Latest Updates
-
காரைக்குடி சுரைக்காய் மசியல் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, செம சைடிஷா இருக்கும் -
2 முருங்கைக்காய் இருந்தா.. இந்த பக்குவத்துல கிரேவி செய்யுங்க.. சாதம், சப்பாத்தி-ன்னு எல்லாத்தும் அள்ளும்.. -
வெயில் கொடுமையா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும்… வீடு ஏசி இல்லாமலே ஜில்லுனு இருக்கும்! -
புதன் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இதயம் பெரிய ஆபத்தில் இருப்பதை உணர்த்தும் விசித்திரமான 5 அறிகுறிகளை பட்டியலிட்ட இதய நோய் நிபுணர்! -
வெயில் கொடுமையா? இந்த 3 வாஸ்து செடிகள் இருந்தா போதும், வீடு ஜில்லென்று மாறும்! -
தேர்தலும், அரசியல் கட்சிகளும் இல்லாத அதிசய நாடுகள் - இந்த நாடுகளில் ஏன் தேர்தல் நடத்தப்படுவதில்லை தெரியுமா? -
Tamil Nadu Election Results 2026: நடிகர்களின் கட்சிகளும்.. முதல் தேர்லில் பெற்ற வாக்குகளும்.. - ஓர் பார்வை -
ஒரே நாளில் உருவாகும் இரட்டை துவித்வாதச யோகம்: மே 11-ல் இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் சீக்கிரம் குறையும்...
இந்த ராசிகளில் பிறந்தவர்கள் சிலவிஷயங்களில் கோழையாக இருப்பார்களாம் தெரியுமா?
ஜோதிட சாஸ்திரத்தில் சில ராசிக்காரர்களுக்கு மோதல்களை தவிர்க்க அமைதியாக இருப்பது, முடிவெடுப்பதில் சிக்கல், மோசமான முடிவுகள் போன்றவற்றை நினைத்து பயப்படுபவர்களாக இருப்பார்கள்.
ஆங்கிலத்தில் " முதுகெலும்பை வளர்த்துக்கொள்ளுங்கள் " என்று ஒரு சொற்றொடரை அடிக்கடி உபயோகிப்பார்கள். இதன் அர்த்தம் என்னவெனில் உங்களுக்காக நீங்கள் தைரியமாக நிற்க வேண்டும், அனைத்திற்கும் மற்றவர்களின் துணையை எதிர்பார்த்து காத்திருக்கக்கூடாது. உங்களிடம் துணிவும், திறமையும் இருந்தால் உங்களின் முதுகெலும்பு எப்பொழுதும் நேராகவும், வலிமையாகவும் இருக்கும் என்று கூறுவார்கள்.

ஜோதிட சாஸ்திரத்தில் சில ராசிக்காரர்களுக்கு மோதல்களை தவிர்க்க அமைதியாக இருப்பது, முடிவெடுப்பதில் சிக்கல், மோசமான முடிவுகள் போன்றவற்றை நினைத்து பயப்படுபவர்களாக இருப்பார்கள். இவர்கள் நல்லவராக இருக்கலாம் ஆனால் விருப்பப்படி வாழ முடியாத கோழையாக சில விஷயங்களில் இருப்பார்கள். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் இந்த பிரச்சினையுடன் இருப்பார்கள் என்று பார்க்கலாம்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு பொதுவாகவே நல்ல முடிவுகளை விரைவாக எடுக்கும் திறன் இருக்காது. சிலசமயங்களில் ஒருவர் முடிவெடுக்க பயப்படுவதற்குப் பின்னால் இருக்கும் காரணம் அதனால் ஏற்படும் விளைவுகளை நினைத்து பயப்படுவதுதான். அவர்களுக்கு முதுகெலும்பு இருந்தால், மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதை அவர்கள் பொருட்படுத்த மாட்டார்கள், மேலும் தன்னுடைய உள்ளுணர்வைக் காட்டிலும் மற்றவர்களின் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கமாட்டார்கள். மிதுனம் இரட்டையர்களின் அடையாளம் என்பதால் அவர்கள் இரு மனம் கொண்டவர்கள், ஆனால் அந்த இரு மனமும் ஒரு முடிவை ஏற்றுக்கொள்வதில் நிறைய சிக்கல்களை எதிர்கொள்ளும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்கள் விமர்சனத்தை ஏற்றுக்கொள்ளும் விஷயத்தில் முதுகெலும்பை வளர்த்துக் கொள்ள வேண்டும். இவர்கள் அதனை விரும்புவதில்லை என்பது மட்டும் முக்கியமல்ல, ஒரு எதிர்மறையான கமெண்டில் இருந்து வெளிவர இவர்களுக்கு நீண்ட காலம் தேவைப்படும். துலாம் ராசிக்காரர்கள் ஒருபோதும் அவர்கள் மீதான விமர்சனங்களை முழுமனதுடன் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அப்படி அவர்கள் ஏற்றுக்கொண்டால் அவர்கள் நடிக்கிறார்கள் என்று அர்த்தம். விமர்சனம், எவ்வளவு ஆக்கபூர்வமானதாக இருந்தாலும், துலாம் அதனை திறனைக் கொண்டுள்ளது. காலம் கடக்கும்போது பெரும்பாலான மக்கள் விமர்சனத்தை மறந்திருப்பார்கள் என்றாலும், துலாம் அதை நினைவில் வைத்திருப்பார், அதைப் பற்றிய சிந்தனை மட்டுமே அவர்களை மீண்டும் காயப்படுத்தும்.

மீனம்
மிகவும் நல்லவர்களாக இருப்பவர்கள் நிச்சயம் தங்கள் முதுகெலும்பை வளர்த்துக் கொள்ள வேண்டும், அதற்கு சிறந்த உதாரணம் மீன ராசிதான். தன்னை காயப்படுத்தியவர்களிடம் கூட இவர்கள் மென்மையாக நடந்து கொள்வார்கள், அனைவரையும் எளிதில் மன்னிப்பது, இவர்களை மீண்டும் மீண்டும் மற்றவர்களுக்கு காயப்படுத்தும் தைரியத்தைக் கொடுக்கும். இவர்கள் நிலைமையைச் சரி செய்ய நேரம் எடுத்துக் கொள்ளாவிட்டால், அவர்களுக்கு அநீதி இழைத்த நபரை அவர்களின் நம்பகத்தன்மையை நிரூபிக்காமல் மீண்டும் தங்கள் வாழ்க்கையில் அனுமதித்தால், அவர்கள் வேண்டுமென்றே ஆபத்தான நடத்தை முறையை மீண்டும் செய்கிறார்கள்.

தனுசு
மற்றவர்களாலும் அவர்களின் பிரச்சினைகளாலும் இவர்கள் எளிதில் திசைதிருப்பப்படலாம். அவர்கள் காப்பாற்ற முயற்சிக்கும் அனைவரையும் அவர்களால் காப்பாற்ற முடியாது என்பதை உணர்ந்து கொள்ளவேண்டும். சிலசமயம் இவர்கள் தங்களுக்கும், தங்களின் தேவைகளுக்கும் முன்னுரிமை அளிக்க கற்றுக்கொள்ள வேண்டும். இவர்களால் முரண்பாடாக இருக்க முடியாது அதற்கு காரணம் இவர்களை சுற்றியிருக்கும் கவனச் சிதறல்கள்தான். இவர்களின் முரண்பாடுகள்தான் இவர்களின் இலட்சியத்தை அடைய வைக்கும். தனுசு மக்கள் மீது சரியான நம்பிக்கையைச் செலுத்தும் நேரங்கள் உள்ளன, அவர்கள் இறுதியில் சரியானதைச் செய்வார்கள், ஆனால் அதற்கு முன் அவர்கள் நிறைய காயம் பட்டிருப்பார்கள்.

கடகம்
மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற பயம் கடக ராசிக்காரர்களுக்கு எப்பொழுதும் அதிகமிருக்கும். இவர்கள் எப்பொழுதும் மற்றவர்களுக்கு தன்னுடைய சிறந்த தோற்றத்தை வெளிப்படுத்த விரும்புவார்கள். மேலும் மற்றவர்களுக்கு எப்பொழுதும் தங்கள் மீது நல்ல அபிப்பிராயம் இருக்க வேண்டுமென்று எதிர்பார்ப்பார்கள். ஒருவரைப் பற்றி இவர்களுக்கு சரியான அபிப்பிராயம் இல்லை என்றால் இவர்கள் அதனை ஒருபோதும் வெளிப்படுத்தமாட்டார்கள். அவர்கள் மிகவும் உணர்திறன் உடையவர்கள் மற்றும் மிகவும் உணர்ச்சிவசப்படுவார்கள், மற்றவர்களுக்கு தங்களை பிடிக்கவில்லை என்று இவர்கள் நினைத்தால் அதனை நினைத்து கவலைப்படுவார்கள்.



Click it and Unblock the Notifications