பூலோக நரகம் என்று அழைக்கப்படும் உலகின் மிகவும் ஆபத்தான சிறைச்சாலைகள் இவைதான்... தைரியமானவங்க படிங்க...!

குற்றம் செய்தவர்களுக்கு மரண தண்டனைக்கு பதிலாக சிறையில் அடைக்கும் வழக்கம் மெசபடோமியா, எகிப்து மற்றும் பழங்கால ரோம் கலச்சாரங்களிலேயே இருந்து வைத்துள்ளது.

சிறைச்சாலைகள் எப்போதும் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் ஒரு இடமாக இருந்து வருகிறது. குற்றம் செய்தவர்களுக்கு மரண தண்டனைக்கு பதிலாக சிறையில் அடைக்கும் வழக்கம் மெசபடோமியா, எகிப்து மற்றும் பழங்கால ரோம் கலச்சாரங்களிலேயே இருந்து வைத்துள்ளது. இன்றும் இருக்கும் கி.மு ஒன்றாம் நூற்றாண்டின் பாதாள சிறைகள் அதற்கு ஆதாரமாக உள்ளது. ஆங்கிலேய அரசர் இரண்டாம் ஹென்றி 1166 ஆம் ஆண்டு முதல் சிறைச்சாலையை ஆங்கிலேய நீதி முறைமையின் முன்னேற்றமாக நியமித்தார். 18 ஆம் நூற்றாண்டில், தத்துவஞானி ஜெர்மி பெந்தம் சிறைச்சாலைகள் புனர்வாழ்வு மையங்களாக மற்றும் தனிமைச் சிறைகளாக பயன்படுத்தப்பட வேண்டும் என்று வாதிட்டார்.

Worst Prisons in the World in Tamil

இப்படி சிறைச்சாலைகள் வரலாறு முழுவதும் பல்வேறு பரிமாணங்களைக் கண்டது. இரண்டாம் உலகப்போருக்கு பின் போர்கைதிகளை அடைத்து வைக்க உலகம் முழுவதும் பல சிறைச்சாலைகள் கட்டப்பட்டன. அவற்றில் பல இன்றும் உபயோகத்திலும் உள்ளன. சிறைச்சாலைகள் செய்த தவறுக்கும் தண்டனைக் கொடுக்கவும், அதனை நினைத்து வருந்தவும் உதவும் இடமாக இருக்க வேண்டும். ஆனால் எதார்த்தத்தில் எந்த சிறையும் அப்படி இருப்பதில்லை. சொல்லப்போனால் பெரும்பாலான சிறைகள் சித்திரவதைக் கூடங்களாவே இருக்கின்றன. இன்றும் சில சிறைச்சாலைகள் பூலோக நரகம் என்று அழைக்கப்படும் அளவிற்கு மோசமான இடங்களாக இருக்கின்றன. இந்த பதிவில் உலகின் சில ஆபத்தான சிறைச்சாலைகளைப் பற்றி விரிவாக பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பிளாக் டால்பின் சிறை, ரஷ்யா

பிளாக் டால்பின் சிறை, ரஷ்யா

இந்த சிறை அதன் கடுமையான நடைமுறைகள் மற்றும் சிறை ஊழியர்களுக்கு பெயர் பெற்றது, ஏனெனில் இங்குள்ள சிறைக்கைதிகள் மிகவும் ஆபத்தானவர்கள், எனவே அவர்களை இரக்கத்துடன் நடத்த முடியாது. அவர்கள் பகலில் ஓய்வெடுக்கவோ அல்லது உட்காரவோ அனுமதிக்கப்படுவதில்லை, மேலும் அவர்கள் வேறு எங்காவது கொண்டு செல்லப்பட வேண்டும் என்றால் அவர்கள் மிகவும் பாதுகாப்பாகவும் கண்கள் கட்டப்பட்டும் இடமாற்றம் செய்யப்படுகிறார்கள்.

கரண்டிரு பெனிடென்ஷியரி, பிரேசில்

கரண்டிரு பெனிடென்ஷியரி, பிரேசில்

தென் அமெரிக்காவில் உள்ள பிரேசிலில் உள்ள கரண்டிரி சிறைச்சாலையானது வன்முறை மற்றும் உடல்நலக்குறைவு ஆகியவற்றால் உலகின் மிகவும் ஆபத்தான சிறைச்சாலையாக உள்ளது. பெரும்பாலான சிறைச்சாலைகளில் சண்டையிடுவது மிகப்பெரும் பிரச்சினையாக இருக்கும், அந்த வகையில் இந்த கரண்டிரு சிறைச்சாலை பல கைதிகளை வன்முறையால் இழந்துள்ளது. மேலும் சிறையிலுள்ள கைதிகளில் ஐவரில் ஒருவருக்கு எச்.ஐ.வி உள்ளது.

அல் டி சியுடாட் பாரியோஸ்

அல் டி சியுடாட் பாரியோஸ்

MS 13 கேங் மற்றும் பேரியோ 18 கேங் என இரண்டு பிரபலமான கேங் இந்த சிறையில் இருப்பதால் இந்த சிறை உலகளவில் மிகவும் ஆபத்தான சிறைகளில் ஒன்றாகும். இந்த சிறைச்சாலையின் வாழ்க்கை நிலைமை மிகவும் பரிதாபமாகவும், ஆபத்தானதாகவும் இருக்கும், இந்த இரண்டு கேங் இடையே அடிக்கடி நடக்கும் வன்முறையால் சிறைக்காவலர்கள் கூட சிறைக்குள் நுழைய பயப்படுகிறார்கள், ஏனெனில் பல சிறைக்காவலர்கள் இந்த மோதல்களால் இறந்துள்ளனர்.

பெடக் தீவு சிறை, ரஷ்யா

பெடக் தீவு சிறை, ரஷ்யா

இந்த சிறை ரஷ்யாவில் உள்ள மிக மோசமான குற்றவாளிகளுக்கானது மற்றும் அவர்கள் மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் மோசமாக சித்திரவதை செய்யப்படுவார்கள். இங்குள்ள சிறைக்கைதிகள் ஒரு நாளைக்கு இருபது மணிநேரம் சிறிய அறைகளில் அடைத்து வைக்கப்பட்டு, வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே வெளியில் தொடர்பு கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த சிறையில் கொலைகாரர்கள், நரமாமிசம் உண்பவர்கள் மற்றும் கற்பழிப்பவர்கள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.

பேங் குவாங் சிறைச்சாலை, பாங்காக்

பேங் குவாங் சிறைச்சாலை, பாங்காக்

நாட்டின் புனிதத்திற்கு அச்சுறுத்தலாக இருப்பவர்கள் என்று நம்பப்படும் குற்றவாளிகளை அடைத்து வைக்க இந்த சிறை பயன்படுத்தப்படுகிறது, இதன் காரணமாக அவர்கள் உடல் மற்றும் உணர்ச்சி சித்திரவதை மூலம் குறைந்தபட்ச வலிமை மட்டத்தில் வைக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே உணவளிக்கப்படுகிறது, மேலும் ஆயுள் தண்டனைக்காக காத்திருப்பவர்களுக்கு கால் சங்கிலிகள் அணிவிக்கப்பட்டிருக்கும்.

லா சபனேட்டா சிறை

லா சபனேட்டா சிறை

1994 மற்றும் 1995 ஆம் ஆண்டுகளில் 300 க்கும் மேற்பட்ட கைதிகள் சிறையில் நடந்த வன்முறை துப்பாக்கிச் சண்டையில் இறந்ததால் இந்த சிறை உலகின் ஆபத்தான சிறையாக மாறியது. இது தென் அமெரிக்காவின் வெனிசுலாவில் அமைந்துள்ளது மற்றும் சிறை ஊழியர்களின் எண்ணிக்கை மிகக்குறைவாகவே உள்ளது. எனவே அடிக்கடி சிறைக்குள் வன்முறைகள் வெடிக்கும்.

அல்காட்ராஸ் தீவு சிறை

அல்காட்ராஸ் தீவு சிறை

இந்த சிறை சிறையிலிருந்து தப்பிக்கும் பல முயற்சிகளுக்குப் பெயர் போனது, இது மே 1946 இல் நடந்த "தி பேட்டில் ஆஃப் அல்காட்ராஸ்" என்று அழைக்கப்படும் முயற்சியாகும். இந்தச் சிறைச்சாலை வரலாற்றில் மிகவும் ஆபத்தான சில குற்றவாளிகளை அடைத்தது, இது கலிபோர்னியாவின் அல்காட்ராஸ் தீவில் அமைந்துள்ளது. இது 1963 முதல் மூடப்பட்டது.

மெண்டோசா சிறை, அர்ஜென்டினா

மெண்டோசா சிறை, அர்ஜென்டினா

இந்த சிறைச்சாலை அர்ஜென்டினாவில் அமைந்துள்ளது, இது கடுமையான மற்றும் மனிதாபிமானமற்ற வாழ்க்கை நிலைமைகளின் விளைவாக ஏற்படும் சிறைக் கலவரங்களுக்கு மிகவும் பிரபலமானது. கைதிகள் வெறும் தரையில் தூங்கவும், பாட்டில்களில் சிறுநீர் கழிக்கவும், பிளாஸ்டிக் பைகளில் மலம் கழிக்கவும், மிகச்சிறிய செல்களைப் பயன்படுத்தவும் செய்கிறார்கள். ஆண்டுதோறும் ஆரோக்கியப் பிரச்சினைகளால் பல கைதிகள் மரணிக்கின்றனர்.

தியர்பாகிர் சிறை:

தியர்பாகிர் சிறை:

துருக்கியின் தியர்பாகிரில் உள்ள தியர்பாகிர் சிறைச்சாலை அதன் மனிதாபிமானமற்ற சித்திரவதைகளுக்கு மிகவும் பிரபலமானது. சிறுவர்களும் இந்த சிறையில் அடைக்கப்படுவதால் இங்கு அவர்கள் பாலியல் துஸ்ப்பிரயோகத்திற்கு ஆளாகிறார்கள் மற்றும் சிறைக்காவலர்கள் கைதிகள் மீது கட்டுப்பாடற்ற வன்முறைகளை நிகழ்த்துகிறார்கள். இங்கு 1996ஆம் ஆண்டு சிறைக் காவலர்கள் 10 கைதிகளை அடித்துக் கொன்றதால் இந்த சிறை மிகவும் பிரபலமானது.

கேம்ப் 22, வட கொரியா

கேம்ப் 22, வட கொரியா

ஹோரியோங் வதை முகாம் என்று அழைக்கப்படும் கேம்ப் 22 வட கொரியாவில் ஒரு சிறைச்சாலையாக இருந்தது. இது கடுமையான மனித உரிமை மீறல், பரிசோதனை மற்றும் குழந்தைகள் உட்பட மக்களை துஷ்பிரயோகம் செய்வதில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டது, இருப்பினும் வட கொரியா அரசாங்கம் அதன் இருப்பை மறுத்துள்ளது மற்றும் 2012-ல் அது மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion