Latest Updates
-
ஜூன் 30-ல் நிகழும் நட்சத்திர பெயர்ச்சியால் ஆபத்துகளையும், அவமானங்களையும் சந்திக்கப்போகும் 3 ராசிகள் -
10 பாதமும், 1 குடைமிளகாயும் இருந்தா இந்த ஆந்திரா சட்னியை அரைங்க - டேஸ்ட் அட்டகாசமாக இருக்கும் -
ஜூன் 29 ஸ்ட்ராபெர்ரி நிலவு அன்று நிகழும் புதன் வக்ர பெயர்ச்சி இந்த 4 ராசிகளின் அதிர்ஷ்டக்கதவை திறக்கப்போகுதாம் -
Strawberry Moon 2026: ஸ்ட்ராபெரி நிலவு எப்போது வருகிறது? இந்தியாவில் எந்த நேரத்தில் இது பிரகாசமாக தெரியும்? -
கொங்கு ஸ்பெஷல் முட்டை சிந்தாமணி ரெசிபி - 4 முட்டை இருந்தா இத செஞ்சு பாருங்க - டக்கரா இருக்கும் -
39 மனைவிகள், 94 குழந்தைகள் என ஆலமரமாய் வாழ்ந்த இந்தியர் யார் தெரியுமா? உலகிலேயே பெரிய குடும்பம் இவரோடதுதான் -
பெங்காலி ஸ்டைல் பெப்பர் சிக்கன் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுருக்குனு வேற லெவலில் இருக்கும் -
சுக்கிரன்-சூரியனின் ராசி மாற்றத்தால் ஜூலை மாதத்தில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
காரசாரமான.. சிக்கன் மிளகு கிரேவி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 28 ஜூன் 2026: இன்றைய நாள் உங்களின் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா?
50 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள அகண்ட சாம்ராஜ்ய ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பணம் அதிகம் சேரும்...
Akhand Samrajya Rajyoga After 50 Years: ஜோதிட சாஸ்திரத்தின் படி, கிரகங்களின் இயக்கங்கள் ஒருவரது வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்லும்.
அந்த வகையில் நவகிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன், 12 ஆண்டுகளுக்கு பின் தனது சொந்த ராசியான சிம்ம ராசிக்குள் நுழைந்தார். சூரியன் சிம்ம ராசிக்குள் நுழைந்ததால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.

அதே வேளையில் நவாம்ச ஜாதகத்தில் சூரியன் உயர்ந்த நிலையில் உள்ளார். இதனால் அகண்ட சாம்ராஜ்ய ராஜயோகம் உருவாகியுள்ளது. இந்த ராஜயோகமானது 50 ஆண்டுகளுக்கு பின் உருவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ராஜயோகத்தின் தாக்கம் 12 ராசிகளிலுமே காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் திடீர் செல்வத்தையும், அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைம் பெறுவார்கள். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் அகண்ட சாம்ராஜ்ய ராஜயோகத்தால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள். இக்காலத்தில் நம்பிக்கை அதிகம் இருக்கும். திருமணமான புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. சமூகத்தில் மரியாதையும், கௌரவமும் அதிகரிக்கும். முக்கியமாக வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படக்கூடும். நீண்ட நாட்களாக வேலை தேடிக் கொண்டிருந்தால், அவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் புதிய வேலை கிடைக்கும்.
மேஷம்
அகண்ட சாம்ராஜ்ய ராஜயோகத்தால் மேஷ ராசிக்காரர்கள் பல விஷயங்களில் சாதகமான முடிவுகளைப் பெறுவார்கள். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். எந்த ஒரு காரியத்திலும் நல்ல வெற்றியைக் காண்பார்கள். சமூகத்தில் மரியாதையும், கௌரவமும் அதிகரிக்கும். திடீர் பண வரவு கிடைக்கும். சிக்கிய பணம் இக்காலத்தில் கைக்கு வந்து சேரும். முக்கியாக தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகம் இருக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு அகண்ட சாம்ராஜ்ய ராஜயோகமானது மங்களகரமாக இருக்கும். பல முக்கிய கிரகங்கள் சாதகமான நிலையில் இருப்பதால், இக்காலத்தில் பலவிதமான நன்மைகளைப் பெறுவார்கள். பழைய முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் இக்காலத்தில் கிடைக்கும். வணிகர்களுக்கு நல்ல பண ஆதாயத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். வாகனம், சொத்தும் வாங்கும் வாய்ப்புக்களும் உள்ளன. முக்கியமாக இக்காலத்தில் வேலை தொடர்பாக மேற்கொள்ளும் பயணங்கள் நல்ல பண ஆதாயத்தைத் தரும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications