Latest Updates
-
வார ராசிபலன் (22 March 2026-28 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு சிரமங்கள் அதிகரிக்கும்.. -
Tamil Nadu Election 2026: பாரம்பரிய தமிழ் உணவுகளை உட்கொள்ளும் தமிழகத் தலைவர்கள்! -
முட்டையும், பிரட்டும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
கோடையில் எப்பவும் பளிச்சுன்னு பிரகாசமா தெரியணுமா? அப்ப பப்பாளியை வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
புதன் பெயர்ச்சியால் உருவாகும் நீச்சபங்க ராஜயோகம்: ஏப்ரலில் இந்த 3 ராசிக்கு தொழிலில் டபுள் லாபம் கிடைக்கும்... -
இந்த ரசத்தை அடிக்கடி செஞ்சு சாப்பிடுங்க.. உடல் கொழுப்பும், எடையும் சர்ர்-ன்னு குறையும்.. -
Ramzan Eid 2026: ரம்ஜான் பிரியாணி சாப்பிட்டு அஜீரண கோளாறு வரக்கூடாதா? அப்ப இத ஒரு டம்ளர் குடிங்க போதும்.. -
பீன்ஸ் பருப்பு கூட்டு ரெசிபி... இந்த மாதிரி செஞ்சு கொடுங்க... பீன்ஸ் பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க! -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
ரம்ஜான் ஸ்பெஷல் தெலுங்கானா மட்டன் கறி - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க..
Shani Uday 2022: பிப்ரவரி 24 முதல் இந்த 5 ராசிகளுக்கு சனி பகவானின் அருள் முழுசா கிடைக்கப் போகுது...
ஜோதிடத்தின் படி, சனி பகவானின் உதயத்தால் 5 ராசிக்காரர்கள் பிப்ரவரி 24 ஆம் தேதியில் இருந்து நற்பலன்களைப் பெறப் போகிறார்கள். அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைத் தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
நவகிரகங்களில் ஒருவரது கர்மாவிற்கு ஏற்ற பலனை அளிப்பவர் மற்றும் நீதிமான் என்று அழைக்கப்படுபவர் சனி பகவான். இந்த சனி பகவானைக் கண்டு பலரும் அஞ்சுவதுண்டு. ஏனெனில் இவர் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர்ந்தால், அது அனைத்து ராசிகளிலும் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இப்படிப்பட்ட சனி பகவான் 2 1/2 வருடத்திற்கு ஒருமுறை ராசியை மாற்றுவார். கிரகங்களிலேயே மிகவும் மெதுவாக நகரக்கூடியவரும் இவரே ஆவார். சனி பகவான் ராசியை மாற்றுவதற்கு முன் அஸ்தமனமாகி உதயமாவார்.

அந்த வகையில் சனி பகவான் 2022 ஜனவரி மாதத்தில் அஸ்தமனமானார். 2022 பிப்ரவரி 24 அன்று உதயமாகி, இயல்பு நிலையில் பயணிக்கவுள்ளார். சனி பகவானின் உதயத்தால் சில ராசிக்காரர்களுக்கு வெற்றியும், தொழிலில் புதிய வாய்ப்புக்களும் கிடைக்கும். ஜோதிடத்தின் படி, சனி பகவானின் உதயத்தால் 5 ராசிக்காரர்கள் பிப்ரவரி 24 ஆம் தேதியில் இருந்து நற்பலன்களைப் பெறப் போகிறார்கள். அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைத் தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

மேஷம்
மேஷ ராசியின் 10 ஆவது வீடான தொழில் வீட்டில் சனி உதயமாகிறார். இதனால் செவ்வாயை அதிபதியாக கொண்ட மேஷ ராசிக்காரர்கள், இக்காலத்தில் பணியிடத்தில் ஒரு பெரிய பதவியைப் பெற வாய்ப்புள்ளது. பல புதிய வேலை வாய்ப்புக்களை உங்களைத் தேடி வரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வருமான உயர்விற்கான வாய்ப்புக்கள் உள்ளன. வியாபாரிகள் நல்ல லாபத்தைக் காண்பார்கள்.

ரிஷபம்
சனி உதயமாகும் போது ரிஷப ராசியில் ராஜ யோகம் உருவாகிறது. ஆகவே இக்காலத்தில் இந்த ராசிக்காரர்கள் வேலைகள் அனைத்திலும் வெற்றியைக் காண்பார்கள். அரசியலில் தொடர்புடையவர்களுக்கு இக்காலத்தில் பெரிய பதவி கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன.

கடகம்
கடக ராசியின் 7 ஆவது வீட்டில் சனி பகவான் உதயமாகிறார். இதனால் இக்காலத்தில் கூட்டு பணிகள் அனைத்திலும் வெற்றியைக் காண்பீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணைக்கு முழு ஆதரவு கிடைக்கும். இரும்பு, எண்ணெய் மற்றும் சுரங்கம் போன்ற சனி தொடர்பான வியாபாரம் செய்பவர்கள் இக்காலத்தில் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள்.

துலாம்
துலாம் ராசியின் வாகனம், தாய் மற்றும் மகிழ்ச்சி போன்றவற்றின் வீடான 4 ஆவது வீட்டில் சனி உதயமாகிறார். துலாம் ராசியின் அதிபதி சுக்கிரன். சனிக்கும் சுக்கிரனுக்கும் இடையே நட்புறவு உள்ளது. எனவே இக்காலத்தில் நிதி நிலையில் பெரிய முன்னேற்றம் ஏற்படும். பணியிடத்தில் உங்கள் செயல்திறனுக்காக பாராட்டுக்களைப் பெறுவீர்கள்.

மகரம்
மகர ராசிக்காரர்கள் இக்காலத்தில் நல்ல ராஜ வாழ்க்கையை வாழ்வார்கள். அரசியலில் தொடர்புடையவர்களுக்கு பெரிய பதவி கிடைக்கும். இக்காலத்தில் வியாபாரிகள் புதிய ஒப்பந்தங்களால் நல்ல ஆதாயம் பெற வாய்ப்புள்ளது. பங்கு சந்தையில் முதலீடு செய்து நற்பலன்களைப் பெறுவீர்கள். மேலும் உங்கள் கௌரவம் இக்காலத்தில் உயரும்.



Click it and Unblock the Notifications











