Latest Updates
-
சுக்கிரனால் விபரீத ராஜயோகத்தை பெறப்போவது இந்த 3 ராசிக்காரங்க தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
மாரடைப்பு பற்றிய கட்டுக்கதைகளும், உண்மைகளும்: யாருக்கெல்லாம் மாரடைப்பு வரும் வாய்ப்பு அதிகம் தெரியுமா? -
1 உருளைக்கிழங்கும், 1 கப் தயிரும் இருந்தா.. மதியம் 10 நிமிஷத்துல இந்த சைடுடிஷ் செய்யுங்க.. சாதத்துக்கு அள்ளும் -
டெல்லி-என்சிஆர் புழுதிப் புயல்: வீட்டைப் பாதுகாக்க இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா போதும்! -
புதன் மேஷ ராசியில் அஸ்தமனமாவதால் புது சொத்துக்களை வாங்கிக் குவிக்கப்போகும் அதிர்ஷ்டமுள்ள 3 ராசிகள் இவங்கதான் -
Heatwave Alert: கோடையில் உடல் வறண்டு போகாம இருக்கணுமா? அப்ப இதெல்லாம் தினமும் சாப்பிடுங்க.. -
மணி பிளாண்ட் வளர்க்கும் ரகசியம் தெரியுமா? கோடையில் வீட்டை ஜிலுஜிலுவென மாற்றும் இந்த வாஸ்து டிப்ஸ்! -
பாபா வங்கா கணிப்பு படி 2125-ல் ஏலியன்களை சந்திக்கப்போகும் முதல் நாடு எது தெரியுமா? -
மே மாத சூரிய பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு தொழில் மற்றும் நிதி நிலையில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது! -
செட்டிநாடு வெங்காய கோசு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்..
சனி, சூரியன் மற்றும் குரு தங்கள் சொந்த ராசியில் இருப்பதால் நற்பலனைப் பெறும் ராசிக்காரர்கள்!
சனி, சூரியன் மற்றும் குரு ஆகிய மூன்று கிரகங்களும் தங்கள் சொந்த ராசியில் இருப்பதால், அது சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களைத் தரும். அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
வேத ஜோதிடத்தில் கிரகங்களின் இயக்கம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஒவ்வொரு கிரகமும் அவ்வப்போது தங்கள் ராசியை மாற்றும். அப்படி மாற்றும் போது அது மனித வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தும். அதுவும் ஒரு கிரகம் தனது சொந்த ராசியில் இருந்தால், அது மிகவும் நல்ல பலனை வழங்கும். இந்நிலையில் தற்போது மூன்று முக்கிய கிரகங்கள் தனது சொந்த ராசியில் பயணித்து வருகின்றன. அதாவது சூரியன் சிம்ம ராசியிலும், சனி மகர ராசியிலும், குரு மீன ராசியிலும் இருக்கின்றன.

ஜோதிடத்தில் சூரியன் ஆற்றல், நிர்வாகம், தந்தை, தலைவன் மற்றும் ஆன்மாவின் கிரகமாக கருதப்படுகிறது. சனி கர்மாவின் கிரகமாகும். வியாழன்/குரு, அனைத்து கிரகங்களிலும் மிகவும் மங்களகரமானது. திருமணம் மற்றும் செல்வத்தின் கிரகமாக கருதப்படுகிறது. இந்த மூன்று கிரகங்களும் சொந்த ராசியில் இருப்பதால், அது சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களைத் தரும். அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மிதுனம்
ஆகஸ்ட் 17 ஆம் தேதி சூரியன் சிம்ம ராசிக்கு சென்றார். இந்நிலையில் ஏற்கனவே சனி மற்றும் குரு சொந்த ராசியில் பயணித்து வருகின்றனர். ஆகவே இந்த காலம் மிதுன ராசிக்கு நல்ல பலனைத் தரும். குறிப்பாக தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல வெற்றி கிடைக்கும். தைரியம் மற்றும் வலிமை அதிகரிக்கும். லாபத்திற்கான சிறந்த வாய்ப்புக்கள் கிடைக்கும். இக்காலத்தில் மரியாதை அதிகரிக்கும். அரசியலில் இருப்பவர்களுக்கு இக்காலம் சாதகமாக இருக்கும்.

கடகம்
சொந்த ராசியில் மூன்று கிரகங்கள் இருக்கும் காலமானது கடக ராசிக்காரர்களுக்கு பொற்காலமாக இருக்கும். முக்கியமாக இக்காலத்தில் லட்சுமி தேவியின் அருள் கிடைக்கும். பணம் சம்பாதிப்பதற்கு நல்ல வாய்ப்புக்கள் கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவால் தடைப்பட்ட வேலைகள் அனைத்தும் கூடிய விரைவில் முடியும். பணியிடத்தில் பதவி உயர்வைப் பெற வாய்ப்புள்ளது. நிலுவையில் உள்ள நீதிமன்ற வழக்குகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இக்காலம் அதிர்ஷ்டமானதாக இருக்கும். சூரியன், சனி மற்றும் குரு சொந்த ராசியில் இருப்பதால், இக்காலத்தில் பண மழை பொழியும். தடைப்பட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிக்கப்படும். வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வெளியூர் செல்வதற்கான வாய்ப்புக்கள் உண்டு. முக்கியமாக நல்ல நிதி ஆதாயங்களைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது.



Click it and Unblock the Notifications