Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
புதன் கிழமை இந்த விஷயங்களை தெரியாம கூட பண்ணிராதீங்க... இல்லனா உங்க அதிர்ஷ்டத்தோட ஆயுளும் குறையுமாம்...!
ஜோதிடத்தின் படி வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஒரு கிரகத்தால் ஆளப்படுகிறது. எனவே அந்தந்த நாட்களில் அதற்குரிய கிரகத்தை வழிபடுவது உங்கள் வாழ்க்கையில் நேர்மறை ஆற்றலை வெளிப்படுத்தும்.
அதேபோல குறிப்பிட்ட நாட்களில் நீங்கள் செய்யும் செயல்கள் அந்த நாளுக்குரிய கிரகத்தை கோபப்படுத்தும். ' பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது ' என்று கூறப்படும் புதன் கிழமை வார நாட்களில் மிகவும் முக்கியமான நாளாகும்.

இந்த நாளில் நீங்கள் செய்யும் சில தவறான செயல்கள் உங்களின் நல்வாழ்க்கையையும், அதிர்ஷ்டத்தையும் பாதிக்கும். இந்த பதவில் புதன் கிழமை நீங்கள் செய்யக்கூடாத செயல்கள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளலாம்.
பெண்களை அவமதிக்கக்கூடாது
புதன் கிழமை பெண்களை ஒருபோதும் அவமதிக்கக்கூடாது. உங்கள் மனைவி, சகோதரி மற்றும் மகள் போன்றவர்களை அவமதிக்கக்கூடாது. இந்த நாளில் பெண்களுக்கு பச்சை நிறத்துணிகள் மற்றும் வளையல் போன்றவற்றை கொடுக்கலாம்.
கடன் கொடுக்கவோ, வாங்கவோ கூடாது
புதன் கிழமை கடன் வாங்குவதோ அல்லது கொடுப்பதோ மிகவும் துரதிர்ஷ்டமான செயலாக கருதப்படுகிறது. இது உங்களுக்கு பொருளாதாரரீதியாக பின்னடைவை ஏற்படுத்தும். இந்த நாளில் கடன் வாங்குவது உங்கள் நிதிரீதியான இழப்பை ஏற்படுத்தும்.
மோசமான வார்த்தைகளை உபயோகிக்கக்கூடாது
புதன் கிழமை மோசமான வார்த்தைகளை உபயோகிப்பது உங்கள் ஜாதகத்தில் புதனின் நிலையை பலவீனமாக்கும். எனவே இந்த நாளில் மோசமான வார்த்தைகளை உபயோகிக்காதீர்கள்.இதனால் உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் நிதிரீதியான பின்னடைவும், சிரமங்களும் ஏற்படும்.
முதலீடுகள் கூடாது
புதன் கிழமைகளில் புதிய முதலீடு தொடங்குவது மிகப்பெரிய நஷ்டத்திற்கு வழிவகுக்கும். பொருளாதாரரீதியான பின்னடைவைத் தவிர்க்க புதன் கிழமைகளில் முதலீட்டை தவிர்க்கவும். வெள்ளிக்கிழமை புதிய முதலீட்டைத் தொடங்குவதற்கான சிறந்த நாளாகும்.
திருநங்கைகளை அவமதிக்கக்கூடாது
புதன் கிழமை திருநங்கைகளை ஒருபோதும் அவமதிக்கக்கூடாது. மாறாக இந்த நாளில் அவர்களின் ஆசீர்வாதம் பெறுவது உங்களுக்கு நன்மைகளை அளிக்கும். இந்த நாளில் அவர்களுக்கு அவர்களுக்கு தானம் கொடுப்பது சிறந்தது.
மேற்குதிசை பயணம் கூடாது
புதன் கிழமையன்று மேற்கு திசை பயணம் செய்யக்கூடாது. இந்த நாளில் விநாயகரை வழிபடுவது உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.
பெண்கள் கருப்பு உடை அணியக்கூடாது
கணவரின் நீண்ட ஆயுளுக்கு பெண்கள் இந்த நாளில் கருப்பு நிற ஆடைகளை அணியக்கூடாது, இந்த நாளில் கருப்பு நிற அணிகலன்களை அணிவதும் தவிர்க்க வேண்டிய ஒன்றாகும். இந்த நாளில் பச்சை நிற ஆடையணிவது பெண்களுக்கு நல்ல பலன்களைக் கொடுக்கும்.



Click it and Unblock the Notifications












