Just In
- 1 hr ago உங்களுக்கு இந்த அறிகுறிகள் அதிகம் தெரியுதா? அப்ப உடம்புல தண்ணீர் ரொம்ப கம்மியா இருக்கு-ன்னு அர்த்தம்... உஷார்.
- 4 hrs ago 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- 4 hrs ago இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கனுமா?.. இதை சாப்பிடுங்கள்..!
- 5 hrs ago உங்கள் கால் நகங்களை அழகாக மாற்ற அற்புதமான டிப்ஸ்..
Don't Miss
- News படுக்கையறையில் ஷோபா.. அந்த கோலத்தை கண்டு கதறிய மகள்.. மீண்டும் மீண்டும் டார்ச்சர்.. கொடுமையை பாருங்க
- Automobiles குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!
- Movies Actor Vikram: விக்ரம் படத்தில் இணைந்த பிரபல மலையாள நடிகர்.. அறிவித்த படக்குழு!
- Technology Aadhaar Update Cost: இனி ஆதார் அட்டையில் பெயர், முகவரி, போட்டோ மாற்ற கட்டணம்.. எவ்வளவு தெரியுமா?
- Sports LSG v CSK-சிஎஸ்கேக்கு பாதகமாக விழுந்த டாஸ்..பிளேயிங் லெவனில் அதிரடி மாற்றம்..பேட்டிங்கிலும் சர்பரைஸ்
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
பல ஆண்டுகளுக்கு பின் புதன் மற்றும் சுக்கிரன் குருவுடன் சேர்ந்து உருவாக்கிய நவபஞ்சம் ராஜயோகம்!
குருவுடன் சேர்ந்து புதன் மற்றும் சுக்கிரன் நவபஞ்சம் ராஜயோகத்தை உண்டாக்குகிறது. இந்த நவபஞ்சம் யோகம் மிகவும் மங்களகரமான ஒரு ராஜயோகமாகும்.
வேத ஜோதிடத்தில் கிரகங்களின் நிலையைப் பொறுத்து தான் பலன்கள் கணித்து கூறப்படுகின்றன. கிரகங்கள் அவ்வப்போது ராசியை மாற்றிக் கொண்டே இருக்கும். அப்படி மாறும் போது கிரகங்களின் சேர்க்கையால் சுப அல்லது அசுப யோகங்களும் உருவாகும். இதனால் கிரகங்களினால் கிடைக்கும் பலன்களும் அவ்வப்போது மாறும். அந்த வகையில் குருவுடன் சேர்ந்து புதன் மற்றும் சுக்கிரன் நவபஞ்சம் ராஜயோகத்தை உண்டாக்குகிறது. இந்த நவபஞ்சம் யோகம் மிகவும் மங்களகரமான ஒரு ராஜயோகமாகும்.
இந்த நவபஞ்சம் ராஜயோகம் உருவாகும் போது ஒருவரின் அதிர்ஷ்டம் திறந்து, ஏராளமான நற்பலன்கள் கிடைக்கும். அதில் 2022 நவம்பர் 11 ஆம் தேதி சுக்கிரன் மற்றும் குருவால் நவபஞ்சம் ராஜயோகம் உருவானது. அதன் பின் நவம்பர் 16 ஆம் தேதி புதன் மற்றும் குருவால் நவபஞ்சம் ராஜயோகம் உருவானது. பின்பு நவம்பர் 16 ஆம் தேதி விருச்சிக ராசிக்கு செல்லும் சூரியனுக்கும், குருவுக்கும் நவபஞ்சம் ராஜயோக சம்பந்தம் ஏற்படுகிறது. எனவே குரு, சூரியன், சுக்கிரன் அல்லது புதன் யாருடைய ராசியை ஆள்கிறார்களோ, அந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசித்து, வாழ்வில் நல்ல செல்வம் மற்றும் முன்னேற்றம் ஏற்படும். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு நவபஞ்சம் ராஜயோகம் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல பலனைத் தரும் மற்றும் முன்னேற்றம் ஏற்படும். ஷேர் மார்க்கெட், பந்தயம், லாட்டரி போன்றவற்றில் நல்ல பணம் கிடைக்கும். உங்களின் வியாபாரம் வெளிநாட்டுடன் தொடர்புடையதாக இருந்தால் நல்ல லாபம் கிடைக்கும். திடீர் பண ஆதாயத்தைப் பெறவும் வாய்ப்புள்ளது. அரசியலில் இருப்பவர்கள் உயர் பதவியைப் பெறுவார்கள். சமூகத்தில் கௌரவம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணை மூலம் பணம் கிடைக்க வாய்ப்புள்ளது.
மிதுனம்
நவபஞ்சம் ராஜயோகம் மிதுன ராசிக்காரர்களுக்கு நல்ல பலனைத் தரும். நீதிமன்ற வழக்குகள் இருந்தால், அதில் தீர்ப்புகள் உங்களுக்கு சாதகமாக வரும். புதிய வேலையை தேடிக் கொண்டிருந்தால், இக்காலத்தில் நல்ல வாய்ப்பைப் பெறுவீர்கள். இந்த யோக காலத்தில் உங்களின் தைரியமும், வீரமும் அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். ஏற்கனவே நோயால் அவதிப்பட்டு வந்தால், இக்காலத்தில் அதிலிருந்து விடுபடுவீர்கள். சமூகத்தில் மற்றும் பணியிடத்தில் உங்களின் மரியாதை அதிகரிக்கும். அரசாங்கத்தால் நல்ல ஆதாயம் கிடைக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இந்த ராஜயோக காலமானது அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும். இக்காலத்தில் தடைபட்ட பணிகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிக்கப்படும். வேலை தொடர்பாக பயணம் மேற்கொள்ள நேரிடும். பழைய முதலீடுகளால் நற்பலன் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்க நினைத்தால், அதற்கு இக்காலம் சிறந்ததாக இருக்கும். மாணவர்கள் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களுடன் வெற்றி பெறுவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)