Just In
- 10 min ago 11 வயது சிறுமியை அம்மாவும்-மகனும் சேர்ந்து கடத்திய வினோதம்... எதுக்காக கடத்துனாங்க தெரியுமா?
- 1 hr ago இந்த 4 ராசிக்காரர்களில் ஒருவர் உங்க நண்பராக இருந்தா நீங்க வாழக்கையில் எதுக்குமே கவலைப்பட வேணாமாம்...!
- 3 hrs ago தக்காளி சட்னி செய்யும் போது இந்த ஒரு பொருளை மட்டும் அதிகமா சேர்த்துக்கோங்க.. டேஸ்ட் சூப்பரா இருக்கும்..
- 7 hrs ago Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
Don't Miss
- News இப்படி நடக்கும்னு யாருமே எதிர்பார்க்கல.. நெல்லையில் "லம்ப்"பாக வாரி இறைத்த "தலை".. பலன் கிடைக்குமா?
- Automobiles பைக்க விட அதிக மைலேஜ் தரும் ஹூண்டாய் கார்.. பொய் சொல்லல.. ஸ்ட்ராங்கான ஆதாரத்தோடதான் சொல்றாங்க!
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
- Movies கணவருடன் செம ரொமான்ஸ்.. சங்கர் மகள் ஐஸ்வர்யா தருணின் போட்டோஷூட்!
- Technology மிரளுது டிஸ்கவுண்ட்.. முழுசா ரூ.12000 கட்.. அடிமட்ட ரேட்டில் ஃபிளிப் போன்.. 3D கர்வ்ட் டிசைன்.. எந்த மாடல்?
- Finance எலான் மஸ்க் முடிவால்.. முக்கிய நிகழ்ச்சி ரத்து.. ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சோகம்..!!
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த விக்கெட் கீப்பரும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை செய்த தோனி
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
30 ஆண்டுகளுக்கு பின் சனி-சுக்கிர சேர்க்கை: பிப்ரவரி 15 வரை இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டம் தான்!
30 ஆண்டுகளுக்கு பின் சனி கும்ப ராசிக்கு சென்றுள்ளதால், இந்த கும்ப ராசியில் நிகழும் சனி சுக்கிர சேர்க்கையும் 30 ஆண்டுகளுக்கு பின் நிகழ்கிறது.
ஜோதிட சாஸ்திரத்தின் படி, அழகு, ஆடம்பரம், காதல் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாவார். இந்த சுக்கிரன் மீன ராசியில் உச்சத்திலும், கன்னி ராசியில் வலுவிழந்தும் இருப்பார். இத்தகைய சுக்கிரன் சனி ஆளும் கும்ப ராசிக்கு ஜனவரி 22 ஆம் தேதி சென்றார். அதற்கு முன்னரே ஜனவரி 17 ஆம் தேதி சனி கும்ப ராசிக்கு சென்றார். இதனால் ஜனவரி 22 முதல் கும்ப ராசியில் சனியும், சுக்கிரனும் ஒன்றாக பயணித்து வருகிறார்கள்.
30 ஆண்டுகளுக்கு பின் சனி கும்ப ராசிக்கு சென்றுள்ளதால், இந்த கும்ப ராசியில் நிகழும் சனி சுக்கிர சேர்க்கையும் 30 ஆண்டுகளுக்கு பின் நிகழ்கிறது. எனவே இந்த சேர்க்கை மிகவும் சிறப்பு வாய்ந்தது. மேலும் இந்த சேர்க்கையானது 2023 பிப்ரவரி 15 ஆம் தேதி வரை இருப்பதால், சில ராசிக்காரர்கள் அபரிமிதமான செல்வத்தை பெறுவார்கள். இப்போது கும்பத்தில் நிகழ்ந்துள்ள சனி சுக்கிர சேர்க்கையால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் குறித்து காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 11 ஆவது வீட்டில் சனி சுக்கிர சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இது வருமான வீடாகும். இதனால் இச்சேர்க்கை காலத்தில் இந்த ராசிக்காரர்களுக்கு இழந்த பணம் திரும்ப கிடைக்கும். முதலீடு செய்த பணத்தால் நல்ல லாபம் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். பங்கு சந்தை, பந்தயத்தில் முதலீடு செய்ய நினைத்தால், அதற்கு இக்காலம் நல்ல காலம். மொத்தத்தில் இந்த சேர்க்கையானது வாழ்வில் நல்ல செழிப்பைத் தரும்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 10 ஆவது வீட்டில் சனி சுக்கிர சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் இச்சேர்க்கை காலத்தில் கடின உழைப்பின் பலனைப் பெறுவார்கள். சனியின் அருளால் வேலையில் முன்னேற்றம் ஏற்படும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். உங்களின் வசதிகள் அதிகரிக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும். அதிக முதலீடு செய்ய வாய்ப்புகள் கிடைக்கும். முக்கியமாக வியாபாரத்தை விரிவாக்க வாய்ப்புகள் கிடைக்கும்.
மகரம்
மகர ராசியின் 2 ஆவது வீட்டில் சனி சுக்கிர சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் இச்சேர்க்கை காலத்தில் நல்ல வெற்றியையும், செழிப்பையும் பெறுவார்கள். அதுவும் பல வழிகளில் இருந்து பணம் பெற வாய்ப்புள்ளது. இக்காலத்தில் பரம்பரை சொத்துக்கள் உங்கள் கைக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த காலகட்டத்தில் புதிய வணிக வாய்ப்புகள் கிடைக்கும் மற்றும் நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். சுக்கிரனின் அருளால் உங்கள் வங்கி இருப்பில் பணம் அதிகம் சேரும். முக்கியமாக சிக்கிய பணம் இக்காலத்தில் கைக்கு கிடைக்க வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)