Just In
- 4 hrs ago 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- 6 hrs ago தளர்ந்து போன சருமத்தை இறுக்கமாக்கி ஜொலிக்கிற மாதிரி மாத்த ஆசைப்படுறீங்களா? இந்த இயற்கை பொருட்களை யூஸ் பண்ணுங்க
- 6 hrs ago திருமணம் ஆக இருக்கும் இளம்பெண்கள் இந்த ஜூஸை குடியுங்கள்.. முகம் பொலிவுறும்..!
- 7 hrs ago சப்பாத்திக்கு ஒருடைம் உருளைக்கிழங்கு வெச்சு இப்படி கிரேவி செஞ்சு பாருங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
Don't Miss
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
நரகத்தில் இருந்து தப்பிக்க சிவபெருமான் முருகனிடம் கூறிய ரகசியங்கள் என்ன தெரியுமா?
சிவபெருமான் பார்வதி தேவியிடம் மரணமில்லா வாழ்வைப் பற்றியும், மோட்சத்தை அடைவது பற்றியுமான ரகசியத்தைக் கூறினார் என்று நாம் அறிவோம். இந்த ரகசியத்தை சிவபெருமான் முருகப்பெருமானுக்கு ஒருமுறை கூறியது பலரும்
இந்து மதத்தின் மிக முக்கியமான கடவுள் என்றால் அது சிவபெருமான்தான். அதேபோல தமிழ்க்கடவுள் என்று அழைக்கப்படுபவர் முருகன் ஆவார். தமிழகத்தில் முருகன் மிக முக்கிய கடவுளாக இருக்கிறார். சிவபெருமானின் இளைய மகனான முருகப்பெருமான் சூரபத்மன் என்னும் அசுரனை அழிப்பதற்காக சிவபெருமானின் மூன்றாவது கண்ணிலிருந்து ஜோதி வடிவத்தில் உருவாக்கப்பட்டவர்.
சிவபெருமான் பார்வதி தேவியிடம் மரணமில்லா வாழ்வைப் பற்றியும், மோட்சத்தை அடைவது பற்றியுமான ரகசியத்தைக் கூறினார் என்று நாம் அறிவோம். ஆனால் இந்த ரகசியத்தை சிவபெருமான் முருகப்பெருமானுக்கு ஒருமுறை கூறியது பலரும் அறியாத ஒன்றாகும். இந்த பதிவில் சிவபெருமான் முருகனுக்கு அந்த ரகசியத்தை ஏன் கூறினார் என்று பார்க்கலாம்.
முருகனின் சந்தேகம்
தெற்கு பகுதியில் உள்ள மக்களை சூரபத்மனிடம் இருந்து பாதுகாக்க சிவபெருமான் கார்த்திகேயனை அனுப்பினார். ஆனால் தனது பணியை நிறைவேற்றிய பிறகு கைலாயத்திற்கு திரும்ப வந்து மோட்சத்தை அடைய முடியுமா என்ற சந்தேகம் அவருக்கு எழுந்தது. இதற்கு சிவபெருமான் தூய பக்தியுடன் புனித ஸ்தலங்களுக்கு செல்கிற அனைவரும் மோட்சத்தை அடையலாம் என்று பதிலளித்தார்.
முருகனின் கேள்வி
கார்த்திகேயன் அது எந்தெந்த இடங்கள் என்று கேட்டார், ஆசைகள் உதிக்காமல் தூய எண்ணங்கள் மட்டும் உதிக்கும் அந்த இடங்கள் எதுவென்று கேட்டார். இந்த கேள்விக்கு சிவபெருமான் " அனைத்து நதிகளும் புனித கங்கையில் இருந்துதான் உருவாகிறது, எனவே ஒவ்வொரு நதியும் புனித யாத்திரை செய்யக்கூடிய இடம்தான். ங்கள் பாவங்களைக் கழுவ விரும்பும் எவரும் முதலில் இந்த நதிகளின் நீரில் நீராடி, பின்னர் புனித திருமூர்த்தியின் தங்குமிடங்களைப் பார்வையிட வேண்டும் " என்று கூறினார்.
MOST READ: இந்த ராசிகளில் பிறந்தவர்கள் கண்டிப்பாக வைரம் அணியக்கூடாது... இல்லனா ஆபத்துதான்...!
சிவனின் பதில்
காஷி, அயோத்தி, துவாரகா, மதுரா, ராம்தீர்த், புஷ்கர் ஆகிய இடங்களில் தானும், பிரம்மாவும், விஷ்ணுவும் ஒரு கணம் கூட விலகாமல் தங்களை சரணடைபவர்களின் பாவங்களின் மன்னிக்க காத்திருப்பதாக கூறினார். இந்த இடங்களை வெறுமனே பார்வையிடுவது ஒரு நபரை உலகின் அனைத்து துக்கங்களிலிருந்தும் விடுவிக்கும் என்று அவர் கூறினார். இங்கே அவர்கள் தங்களை சரணடையச் செய்து கடவுளிடம் தஞ்சம் பெறலாம்.
கலியுகம்
கலியுகத்தைப் பற்றி சிவபெருமான் கூறும்போது " கோமதி நதியில் புனித நீராடி, பின்னர் கிருஷ்ணருக்கு வணக்கம் செலுத்தும் ஒரு பக்தர் மோட்சத்தை அடைகிறார். வாரணாசியில் உள்ள பஞ்ச்கங்காவில் நீராடுவது பிறப்பு மற்றும் இறப்பு சுழற்சிகளிலிருந்து அவர்களை விடுவிக்கிறது. காஷிக்கு யாத்திரை சென்று விஸ்வநாதருக்கு வணக்கம் செலுத்தும் எவரும் இந்த உலகின் அனைத்து அடிமைத்தனங்களிலிருந்தும் விடுவிக்கப்படுகிறார்கள் " என்று கூறினார்.
நரகத்தில் இருந்து தப்பிக்கும் வழி
நமது புனித நூல்களில் குறிப்பிட்டுள்ளபடி நம்முடைய மூதாதையர்களுக்கு புனித நதிக்கரையில் எள் விதைகள் மற்றும் தண்ணீருடன் தர்ப்பனம் கொடுப்பது நம்மை நரகத்தின் சித்திரவதைகளில் இருந்து பாதுகாக்கும் என்று சிவபெருமான் கூறுகிறார். மகாகாலேஷ்வரை வணங்குவதும் ஒரு மனிதனின் எல்லா பாவங்களையும் நீக்குவதாக சிவபெருமான் கூறினார்.
MOST READ: இந்த விஷயம் தெரிஞ்சா இனிமே நீங்களும் ஒட்டகப்பால்லதான் டீ குடிப்பீங்க...!
கிருஷ்ணர் கூறிய ரகசியம்
ஒரு நபர் தனது வாழ்க்கையில் இந்த யாத்திரைகளை முடித்தவுடன், அவர் கங்கோத்ரி & யமுனோத்ரிக்கு யாத்திரை செல்ல வேண்டும், அங்கு அவர் புனித நீராட வேண்டும், பின்னர் தங்களை பத்ரிநாத்திடம் சரணடைந்து கடைசியில் கேதார்நாத்தில் ஆசீர்வாதம் பெற வேண்டும். இந்த ரகசியத்தை கிருஷ்ணர் இறப்பதற்கு முன் யாத்திரைக்குச் சென்ற பாண்டவர்களுக்கு மோட்சத்தை அடையக் கூறினார்.