Latest Updates
-
வாஸ்துப்படி மணி பிளாண்ட் வைக்கும் திசை இதுவா? பணவரவு தடையின்றி கொழிக்க இதை உடனே மாற்றுங்க! -
கசப்பில்லாத பொன்னாங்கண்ணி கீரை கூட்டு - 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு சாப்பிடுங்க.. -
மே மாதத்தில் உருவாகும் கப்பார் யோகத்தால் பெரிய ஆபத்துகளையும், நஷ்டத்தையும் சந்திக்கப்போகும் 3 ராசிகள் -
வெறும் 5 ரூபாயில் கிடைக்கும் இந்த பொருள் கோடையில் சந்திக்கும் பாதி பிரச்சனையை தடுக்குமாம் - கூறும் டாக்டர்! -
அடிச்சது ஜாக்பாட் - தென்னிந்தியாவின் இந்த மாநிலத்தில் மிகப்பெரிய தங்கச் சுரங்கம் கிடைத்திருக்காம் -
சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சியால் ஏப்ரல் 27 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் லாபமும், வெற்றியும் குவியப்போகுது.. -
உடல் சூட்டைக் குறைக்கும் வெந்தய களி - இப்படி பாரம்பரிய முறைப்படி செஞ்சு சாப்பிடுங்க.. ருசி அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 23 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கனவுகள் பலிக்கும் நாளாக இருக்குமாம் -
சூரியன் ரிஷப ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
பரங்கிக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு செமையா இருக்கும்
சனி-புதன் சேர்க்கையால் பிப்ரவரி 27 முதல் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கணும்...
சனி-புதன் சேர்க்கை காலத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இப்போது சனி-புதன் சேர்க்கையால் எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.
Saturn Mercury Conjunction In Aquarius: ஜோதிடத்தில் கிரகங்களின் ராசி மாற்றத்தின் போது சில சமயங்களில் கிரக சேர்க்கைகள் நிகழும். ஒரு ராசியில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்கள் இணைந்து பயணிக்கலாம். அப்படி கிரகங்கள் இணைந்து பயணிக்கும் போது, அதன் பலன் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அந்த வகையில் 2023 பிப்ரவரி 27 ஆம் தேதி புதன் சனிஆளும் கும்ப ராசிக்கு செல்கிறார். இந்த கும்ப ராசியில் ஏற்கனவே சனி பயணித்து வருகிறார். இதனால் கும்பத்தில் சனி-புதன் சேர்க்கை பல ஆண்டுகளுக்கு பின் நிகழவுள்ளது.

சனி மற்றும் புதன் ஆகிய இரண்டும் நட்பு கிரகங்களாக இருந்தாலும், சனி-புதன் சேர்க்கையின் தாக்கமானது 12 ராசிகளிலுமே காணப்படும். இந்த சேர்க்கையால் சில ராசிக்காரர்கள் ஏராளமான நற்பலன்களைப் பெறலாம். இருப்பினும் 3 ராசிக்காரர்கள் இந்த சனி-புதன் சேர்க்கை காலத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இப்போது சனி-புதன் சேர்க்கையால் எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.

கடகம்
கடக ராசியின் 8 ஆவது வீட்டில் சனி-புதன் சேர்க்கை நிகழ்கிறது. இதனால் இக்காலத்தில் உங்கள் சொந்தக்காரரே உங்களுக்கு எதிராக சதி செய்யக்கூடும். உங்கள் உடன் பிறந்தவர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. ஆரோக்கிய விஷயத்தில் சற்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. பங்குச் சந்தையில் முதலீடு செய்ய நினைத்தால், அதை தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் பண இழப்புகளை சந்திக்க நேரிடும். இக்காலகட்டத்தில் யாரையும் நம்பாதீர்கள்.

கன்னி
கன்னி ராசியின் 6 ஆவது வீட்டில் சனி-புதன் சேர்க்கை நிகழ்கிறது. இதனால் இக்காலத்தில் எதிரிகள் அதிகரிப்பார்கள். அலுவலகத்தில் வெற்றியைக் காண கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். உங்களின் முக்கியமான வேலைகளில் இடையூறு ஏற்படக்கூடும். இக்காலகட்டத்தில் உங்களின் செலவுகள் அதிகரிக்கும் வாய்ப்புள்ளதால், தேவையில்லாத செலவுகளைத் தவிர்த்திடுங்கள். இல்லாவிட்டால் பண பிரச்சனைகளை சந்திப்பீர்கள். உங்கள் தாயுடனான உறவு மோசமாக வாய்ப்புள்ளது. உங்களுக்கு ஏற்கனவே சரும பிரச்சனைகள் இருந்தால், இக்காலத்தில் சற்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

விருச்சிகம்
விருச்சிக ராசியின் 4 ஆவது வீட்டில் சனி-புதன் சேர்க்கை நிகழ்கிறது. இதனால் இக்காலத்தில் மன கஷ்டம் அதிகரிக்கும். உங்களின் வேலையில் பிரச்சனைகளை அதிகம் சந்திக்க நேரிடும். இருப்பினும், வேலையில் அதிக கவனத்தை செலுத்த வேண்டும். இக்காலகட்டத்தில் உங்களின் பேச்சால் குடும்பத்தில் பல கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும். அரசு வேலையில் இருப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். மாணவர்களுக்கு இந்த காலம் சற்று கடினமாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











