Latest Updates
-
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...!
2022-ல் சனியின் கோப பார்வை உங்க மேல விழக்கூடாதா? அப்ப மறக்காம நாளைக்கு இத செய்யுங்க...
2022 ஆம் ஆண்டு சனிக்கிழமை அன்று பிறக்கிறது. சனி பகவானுக்கு மிகவும் பிடித்த நாளான சனிக்கிழமை அன்று புத்தாண்டு பிறப்பதால், இந்த 2022 ஆம் ஆண்டு இன்னும் சிறப்பானதாக கருதப்படுகிறது.
2022 ஆம் ஆண்டு மிகவும் சிறப்பானது. ஏனெனில் இந்த ஆண்டில் முக்கியமான கிரக பெயர்ச்சிகளான குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சிகள் என பல நிகழ்கின்றன. இதனால் பலரது வாழ்வில் பெரிய மாற்றங்கள் ஏற்படப் போகின்றன. அதோடு 2022 ஆம் ஆண்டு சனிக்கிழமை அன்று பிறக்கிறது. சனி பகவானுக்கு மிகவும் பிடித்த நாளான சனிக்கிழமை அன்று புத்தாண்டு பிறப்பதால், இந்த 2022 ஆம் ஆண்டு இன்னும் சிறப்பானதாக கருதப்படுகிறது.

பொதுவாக சனிக்கிழமைகளில் நாம் செய்யும் சில செயல்கள் அல்லது விஷயங்கள் சனி பகவானின் அருளைப் பெற உதவும். இந்த நாளில் நல்ல விஷயங்களை செய்தால், சனிபகவானின் பாச பார்வையைப் பெறலாம். அதுவே கெட்ட விஷயங்களை செய்தால், சனியின் கோபப் பார்வையை பெறக்கூடும். இப்போது 2022 ஆம் ஆண்டில் உங்கள் மீது சனியின் கோப பார்வை விழாமல் இருக்க புத்தாண்டின் முதல் நாளன்று செய்ய வேண்டிய மற்றும் செய்யக்கூடாத விஷயங்களைக் காண்போம்.

சனிக்கிழமையில் வரும் 2022 ஜனவரி 01
பஞ்சாங்கத்தின் படி, ஜனவரி 01, 2022 சனிக்கிழமையில் வருகிறது. இந்த நாள் மார்கழி மாதத்தின் சதுர்த்தசி திதி ஆகும். மேலும் 2022 ஜனவரி 01 மாத சிவராத்திரியும் கூட. இந்நாளில் சிவபெருமானுக்கு சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது. மாத சிவராத்திரி தினம் சிவபெருமானுக்கு உரியதாக இருந்தாலும், சனிக்கிழமை என்பதால் இந்நாளில் சனி பகவானையும் வழிபடுவதும் நல்லது. பொதுவாக சனிக்கிழமைகளில் ஒருவர் சனிபகவானை வழிபட்டு வருவதன் மூலம், சனிபகவான் விரைவில் மகிழ்ச்சி அடைவார். எனவே சனி பகவானை வழிபட சிறந்த நாளாக சனிக்கிழமை கருதப்படுகிறது.

ஆண்டு முழுவதும் கிட்டும் சனி பகவானின் அருள்
பொதுவாக புதிய ஆண்டு தொடங்கும் போது ஆண்டின் முதல் நாளில் சுப காரியங்களை செய்தால், அந்த ஆண்டு முழுவதும் நல்ல பலன்கள் கிடைக்கும் என்பது ஓர் நம்பிக்கை. அதுவும் இந்த புத்தாண்டு சனிபகவானுக்கு உரிய சனிக்கிழமையில் வருகிறது மற்றும் இந்நாளன்று மாத சிவராத்திரியும் கூட. எனவே இந்த 2022 புத்தாண்டின் முதல் நாளில் சனி பகவான் மற்றும் சிவபெருமானை வழிபடுவது மிகவும் நல்லது. உண்மையில் சனி பகவான் சிவபெருமானின் தீவிர பக்தராவார். சனி பகவான் நீதிமான் என்பதால் தான் சிவபெருமான் நவகிரகங்களுக்கும் நடுவராக ஆக்கினார். ஆகவே 2022 புத்தாண்டின் முதல் நாளில் சனி பகவான் மற்றும் சிவ பெருமானை வழிபடுவதன் மூலம், அவர்களின் ஆசி ஆண்டு முழுவதும் கிடைக்கும்.

5 ராசிகளின் மீது சனியின் பார்வை
தற்போது 5 ராசிகளின் மீது சனியின் பார்வை உள்ளது. சனியின் தையா மிதுனம் மற்றும் துலாம் ராசியிலும், ஏழரை சனி தனுசு, மகரம், கும்பம் ஆகிய ராசிகளிலும் நடக்கிறது. ஆகவே ஜனவரி 01, 2022 அன்று சனிபகவானை இந்த 5 ராசிக்காரர்கள் வணங்கினால் நல்ல பலன்கள் கிடைக்கும்.

01 ஜனவரி 2022 புத்தாண்டு அன்று செய்ய வேண்டியவை
ஜனவரி 1, 2022 அன்று சனி பகவானை குளிர்விக்க பின்வரும் விஷயங்களை செய்யலாம். அவையாவன:
* சனி பகவான் கோவிலுக்கு சென்று சனி பகவானை வழிபடலாம்.
* கடுகு எண்ணெயை சனி பகவானுக்கு வழங்கலாம்.
* கருப்பு உளுத்தம் பருப்பை தானமாக வழங்கலாம்.
* கருப்பு நிற போர்வையை ஏழை எளியோருக்கு தானமாக வழங்கலாம்.
* சனி சாலிசா அல்லது சனி ஆரத்தியை சனிக்கிழமைகளில் பாராயணம் செய்யலாம்.
* நோயாளிகளுக்கு சேவை செய்யலாம்.

செய்யக்கூடாதவை
சனி பகவானின் கோபத்தைத் தவிர்க்க பின்வரும் விஷயங்களை ஒருவர் கட்டாயம் மனதில் கொள்ள வேண்டும். அவையாவன:
* கடினமாக உழைப்பவர்களை ஒருபோதும் காயப்படுத்தாதீர்கள்.
* கடினமாக உழைப்பவர்களை மதிக்க வேண்டும்.
* பொருளாதாரத்தில் பலவீனமாக இருப்பவர்களை ஒருபோதும் கேலி செய்யக்கூடாது.
* விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு தீங்கு செய்யாதீர்கள்.
* சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காதீர்கள்.
* போதைப் பழக்கம், தவறான சகவாசம் மற்றும் கெட்ட பழக்கங்களிலிருந்து விலகி இருங்கள்.



Click it and Unblock the Notifications











