Just In
- 47 min ago
Budget 2023: இந்த ஆண்டு சிவப்பு நிற கைத்தறி புடவையில் பட்ஜெட் தாக்கல் செய்யும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
- 4 hrs ago
பிப்ரவரி மாதம் இந்த 4 ராசிக்காரர்கள துரதிர்ஷ்டம் துரத்தி துரத்தி அடிக்கப்போகுதாம்... ஜாக்கிரதையா இருங்க...!
- 7 hrs ago
Today Rasi Palan 01 February 2023: இன்று இந்த ராசிக்காரர்களின் முக்கிய வேலை பாதியில் தடைபடலாம்...
- 15 hrs ago
கருட புராணத்தின் படி இந்த 5 விஷயங்களை செஞ்சா, மரணத்திற்கு பின் நரகம் செல்வதை தவிர்க்கலாம்..!
Don't Miss
- Finance
இயற்கை விவசாயத்தினை மேம்படுத்த பல திட்டங்கள்.. விவசாய ஸ்டார்ட்அப்-களுக்கு சலுகை அளிக்க திட்டம்!
- Movies
முழு பைத்தியமாவே மாறிட்டாங்க போல.. மேலயும் ஜீன்ஸ் பேன்ட்டை மாட்டிட்டு உலா வந்த பிக் பாஸ் நடிகை!
- News
ரயில்வேக்கு மொத்தமாக அள்ளிக் கொடுத்த நிர்மலா.. 2013-14 பட்ஜெட்டை விட 9 மடங்கு அதிக ஒதுக்கீடு
- Technology
மலிவு விலையில் 28 நாட்கள் வேலிடிட்டி உடன் புதிய திட்டத்தை அறிமுகம் செய்து அதிரடி காட்டிய Vodafone Idea!
- Sports
மொத்த ப்ளானையும் மாத்துங்க.. நியூசி, உடனான 3வது டி20 போட்டி.. தினேஷ் கார்த்திக் முக்கிய அறிவுரை!
- Automobiles
இந்த மாதிரி டபுள்-டக்கர் பேருந்து எல்லாம் வந்தா நம்ம சென்னை வேற லெவல் ஆயிடும்!! அதுவும் எலக்ட்ரிக் தரத்தில்...
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
சனி-செவ்வாய் உருவாக்கும் ஷடாஷ்டக யோகம்: இந்த 5 ராசிகளுக்கு அக்டோபர் 16 முதல் சூப்பரா இருக்கும்..
ஜோதிடத்தில் நவகிரகங்களின் தளபதி செவ்வாய் ஆவார். இந்த செவ்வாய் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல சுமார் 45 நாட்கள் ஆகும். தற்போது செவ்வாய் ரிஷப ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் 2022 அக்டோபர் 16 ஆம் தேதி செவ்வாய் மிதுன ராசிக்கு செல்கிறார். இந்த மிதுன ராசியின் அதிபதி புதன். இந்த புதன் செவ்வாயின் எதிரி கிரகமாவார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் சனி மற்றும் செவ்வாயின் நிலைகளால் ஷடாஷ்டக யோகம் உருவாகிறது.
ஷடாஷ்டக யோகம் மிகவும் மோசமான யோகமாக கருதப்படுகிறது. எனவே இந்த செவ்வாய் பெயர்ச்சிக்கு பின் நாட்டில் பல மாற்றங்கள் ஏற்படவுள்ளன. மேலும் இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். குறிப்பாக யாருடைய ஜாதகத்தில் செவ்வாய் அசுப வீடுகளுக்கு அதிபதியாக உள்ளாரோ, அவர்கள் வாழ்வில் பல பிரச்சனைகளை சந்திப்பார்கள். ஆனால் சில ராசிக்காரர்களுக்கு இந்த செவ்வாய் பெயர்ச்சி நற்பலன்களைத் தரும். இப்போது செவ்வாய் மற்றும் சனியினால் உருவாகும் ஷடாஷ்டக யோகத்தினால் நற்பலன்களைப் பெறப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் செவ்வாய் பெயர்ச்சிக்குப் பின் தைரியமாகவும், பொறுமையாகவும் இருப்பார்கள். மேலும் இதுவரை முடிவு எடுப்பதில் சந்தித்த பிரச்சனைகள் நீங்கும். பணியிடத்தில் ஆற்றலுடன் செயல்படுவீர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். ஆனால் இக்காலத்தில் உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் வாக்குவாதத்தால் மன அழுத்தம் அதிகரிக்கும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் செவ்வாய் பெயர்ச்சியால் வருமானத்தில் நல்ல அதிகரிப்பைக் காண்பார்கள். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நிறைவேறாத ஆசைகளை இக்காலத்தில் நிறைவேற்றுவீர்கள். செவ்வாயின் நிலையால் பணியிடம் உற்சாகமாக இருக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். குடும்ப வாழ்வில் அமைதி நிலவும்.

கன்னி
கன்னி ராசிக்ககாரர்கள் செவ்வாய் பெயர்ச்சியால் தொழிலில் சாதகமான பலன்களைப் பெறுவார்கள். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வாகனம், சொத்து வாங்குவதற்கான எண்ணம் எழும். தொழில் வாழ்க்கையில் நிலைமைகள் சாதகமாக இருக்கும். வியாபாரிகளுக்கு இக்காலம் லாபகரமாக இருக்கும்.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இந்த செவ்வாய் பெயர்ச்சியால் உருவாகும் யோகத்தால் நல்ல பலன்கள் கிடைக்கும். உங்கள் எதிரிகளை இக்காலத்தில் வெற்றி பெறுவீர்கள். கல்வி, வியாபாரம் மற்றும் வேலையில் விரைவான முன்னேற்றத்தைப் பெறுவீர்கள். வணிகர்கள் இக்காலத்தில் மிகவும் முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும் மற்றும் இது எதிர்காலத்தில் மிகவும் பயனளிக்கும் வகையில் இருக்கும்.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சியால் உருவான யோகத்தால் இக்காலம் மகிழ்ச்சிகரமாக இருக்கும். நிதி முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் உள்ளன. அசையும் அல்லது அசைய சொத்துக்களால் நல்ல பணத்தை சம்பாதிப்பீர்கள். வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்துவார்கள். இக்காலத்தில் குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். மேலும் திருமணமானவர்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)