Just In
- 18 min ago Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- 57 min ago சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- 1 hr ago புடவை கட்டினால் புற்றுநோய் வருகிறதாம்.. ஆய்வுகள் கூறும் அதிர்ச்சி தகவல்..!
- 2 hrs ago வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
Don't Miss
- News ‛‛குழந்தைகளை தண்டிக்க கூடாது’’.. NCPCR ரூல்ஸ்ஸை அமல்படுத்த பள்ளி கல்வித்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
- Automobiles இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- Technology ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.12,498 போதும்.. 50MP செல்பி கேமரா.. OZO ஆடியோ.. அறிமுகமானது HMD போன்கள்.. எந்த மாடல்?
- Movies தங்கலான் திரைப்பட இசை..ஜிவி பிரகாஷ் என்ன சொல்றாரு பாருங்க.. சம்பவம் இருக்காம்
- Finance ஹார்லிக்ஸ் இனி ஹெல்த் ட்ரிங்க் இல்ல.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
இந்த 5 ராசிக்காரங்க உங்க பலவீனத்தை பயன்படுத்தி உங்களை மோசமா புண்படுத்துவங்களாம்.... உஷாரா இருங்க...!
ஒருவரின் பலவீனத்தை பயன்படுத்தி கொடுமைப்படுத்துவது மிகவும் மோசமான விஷயங்களில் ஒன்றாகும். உதவியற்ற உணர்வு மற்றும் உங்கள் துயரத்தை குரல் கொடுக்க முடியாமல் இருப்பது மனதை வருத்தப்படுத்தும்.
ஒருவரின் பலவீனத்தை பயன்படுத்தி கொடுமைப்படுத்துவது மிகவும் மோசமான விஷயங்களில் ஒன்றாகும். உதவியற்ற உணர்வு மற்றும் உங்கள் துயரத்தை குரல் கொடுக்க முடியாமல் இருப்பது மனதை வருத்தப்படுத்தும். இந்த கொடுமைப்படுத்தப்பட்ட உணர்வு ஒரு உணர்ச்சி வடுவை விட்டு விடுகிறது, இது பொதுவாக குணமடைய பல ஆண்டுகள் ஆகும்.
கொடுமைப்படுத்துபவர்கள் உள் பிரச்சினைகளைக் கையாளுகிறார்கள். அவர்கள் உணரும் அதே வலியை மற்றவர்களுக்கும் உணர விரும்புகிறார்கள். எனவே ஒருவரை கொடுமைப்படுத்துவதற்கும் காயப்படுத்துவதற்கும் அதிக தூரம் செல்லும் நபர்களைத் தவிர்ப்பது அவசியம். ஜோதிட சாஸ்திரத்தின் படி சில ராசிக்காரர்கள் இந்த குணத்தை கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்கள் யாரென்று இந்த பதிவில் பார்க்கலாம்.
தனுசு
இவர்கள் மற்றவர்களை வேடிக்கையாக பார்க்க விரும்புகிறார்கள், ஏனெனில் இது அவர்களுக்கு வேடிக்கையாகவும் விளையாட்டுகளாகவும் இருக்கிறது. அவர்கள் எளிதாகப் கொடுமைப்படுத்தும் நபர்கள், அவர்கள் மற்றவர்களின் உணர்வுகளை பொருட்டாக கருதாமல் இருப்பதால் அது அவர்களை மகிழ்விக்கிறது. அவர்கள் அந்த நபருக்கு உடல்ரீதியாக தீங்கு செய்ய மாட்டார்கள், ஆனால் நிச்சயமாக அவர்கள் மற்றவர்களை வைத்து வேடிக்கையாக கொடுமைப்படுத்தி காயப்படுத்துவார்கள்.
ரிஷபம்
இவர்கள் மிகவும் பிடிவாதமானவர்கள், உண்மையில், அவர்கள் ஒருவர் மீது கண்வைத்து விட்டால் மிகவும் இரக்கமற்றவர்களாக மாறிவிடுவார்கள். யாராவது தங்களைப் பற்றி ஏதாவது கருத்து தெரிவிப்பதை அவர்கள் கவனித்தால், அதை முற்றிலும் மறுப்பார்கள். அவர்கள் கருத்து சொன்னவர்களை பழிவாங்காமல் விடமாட்டார்கள், பின்னர் அந்த நபரை தொடர்ந்து கஷ்டப்படுத்துவார்கள்.
மிதுனம்
இவர்கள் சில நேரங்களில் நட்பாகவும், அடுத்த சில நிமிடங்களிலேயே மிகவும் மோசமானவராக மாறலாம். அவர்களின் இரட்டை முகம் கொண்ட ஆளுமை கண்டறிவது மிகவும் கடினம், ஏனெனில் அவர்கள் மற்றவர்களுடன் சேர்ந்து உங்களை அழவைப்பார்கள், பின்னர் மற்றவர்கள் விலகிச் சென்ற பிறகு உங்களுக்கு ஆறுதல் கூறுவார்கள். அவர்கள் இருபுறமும் வேடிக்கை பார்க்க விரும்புகிறார்கள்.
கும்பம்
இவர்கள் யாரையும் மிரட்டும் மற்றும் கொடூரமானவர்களாக இருக்கலாம், ஏனென்றால் மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை. அவர்களிடம் குறைந்த அளவு கருணை இருக்கிறது, அவர்களின் மகிழ்ச்சிக்காக ஒருவரை புண்படுத்துவதற்காக அவர்கள் சுயநலமாக சிந்திப்பார்கள். இதனை அவர்கள் விரும்பாமல் இருக்கலாம், ஆனால் அவர்கள் மற்றவர்களை கட்டுப்படுத்த விரும்புகிறார்கள்.
மேஷம்
இவர்கள் அடக்கமானவர்கள் மற்றும் சாந்தகுணமுள்ளவர்களைத் திட்டி, கத்துவார்கள். அவர்களால் கோபத்தை ஒரு போதும் கட்டுப்படுத்த முடியாது, அதனால் அவர்கள் அனைவரையும் வசைபாடுகிறார்கள். ஒருவரை கொடுமைப்படுத்துவதற்கு அவர்களுக்கு ஒரு காரணம் தேவையில்லை. அவர்கள் மனதளவில் ஒருமுறை முடிவெடுத்துவிட்டால், அந்த நபரின் ஆன்மாவை உடைக்கும் வரை அவர்கள் நிறுத்த மாட்டார்கள்.