Latest Updates
-
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்..
நரகத்தில் இருந்து தப்பிக்க சிவபெருமான் முருகனிடம் கூறிய ரகசியங்கள் என்ன தெரியுமா?
சிவபெருமான் பார்வதி தேவியிடம் மரணமில்லா வாழ்வைப் பற்றியும், மோட்சத்தை அடைவது பற்றியுமான ரகசியத்தைக் கூறினார் என்று நாம் அறிவோம். இந்த ரகசியத்தை சிவபெருமான் முருகப்பெருமானுக்கு ஒருமுறை கூறியது பலரும்
இந்து மதத்தின் மிக முக்கியமான கடவுள் என்றால் அது சிவபெருமான்தான். அதேபோல தமிழ்க்கடவுள் என்று அழைக்கப்படுபவர் முருகன் ஆவார். தமிழகத்தில் முருகன் மிக முக்கிய கடவுளாக இருக்கிறார். சிவபெருமானின் இளைய மகனான முருகப்பெருமான் சூரபத்மன் என்னும் அசுரனை அழிப்பதற்காக சிவபெருமானின் மூன்றாவது கண்ணிலிருந்து ஜோதி வடிவத்தில் உருவாக்கப்பட்டவர்.

சிவபெருமான் பார்வதி தேவியிடம் மரணமில்லா வாழ்வைப் பற்றியும், மோட்சத்தை அடைவது பற்றியுமான ரகசியத்தைக் கூறினார் என்று நாம் அறிவோம். ஆனால் இந்த ரகசியத்தை சிவபெருமான் முருகப்பெருமானுக்கு ஒருமுறை கூறியது பலரும் அறியாத ஒன்றாகும். இந்த பதிவில் சிவபெருமான் முருகனுக்கு அந்த ரகசியத்தை ஏன் கூறினார் என்று பார்க்கலாம்.

முருகனின் சந்தேகம்
தெற்கு பகுதியில் உள்ள மக்களை சூரபத்மனிடம் இருந்து பாதுகாக்க சிவபெருமான் கார்த்திகேயனை அனுப்பினார். ஆனால் தனது பணியை நிறைவேற்றிய பிறகு கைலாயத்திற்கு திரும்ப வந்து மோட்சத்தை அடைய முடியுமா என்ற சந்தேகம் அவருக்கு எழுந்தது. இதற்கு சிவபெருமான் தூய பக்தியுடன் புனித ஸ்தலங்களுக்கு செல்கிற அனைவரும் மோட்சத்தை அடையலாம் என்று பதிலளித்தார்.

முருகனின் கேள்வி
கார்த்திகேயன் அது எந்தெந்த இடங்கள் என்று கேட்டார், ஆசைகள் உதிக்காமல் தூய எண்ணங்கள் மட்டும் உதிக்கும் அந்த இடங்கள் எதுவென்று கேட்டார். இந்த கேள்விக்கு சிவபெருமான் " அனைத்து நதிகளும் புனித கங்கையில் இருந்துதான் உருவாகிறது, எனவே ஒவ்வொரு நதியும் புனித யாத்திரை செய்யக்கூடிய இடம்தான். ங்கள் பாவங்களைக் கழுவ விரும்பும் எவரும் முதலில் இந்த நதிகளின் நீரில் நீராடி, பின்னர் புனித திருமூர்த்தியின் தங்குமிடங்களைப் பார்வையிட வேண்டும் " என்று கூறினார்.

சிவனின் பதில்
காஷி, அயோத்தி, துவாரகா, மதுரா, ராம்தீர்த், புஷ்கர் ஆகிய இடங்களில் தானும், பிரம்மாவும், விஷ்ணுவும் ஒரு கணம் கூட விலகாமல் தங்களை சரணடைபவர்களின் பாவங்களின் மன்னிக்க காத்திருப்பதாக கூறினார். இந்த இடங்களை வெறுமனே பார்வையிடுவது ஒரு நபரை உலகின் அனைத்து துக்கங்களிலிருந்தும் விடுவிக்கும் என்று அவர் கூறினார். இங்கே அவர்கள் தங்களை சரணடையச் செய்து கடவுளிடம் தஞ்சம் பெறலாம்.

கலியுகம்
கலியுகத்தைப் பற்றி சிவபெருமான் கூறும்போது " கோமதி நதியில் புனித நீராடி, பின்னர் கிருஷ்ணருக்கு வணக்கம் செலுத்தும் ஒரு பக்தர் மோட்சத்தை அடைகிறார். வாரணாசியில் உள்ள பஞ்ச்கங்காவில் நீராடுவது பிறப்பு மற்றும் இறப்பு சுழற்சிகளிலிருந்து அவர்களை விடுவிக்கிறது. காஷிக்கு யாத்திரை சென்று விஸ்வநாதருக்கு வணக்கம் செலுத்தும் எவரும் இந்த உலகின் அனைத்து அடிமைத்தனங்களிலிருந்தும் விடுவிக்கப்படுகிறார்கள் " என்று கூறினார்.

நரகத்தில் இருந்து தப்பிக்கும் வழி
நமது புனித நூல்களில் குறிப்பிட்டுள்ளபடி நம்முடைய மூதாதையர்களுக்கு புனித நதிக்கரையில் எள் விதைகள் மற்றும் தண்ணீருடன் தர்ப்பனம் கொடுப்பது நம்மை நரகத்தின் சித்திரவதைகளில் இருந்து பாதுகாக்கும் என்று சிவபெருமான் கூறுகிறார். மகாகாலேஷ்வரை வணங்குவதும் ஒரு மனிதனின் எல்லா பாவங்களையும் நீக்குவதாக சிவபெருமான் கூறினார்.

கிருஷ்ணர் கூறிய ரகசியம்
ஒரு நபர் தனது வாழ்க்கையில் இந்த யாத்திரைகளை முடித்தவுடன், அவர் கங்கோத்ரி & யமுனோத்ரிக்கு யாத்திரை செல்ல வேண்டும், அங்கு அவர் புனித நீராட வேண்டும், பின்னர் தங்களை பத்ரிநாத்திடம் சரணடைந்து கடைசியில் கேதார்நாத்தில் ஆசீர்வாதம் பெற வேண்டும். இந்த ரகசியத்தை கிருஷ்ணர் இறப்பதற்கு முன் யாத்திரைக்குச் சென்ற பாண்டவர்களுக்கு மோட்சத்தை அடையக் கூறினார்.



Click it and Unblock the Notifications











