உலகில் அதிக சீரியல் கில்லர்களை கொண்ட டாப் 10 நாடுகள்...இந்தியாவில் எத்தனை சீரியல் கில்லர் இருக்காங்க தெரியுமா?

கொடூரமான பேரரசர்கள் முதல் இரகசிய கொலையாளிகள் அல்லது சில மனநோயாளிகள் வரை சில மனித வரலாறு பல மோசமான கொலைகாரரர்களை சந்தித்துள்ளது. சிலர் அவர்கள் வாழ்வதற்காக கொலை செய்கிறார்கள், சிலர் அரசியல் காரணங்களுக்காகக் கொலை செய்கிறார்கள் ஆனால் தங்களுடைய இன்பத்திற்காகக் கொலை செய்யும் சில தொடர் கொலைகாரர்களும் நம்மை சுற்றி இருக்கத்தான் செய்கின்றனர்.

துரதிர்ஷ்டவசமாக இந்த கொலையாளிகளில் பலர் மிகப்பெரிய திறமைசாலிகள், ஏனெனில் அவர்களில் பலர் அவர்கள் செய்த கொடூர குற்றங்களுக்காக கைது செய்யப்படவில்லை. வறுமை, விரக்தி, தனிமை, உளவியல் நோய் மற்றும் மனநல கோளாறுகள் ஆகியவை உலகின் பல்வேறு பகுதிகளில் தொடர் கொலையாளிகளை உருவாக்கும் காரணிகளாகும்.

Top 10 Countries With Most Number of Serial Killers in Tamil

இப்படிப்பட்ட கொடூரமான தொடர் கொலையாளிகள் உலகம் முழுவதும் அனைத்து நாடுகளிலும் உள்ளனர். இதில் நமது நாட்டை சேர்ந்த சில தொடர் கொலையாளிகளும் உள்ளனர். இந்த பதிவில் சீரியல் கில்லர்கள் அதிகமிருக்கும் டாப் 10 நாடுகள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளலாம்.

அமெரிக்கா

உலக வல்லரசு நாடான அமெரிக்கா அதன் வரலாறு முழுவதும் தொடர்ச்சியான கொலையாளிகளின் அதிர்ச்சியூட்டும் எண்ணிக்கையைக் கண்டுள்ளது. இங்கே இதுவரை ஆவணப்படுத்தப்பட்ட சீரியல் கில்லர்களின் எண்ணிக்கை 3204. இது உலகின் மிகவும் மோசமான கொலைகாரர்களின் தாயகமாக மாறியுள்ளது. இந்த பட்டியலில் முதலிடத்திற்கும், இரண்டாம் இடத்திற்கும் உள்ள வேறுபாடு மிகவும் பெரியதாகும். டெட் பண்டி போன்றவர்களில் இருந்து சிகாகோவில் இளம் சிறுவர்களை வேட்டையாடிய ஜான் வெய்ன் கேசி வரை பல ஆபத்தான சீரியல் கில்லர்கள் அமெரிக்க வரலாற்றில் உள்ளனர்.

இங்கிலாந்து

இங்கிலாந்தில் இதுவரை பதிவு செய்யப்பட்ட தொடர் கொலையாளிகளின் எண்ணிக்கை 166. தொடர் கொலையாளிகளின் கொடூரங்கள் இங்கிலாந்துக்கு புதியதல்ல. டாக்டர் டெத் என்று அழைக்கப்படும் ஹரோல்ட் ஷிப்மேன் இதில் மிகவும் பிரபலமான வழக்குகளில் ஒன்றாகும். இந்த பிரிட்டிஷ் மருத்துவர் தனது பதவியைப் பயன்படுத்தி குறைந்தது 218 நோயாளிகளைக் கொன்றார். பல மரணங்கள் சந்தேகத்தை ஏற்படுத்திய பிறகே அவரது குற்றங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

அதேபோல, மூர்ஸ் கொலைகாரர்களான இயன் பிராடி மற்றும் மைரா ஹிண்ட்லி ஆகியோர் 1960களில் ஐந்து குழந்தைகளை கொடூரமாகக் கொன்றனர். இந்த ஜோடி குழந்தைகளை கொலை செய்வதற்கு முன் பாலியல் துஷ்பிரயோகம் செய்து கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது, அதன்பின் அவர்களின் உடல்களை இருண்ட சாடில்வொர்த் மூரில் புதைத்தது.

தென் ஆப்பிரிக்கா

தென்னாப்பிரிக்காவில் இதுவரை 117 தொடர் கொலையாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். 1980கள் மற்றும் 1990களில், செட்ரிக் மேக் என்றும் அழைக்கப்படும் "ஹாமர் கில்லர்" நாட்டையே பயமுறுத்தினார். ஒரு சுத்தியலை தனது ஆயுதமாகப் பயன்படுத்தி, தொடர்ச்சியான கொடூரமான கொலைகளை மேக் செய்து வந்தார்.

1990-களின் முற்பகுதியில் தென்னாப்பிரிக்காவில் நிறவெறியின் வீழ்ச்சியுடன், பல கிராமப்புறப் பெண்கள் வேலை தேடி நகரங்களுக்குச் சென்றனர். ஜோகன்னஸ்பர்க் மற்றும் பிரிட்டோரியாவிற்கு வெளியே உள்ள வெல்டில் ஒவ்வொரு சடலத்தையும் போலீசார் கண்டுபிடித்தபோது, ​​அவர்கள் ஒரு தொடர் கொலையாளியை எதிர்கொள்வதாக பொதுமக்களுக்கு தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட அனைவரும் வேலைக்கான நேர்காணலுக்காக ஒருவரைச் சந்திக்க ஏற்பாடு செய்திருந்தனர், அதற்குப்பின் அவர்கள் உயிருடன் காணப்படவில்லை. அவர் அட்டெரிட்ஜ்வில்லே, போக்ஸ்பர்க் மற்றும் கிளீவ்லேண்ட் பகுதிகளில் இந்த குற்றங்களைச் செய்தார், இதனால் அவர் ஏபிசி கில்லர் என்று பெயரிடப்பட்டார். அவர் 38 க்கும் அதிகமான பெண்களை கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.

கனடா

குறைந்த அளவு குற்றங்கள் நடைபெறும் நாடு என்று பாராட்டப்படும் கனடாவிலும் தொடர் கொலையாளிகள் இருக்கத்தான் செய்கின்றனர். இங்கு இதுவரை 106 தொடர் கொலையாளிகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர், தொடர் கொலையாளிகள் எந்த சமூக-பொருளாதார பின்னணியிலும் இருக்கலாம் என்பதை நிரூபித்தார், அவர் 49 பெண்களைக் கொன்ற கோடீஸ்வரர் ராபர்ட் பிக்டன், 50 பெண்களை கொலை செய்ய வேண்டும் என்ற இலட்சியத்துடன் அவர் இருந்தார். பெரும்பாலும் சமூக மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களை அவர் தேர்ந்தெடுத்து கொலை செய்தார்.

ஜப்பான்

ஜப்பானில் 96 சீரியல் கில்லர்கள் இருப்பதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஒரு மோசமான வழக்கு "Otaku Murderer," சுடோமு மியாசாகி. 1980 களின் பிற்பகுதியிலும் 1990 களின் முற்பகுதியிலும் மியாசாகி இளம் பெண்களை குறிவைத்து, கொலை செய்து பிரேத பரிசோதனைக்கு பிறகு அவர்களின் உடல்களை மோசமாக சிதைத்தார். அவரது வழக்கு ஜப்பானிய சமுதாயத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது, இது கடுமையான சட்ட அமலாக்க நடவடிக்கைகளுக்கு வழிவகுத்தது.

இத்தாலி

செழுமையான கலாச்சார வரலாறு மற்றும் கலைக்கு பெயர் பெற்ற இத்தாலி, சில மோசமான தொடர் கொலையாளிகளையும் கொண்டுள்ளது. அதில் முக்கியமானவர் லியோனார்டா சியான்சியுல்லி, குறிப்பாக "கோரேஜியோவின் சோப் தயாரிப்பாளர்" என்று குறிப்பிடப்படுபவர். 1930 களில், லியோனார்டா தனது வீட்டிற்கு மூன்று பெண்களை கவர்ந்திழுத்து, கொடூரமாக கொலை செய்தார், அதன்பின் அவர்களின் எச்சங்களை வைத்து சோப்பு மற்றும் டீகேக் போன்றவற்றை செய்தார். அவருடைய நோக்கம் மூடநம்பிக்கையில் வேரூன்றியிருந்தது மற்றும் நரபலி தன் குடும்பத்தை ஆபத்தில் இருந்து பாதுகாக்கும் என்ற அவர் நம்பினார்.

ஜெர்மனி

தொழில்நுட்பங்களுக்கு பெயர் பெற்ற ஜெர்மனி தொடர் கொலையாளிகளுக்கும் பெயர் பெற்றது. 85 சீரியல் கில்லர்களுடன் ஜெர்மனி இந்த பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளது. 1920களில் 30-40 பேரைக் கொன்றதாகக் கூறப்படும் நரமாமிச உண்பவர் என்று சந்தேகிக்கப்படும் கார்ல் டென்கே ஜெர்மனி வரலாற்றின் முக்கியமான தொடர் கொலையாளியாவார்.

ஆஸ்திரேலியா

81 தொடர் கொலையாளிகளுடன் ஆஸ்திரேலியா எட்டாவது இடத்தில் உள்ளது. ஜான் வெய்ன் குளோவர், "தி கிரானி கில்லர்" என்று பிரபலமாக அறியப்பட்டவர், சிட்னியின் புறநகர்ப் பகுதியான மோஸ்மனில் 2005 இல் சிறையில் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் ஆறு வயதான பெண்களைக் கொன்றார்.

இந்தியா

நம் இந்தியா மிகவும் அமைதியான நாடு என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம், ஆனால் நம் நாட்டிலும் பல கொடூரமான தொடர் கொலையாளிகள் இருந்தனர். முதலாவதாக Thug Behram, 19 ஆம் நூற்றாண்டில் உலகின் மிக ஆபத்தான தொடர் கொலையாளிகளில் ஒருவர் என்று அழைக்கப்படுகிறார். அவர் 900 க்கும் மேற்பட்டவர்களை கழுத்தை நெரித்து கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.

மேலும், 1980களின் பிற்பகுதியில் குறைந்தது 13 கொலைகளுக்கு காரணமான அடையாளம் தெரியாத கொலையாளியான "ஸ்டோன்மேன்" என்ற சீரியல் கில்லர் இருந்தார். கொலையாளி கொல்கத்தா மற்றும் மும்பையில் வீடற்ற நபர்களை குறிவைத்து, கனமான கல்லால் கொடூரமாக கொன்றார்.

"சயனைடு மோகன்" என்றழைக்கப்படும் மோகன் குமார் விவேகானந்த், பெண்களுக்கு சயனைடு மாத்திரைகள் வழங்கி, அவற்றை கருத்தடை மாத்திரைகள் என்று ஏமாற்றி பல பெண்களைக் கொலை செய்தார்.

அனைத்திற்கும் மேலாக உலகிலேயே மிக இளம்வயது சீரியல் கில்லரான அமர்ஜித் சதா இந்தியாவை சேர்ந்த சிறுவன்தான். தனது 8 வயதிலேயே மூன்று குழந்தைகளைக் கொன்று இந்த மோசமான பெயரை இவர் பெற்றார்.

ரஷ்யா

73 ஆவணப்படுத்தப்பட்ட தொடர் கொலையாளிகளுடன் ரஷ்யா பத்தாவது இடத்தில் உள்ளது. அலெக்சாண்டர் பிச்சுஷ்கின், அலெக்சாண்டர் ஸ்பெசிவ்ட்சேவ் மற்றும் அனடோலி ஸ்லிவ்கோ ஆகியோர் குறிப்பிடத்தக்க ரஷ்ய தொடர் கொலையாளிகள். இதில் பிச்சுஷ்கின் 63 பெண்களின் மரணத்திற்கு காரணமாக இருந்தார்.

Desktop Bottom Promotion