நெறிமுறைகளுக்கு ஒரு சான்றாக உள்ளது.



Click it and Unblock the Notifications
