Latest Updates
-
இன்றைய ராசிபலன் 14 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கனவுகள் பலிக்கும் நாளாக இருக்குமாம் -
50 ஆண்டுகளுக்கு பின் சனி ஜெயந்தியில் உருவாகும் அரிய யோகம்: இந்த 3 ராசிக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கப்போகுது..! -
காதலில் சம்மதம் முக்கியமா? டெல்லி உயர்நீதிமன்றத்தின் இந்த அதிரடி தீர்ப்பு சொல்லும் உண்மை என்ன தெரியுமா? -
எடை இழப்புக்கு உதவும் வெஜிடேபிள் சிக்கன் சூப் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
'Main Tera' Day ட்ரெண்டில் காதலை சொல்லப் போறீங்களா? இந்த பாதுகாப்பு டிப்ஸ் தெரியாம மெசேஜ் அனுப்பாதீங்க, சிக்கலில் மாட்டிக்காதீங்க! -
ஒருடைம் வாழைப்பழத்தை வெச்சு இப்படி ஃபேஸ் மாஸ்க் போடுங்க.. முகம் பளிச்சென்று பிரகாசமா இருக்கும்.. -
Sonia Gandhi: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சோனியா காந்தி - உண்மையில் அவருக்கு என்ன பிரச்சனை? -
வெயில் கொளுத்துதா? வீட்டை குளிர்ச்சியாக வைக்க இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா போதும், ஏசி கூட தேவையில்லை! -
ராகு-கேதுவிற்கு இடையில் வரும் சூரியன்: மே 15 முதல் இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க..
50 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள அகண்ட சாம்ராஜ்ய ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பணம் அதிகம் சேரும்...
Akhand Samrajya Rajyoga After 50 Years: ஜோதிட சாஸ்திரத்தின் படி, கிரகங்களின் இயக்கங்கள் ஒருவரது வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்லும்.
அந்த வகையில் நவகிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன், 12 ஆண்டுகளுக்கு பின் தனது சொந்த ராசியான சிம்ம ராசிக்குள் நுழைந்தார். சூரியன் சிம்ம ராசிக்குள் நுழைந்ததால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.

அதே வேளையில் நவாம்ச ஜாதகத்தில் சூரியன் உயர்ந்த நிலையில் உள்ளார். இதனால் அகண்ட சாம்ராஜ்ய ராஜயோகம் உருவாகியுள்ளது. இந்த ராஜயோகமானது 50 ஆண்டுகளுக்கு பின் உருவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ராஜயோகத்தின் தாக்கம் 12 ராசிகளிலுமே காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் திடீர் செல்வத்தையும், அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைம் பெறுவார்கள். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் அகண்ட சாம்ராஜ்ய ராஜயோகத்தால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள். இக்காலத்தில் நம்பிக்கை அதிகம் இருக்கும். திருமணமான புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. சமூகத்தில் மரியாதையும், கௌரவமும் அதிகரிக்கும். முக்கியமாக வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படக்கூடும். நீண்ட நாட்களாக வேலை தேடிக் கொண்டிருந்தால், அவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் புதிய வேலை கிடைக்கும்.
மேஷம்
அகண்ட சாம்ராஜ்ய ராஜயோகத்தால் மேஷ ராசிக்காரர்கள் பல விஷயங்களில் சாதகமான முடிவுகளைப் பெறுவார்கள். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். எந்த ஒரு காரியத்திலும் நல்ல வெற்றியைக் காண்பார்கள். சமூகத்தில் மரியாதையும், கௌரவமும் அதிகரிக்கும். திடீர் பண வரவு கிடைக்கும். சிக்கிய பணம் இக்காலத்தில் கைக்கு வந்து சேரும். முக்கியாக தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகம் இருக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு அகண்ட சாம்ராஜ்ய ராஜயோகமானது மங்களகரமாக இருக்கும். பல முக்கிய கிரகங்கள் சாதகமான நிலையில் இருப்பதால், இக்காலத்தில் பலவிதமான நன்மைகளைப் பெறுவார்கள். பழைய முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் இக்காலத்தில் கிடைக்கும். வணிகர்களுக்கு நல்ல பண ஆதாயத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். வாகனம், சொத்தும் வாங்கும் வாய்ப்புக்களும் உள்ளன. முக்கியமாக இக்காலத்தில் வேலை தொடர்பாக மேற்கொள்ளும் பயணங்கள் நல்ல பண ஆதாயத்தைத் தரும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications