மாதவிடாய் விடுப்பு கோரி உச்சமன்றத்தில் மனு தாக்கல்...எந்தெந்த நாட்டில் பீரியட்ஸ் லீவு அனுமதி தெரியுமா?

மாதவிடாயின் போது ஒரு பெண் அனுபவிக்கும் வலி மாரடைப்பின் போது ஏற்படும் வலிக்கு சமம் என்று லண்டன் பல்கலைக்கழக கல்லூரியின் ஆய்வை மேற்கோள் காட்டி, நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் திரிபாதி

மாதவிடாய் விடுப்பு குறித்து கடந்த சில ஆண்டுகளாக மக்கள் அதிகம் பேசுகிறார்கள். இது குறித்த விவாதங்கள் ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் நடந்துவருகின்றன. ஏனெனில், அன்றைய காலம் முதல் இன்றைய காலம் வரை ஓவ்வொரு பெண்ணும் மாதவிடாய் நாட்களில் எத்தனை வலி, வேதனைகளை அனுபவித்திருந்தாலும் அவற்றை சமாளித்து ஓய்வின்றி உழைத்து வருகின்றனர். ஆனால், இனி நிலைமை அப்படியல்ல. தங்களுக்கான உரிமைகளை தைரியமாக கேட்கும் நிலையில் பெண்கள் உள்ளனர். ஆதலால், மாதவிடாய் விடுப்பு குறித்து, தற்போது மீண்டும் குரல் எழுப்பப்படுகிறது.

pil-seeking-menstrual-leave-filed-before-supreme-court-know-details-in-tamil

ஆம், மாதவிடாய் விடுப்பு கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கை யார் தொடர்ந்தார்? அந்த மனுவில் குறிப்பிடட்டுள்ளது என்ன என்று இக்கட்டுரையில் விரிவாக தெரிந்துகொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உச்சநீதிமன்றத்தில் மனு

உச்சநீதிமன்றத்தில் மனு

இந்தியா முழுவதும் உள்ள மாணவிகள் மற்றும் பணிபுரியும் பெண்கள் இருவருக்கும் மாதவிடாய் விடுப்பு கோரி உச்ச நீதிமன்றத்தில் ஜனவரி 10, 2023 நேற்று ஒரு பொது நல வழக்கு (PIL) தாக்கல் செய்யப்பட்டது. வழக்கறிஞர் சைலேந்திர மணி திரிபாதி என்பவர் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார். மாநிலங்களில் உள்ள நிறுவனங்கள் மற்றும் பள்ளிகளில் இதை அமல்படுத்த மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கோரியிருந்தார்.

மாதவிடாய் வலி

மாதவிடாய் வலி

மாதவிடாயின் போது ஒரு பெண் அனுபவிக்கும் வலி மாரடைப்பின் போது ஏற்படும் வலிக்கு சமம் என்று லண்டன் பல்கலைக்கழக கல்லூரியின் ஆய்வை மேற்கோள் காட்டி, நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் திரிபாதி. இத்தகைய வலி பெண்களின் பணித்திறனைக் குறைக்கும் மற்றும் அவர்களின் வேலையை பாதிக்கும் என்று வாதிட்ட அவர், Ivipanan, Zomato, Byju's, Swiggy, Mathrubhumi, Magzter, ARC, FlyMyBiz மற்றும் Gozoop போன்ற சில இந்திய நிறுவனங்கள் மாதவிடாய் கால விடுமுறைகளை வழங்குவதாகவும் கூறினார்.

இந்திய அரசியலமைப்பு சட்டம்

இந்திய அரசியலமைப்பு சட்டம்

மாதவிடாய் அனுபவம் எவ்வளவு வேதனையானது என்பது குறித்த பல மருத்துவ ஆராய்ச்சிகள் இருந்தபோதிலும், பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு வழங்காதது இந்திய அரசியலமைப்பின் 14 வது பிரிவை மீறுவதாகும் என்று மனுதாரர் கூறுகிறார். இந்திய அரசியலைப்பு சட்டம் பிரிவு 14 என்பது பாகுபாடுகளுக்கு எதிரான பிரிவு ஆகும். இது சட்டத்தின் முன் அனைவரும் என்கிறது. எந்தவொரு நபருக்கும் சமத்துவம் அல்லது நாட்டிற்குள் உள்ள சட்டங்களின் சமமான பாதுகாப்பை அரசு மறுக்கக்கூடாது என்று கூறுகிறது.

உடல்நல பிரச்சனைகள்

உடல்நல பிரச்சனைகள்

இந்தச் சட்டம் பெண்களை கூட்டாட்சி மற்றும் மாநிலக் கொள்கைகளின் பெயரால் வேறுபடுத்துவதால், இது விதி 14 இன் மீறலாகும். பெண்கள் மாதவிடாய் சுழற்சியின் போது ஒரே மாதிரியான உடலியல் மற்றும் உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டாலும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் அவர்கள் வித்தியாசமாக நடத்தப்படுகிறார்கள். எவ்வாறாயினும், இந்திய குடியுரிமை கொண்ட அனைத்து பெண்களும், இந்தியாவில் சமமாக நடத்தப்பட வேண்டும் மற்றும் சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2017இல் தாக்கல் செய்யப்பட்ட மசோதா

2017இல் தாக்கல் செய்யப்பட்ட மசோதா

2017 ஆம் ஆண்டு காங்கிரஸ் எம்பி டாக்டர். சசி தரூர் அறிமுகப்படுத்திய மாதவிடாய் நன்மை மசோதா அல்லது பெண்கள் பாலியல், இனப்பெருக்கம் மற்றும் மாதவிடாய் உரிமைகள் மசோதாவை இந்த மனு முன்னிலைப்படுத்தியது. பெண்களுக்கு அவர்களின் அலுவலக வளாகத்தில் பொது அதிகாரிகளால் சானிட்டரி பேட்கள் இலவசமாக வழங்கப்படும் என்று பணிபுரியும் பெண்களுக்காக இந்த மசோதா முன்மொழியப்பட்டது. மேலும், அரசு மற்றும் தனியார் வேலைகளில் இருக்கும் பெண்களுக்கு மாதத்திற்கு இரண்டு நாட்கள் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பும் வழங்க வேண்டும் எனவும் கோரப்பட்டது. 2022 பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாளில் இந்த மசோதா மீண்டும் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டது, ஆனால் இந்த மசோதா நிராகரிக்கப்பட்டது.

எந்தெந்த நாடுகளில் மாதவிடாய் விடுப்பு

எந்தெந்த நாடுகளில் மாதவிடாய் விடுப்பு

சில நாடுகளில் பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சீனா, ஜப்பான், தைவான், இந்தோனேஷியா, தென் கொரியா, ஸ்பெயின் மற்றும் ஜாம்பியா ஆகிய நாடுகள் ஏற்கனவே பெண்களுக்கு மாதவிடாய் வலிக்கான விடுப்புகளை வழங்குகின்றன. ஆதலால், இதன் அடிப்படையில், டெல்லி உயர்நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. மாதவிடாய் விடுப்பு கோரும் மனுவை பிரதிநிதித்துவமாக டெல்லி அரசு பரிசீலிக்க வேண்டும். அந்த மனுவிற்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த மத்திய அமைச்சர் திருமதி.ஸ்மிருதி இராணி, மத்திய அரசுப் பணி (விடுப்பு) விதிகள் 1972 இன் படி, மாதவிடாய் விடுப்புக்கான எந்த விதிகளும் இல்லை எனக்கூறியுள்ளார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Wednesday, January 11, 2023, 22:00 [IST]
Desktop Bottom Promotion