Latest Updates
-
பர்பெக்ட்டான கணவராக இருக்கும் 4 ராசிகள் இவங்கதான்... இவங்க புருஷனா கிடைக்க அதிர்ஷ்டம் வேணும்...! -
செவ்வாயால் உருவாகும் லாப யோகம்: ஏப்ரலில் இந்த 5 ராசிக்காரர்களின் பேங்க் பேலன்ஸ் டபுள் ஆகப்போகுது.. -
தமிழ்நாட்டின் டாப் 5 பணக்கார மாவட்டங்கள் என்னென்ன தெரியுமா? சென்னை முதலிடத்தில் இல்லையாம்...! -
தினமும் ஆவியில் வேக வைத்த 1 நெல்லிக்காயை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
1/2 கப் பாசிப்பருப்பு இருந்தா இந்த மாதிரி கிச்சடி செய்யுங்க... ஆரோக்கியமா, சுவையா இருக்கும்... ட்ரை பண்ணுங்க! -
மதியம் டக்குன்னு சமையலை முடிக்கணுமா? 1 கப் தயிர் இருந்தா.. 10 நிமிடத்தில் இத செய்யுங்க... -
இந்தியாவில் மக்கள் தொகை மிகவும் குறைவாக இருக்கும் டாப் 10 மாநிலங்கள்... சில லட்சம் பேர்தான் இங்க வாழறாங்களாம். -
Ram Navami 2026: ராம நவமி நாளில் ராமரின் அருளைப் பெறப்போகும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா? -
30 ஆண்டுக்கு பின் ஏப்ரலில் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா மாறப்போறாங்களாம்! -
1 வருடம் கழித்து உச்ச ராசிக்கு செல்லும் சூரியன்: ஏப்ரல் மாதத்தில் இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்..
ஒரே தொகுதியில் பலமுறை வெற்றி பெற்று தனது கோட்டையாக மாற்றிய அரசியல் தலைவர்கள்! யார்யார்-ன்னு பாருங்க..
Tamil Nadu Election 2026: 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஏப்ரல் 23 ஆம் தேதி நடக்கவுள்ள தேர்தலால், தற்போது தமிழ்நாடு அரசியல் களம் மிகவும் பரபரப்பாக உள்ளது. தேர்தல் நடைபெற இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், பல கட்சி தலைவர்களும் தொகுதிவாரியாக தங்களின் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதில் சில தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பல ஆண்டுகளாக அந்த தொகுதியில் நிற்பதோடு, தொடர்ந்து வெற்றி பெற்றும் வருகிறார்கள்.
இப்படி தொடர்ந்து வெற்றி பெற்று வரும் வேட்பாளர்கள் அந்த தொகுதியையே தனது கோட்டையாக மாற்றியுள்ளனர். அதாவது, இந்த தொகுதியில் வேறு யாரும் வெற்றி பெற முடியாது. அந்த அளவில் வாக்காளர்களுடன் வேட்பாளர் ஆழமான பிணைப்பை கொண்டுள்ளனர். அப்படி ஒரே தொகுதியில் பலமுறை வெற்றி பெற்று தனது கோட்டையாக மாற்றிய அரசியல் தலைவர்கள் யார்யார் மற்றும் எந்த தொகுதி என்பதை காண்போம்.

கே. ஏ. செங்கோட்டையன்
பல ஆண்டுகளாக நடைபெற்ற பல்வேறு தேர்தல்களில் வெற்றி வாகை சூடிய ஒரு மூத்த அரசியல் தலைவர் தான் கே. ஏ. செங்கோட்டையன். இவரது தொகுதி ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபிசெட்டிபாளையம் ஆகும். இவர் அதிமுகவில் இருந்த போது சுமார் 9 முறை கோபிசெட்டிபாளையம் தொகுதியில் நின்று வெற்றி பெற்று அசத்தினார். தற்போது இவர் அதிமுகவில் இருந்து தவெகவுக்கு சென்றுள்ளார்.
துரைமுருகன்
தமிழ்நாட்டிலேயே மிக நீண்ட காலம் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றி வருபவர்களில் ஒருவர் தான் துரைமுருகன். இவர் திமுகவின் பொதுச்செயலாளரும், மூத்த அரசியல்வாதியுமாவார். இவரது தொகுதி காட்பாடியாகும். இந்த தொகுதியில் இவர் தொடர்ந்து பல முறை வென்று, ஒரு வலுவான அரசியல் அடித்தளத்தை அமைத்துள்ளார். அவர் 1971 ஆம் ஆண்டு முதல் இந்த காட்பாடி தொகுதியில் போட்டியிட்டு, அதில் வெற்றி பெற்று வருகிறார்.
ஓ. பன்னீர்செல்வம்
அதிமுகவில் இருந்து திமுகாவிற்கு சென்றுள்ள முன்னாள் முதல்வர் தான் ஓ.பன்னீர்செல்வம் என்னும் ஓபிஎஸ். இவரது தொகுதி தேனியில் உள்ள போடிநாயக்கனூர் ஆகும். இந்த தொகுதியில் தொடர்ந்து 3 முறை வெற்றி பெற்று வருகிறார். இந்த வெற்றியானது அத்தொகுதியில் அவருக்குள்ள வலுவான உள்ளூர் ஆதரவையும் அங்கீகாரத்தையும் பிரதிபலிக்கின்றன. அதுமட்டுமின்றி பெரியகுளம் தொகுதியிலும் நின்று 2 முறை வெற்றி பெற்றுள்ளார். மாறிவரும் அரசியல் சூழல்களில், அவரைப் போன்ற தலைவர்கள் தங்கள் வாக்காளர் தளத்தின் காரணமாகத் தொடர்ந்து முக்கியத்துவம் வாய்ந்தவர்களாகத் திகழ்கின்றனர்.
மு.க. ஸ்டாலின்
தமிழ்நாட்டில் உள்ள அரசியல் தலைவர்களில் தேர்தல் களத்தில் தொடர்ந்து வெற்றிகளை ஈட்டிவரும் மிகச்சிறந்த தலைவர்களுள் ஒருவர் தான் தற்போதைய முதல்வர் மு.க. ஸ்டாலின். இவர் கடந்த பல ஆண்டுகளாக கொளத்தூர் மற்றும் ஆயிரம் விளக்கு போன்ற தொகுதிகளில் நின்று பல முறை வெற்றி பெற்றுள்ளார். இவரது நீண்டகால அரசியல் பயணமும், மக்களுடனான ஆழமான தொடர்பும், அத்தொகுதியை அவரது கோட்டையாக்கியுள்ளது.
எடப்பாடி கே. பழனிசாமி
அதிமுக கட்சியின் தற்போதைய தலைவர் தான் எடப்பாடி கே. பழனிசாமி. எடப்பாடி தொகுதியில் தனது ஆதிக்கத்திற்காக அறியப்படும் இவர், இந்த தொகுதியில் தொடர்ந்து பலமுறை போட்டியிட்டு வெற்றி பெற்று, தனது கோட்டையாக மாற்றியுள்ளார்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications












