Latest Updates
-
குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
ஆட்டு ஈரலை இப்படி வறுவல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட போட்டி போட்டு காலி பண்ணுவாங்க... -
பெண்களே! தொப்பை குறையணுமா? அப்ப இந்த ஃபிட்னஸ் கோச் சொல்ற 5 உடற்பயிற்சியை வீட்லயே செய்யுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கு சுக்கிர திசை ஆரம்பிக்குது.. இனி கையில் பணம் குவியப்போகுது.. -
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
இந்த வாரம் மட்டன் வாங்குனா.. இந்த சுக்கா கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 08 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்குமாம்...! -
வார ராசிபலன் (01 March 2026-07 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும்! -
மட்டன் வாங்குனா இந்த மாதிரி நெல்லூர் ஸ்டைலில் குழம்பு வைச்சு பாருங்க... தோசை, சாதத்துக்கு சூப்பரா இருக்கும்... -
திரிகிரக யோகம் கும்ப ராசியில் உருவாவதால் இந்த 3 ராசிக்காரர்களை தோல்வியும், துரதிர்ஷ்டமும் துரத்தப்போகுதாம்...!
இந்த 5 ராசிக்காரங்க வாழ்க்கையில் அதிர்ஷ்டமே இருக்காதாம்... இவங்க துரதிர்ஷ்டம் கூடவே பிறந்தவங்களாம்...!
நாம் அனைவருக்குமே அதிர்ஷ்டத்துடன் வாழ வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் துரதிர்ஷ்டம் தொடர்ந்து துரத்தி வந்தால் என்ன செய்வது? நம் வாழ்வில் ஒருமுறையாவது நாம் துரதிர்ஷ்டத்தை அனுபவத்திருப்போம்.
நாம் அனைவருக்குமே அதிர்ஷ்டத்துடன் வாழ வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் துரதிர்ஷ்டம் தொடர்ந்து துரத்தி வந்தால் என்ன செய்வது? நம் வாழ்வில் ஒருமுறையாவது நாம் துரதிர்ஷ்டத்தை அனுபவத்திருப்போம். இதற்கு நமது விதிதான் முக்கிய காரணமாக இருக்கலாம். விதி என்று வரும்போது அதில் நம்முடைய ஜென்ம ராசி மிகவும் முக்கியமானதாகும்.

ஜோதிட சாஸ்திரத்தின் படி சில ராசிகள் துரதிர்ஷ்டத்தை ஈர்க்கும் பண்புகளைக் கொண்டுள்ளது. இவர்களுக்கு எத்தனை கிரக மாற்றங்கள் வந்தாலும் வாழ்வில் இருக்கும் துரதிர்ஷ்டம் எப்போதும் துரத்திக் கொண்டே இருக்கும். காலத்தைப் பொறுத்து அதன் அளவு மட்டுமே மாறுபடும். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் துரதிர்ஷ்டத்தால் துன்பப்படுவார்கள் என்று பார்க்கலாம்.

கன்னி
கன்னி ராசிக்காரர்கள் விஷயங்களை கட்டுப்படுத்த நினைக்கும் போது துரதிர்ஷ்டத்தை அனுபவிப்பார்கள். கன்னி ராசிக்காரர்கள் கட்டுப்பாடானவர்கள் என்பதால், அவர்கள் துரதிர்ஷ்டசாலிகளா இருக்க வாய்ப்புள்ளது. எல்லாவற்றையும் திட்டமிட்டு செய்வதன் மூலமும், சிறிய மாற்றத்திற்குக் கூட பயப்படுவதன் மூலமும், கன்னி ராசிக்காரர்கள் தங்களை தேடிவரும் அதிர்ஷ்டத்தை தவிர்க்கிறார்கள். விஷயங்களை அதன் போக்கில் நடக்க அனுமதிப்பதன் மூலம் இவர்கள் அதிர்ஷ்டத்தை ஓரளவு பெறலாம்.

விருச்சிகம்
ஒருவர் எப்படி தொடர்ந்து துரதிர்ஷ்டத்தை அனுபவிப்பார்கள் என்ற கேள்வி நமக்குள் எழும்போது விருச்சிக ராசிக்காரரர்கள் அதற்கு பதிலாக இருக்கிறார்கள். இவர்களின் துரதிர்ஷ்டம் சுற்றி இருப்பவர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும். இவர்களின் வாழ்க்கையில் தெளிவான குழப்பங்கள் நிறைந்திருக்கும், ஆனால் இது அவர்களுக்கு முற்றிலும் பொருந்தும். ஏனென்றால், இது அவர்களின் தன்மையை உருவாக்கவும், தங்களை ஒவ்வொரு நாளும் வலிமையாக மாறவும் அனுமதிக்கிறது. இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் இல்லை, ஆனால் ஒருபோதும் நம்பிக்கையை விட மாட்டார்கள்.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தில் நம்பிக்கையில்லை, அவர்கள் தங்கள் கடின உழைப்பை நம்புகிறார்கள். தங்களின் அதிர்ஷ்டத்தை தாங்கள்தான் உருவாக்க முடியும் என்று இவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் வாழ்க்கை அவர்களுக்கு வாய்ப்புகளை வழங்குவது மிகவும் அரிது. இவர்கள் நம்பாத காரணத்தால்தான் என்னவோ அதிர்ஷ்டம் இவர்களுக்கு ஒருபோதும் கை கொடுப்பதில்லை. ஆனால் வாய்ப்புகள் கிடைக்கும்போது இவர்கள் அதனை பயன்படுத்திக் கொள்ள தவறுவதில்லை.

கடகம்
கடக ராசிக்காரர்கள் அனைத்திலும் இருக்கும் தீமையை மட்டும் பார்க்கும் ஒரு குழப்பமான ராசியாகும், மேலும் அவர்கள் எப்போதும் தங்கள் கம்பர்ட் சோனில் இருந்து வெளிவருவதில்லை. இவர்கள் துரதிர்ஷ்டம் நிறைந்த ராசியாக இருப்பதற்கு இதுதான் முக்கிய காரணம். ஏமாற்றத்தை தவிர்ப்பதற்காக, இவர்கள் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளையும் தவற விடுவார்கள். உண்மையில், அவர்கள் மிகவும் அவநம்பிக்கையுள்ளவர்களாக இருக்கிறார்கள், அவர்கள் தங்கள் வாய்ப்பை ஒருபோதும் பயன்படுத்திக் கொள்ள மாட்டார்கள் மற்றும் வாய்ப்புகள் அவர்களை கடந்து செல்ல எளிதில் அனுமதிப்பார்கள்.

கும்பம்
மற்ற பல ராசிகளைப் போலல்லாமல், கும்ப ராசிக்கு மாற்றத்தை எப்படி சமாளிப்பது என்று தெரியும். மாற்றங்கள் இவர்களைத் தூண்டும், இவர்கள் எப்போதும் மாற்றத்தை விரும்புபவர்களாக இருக்கிறார்கள். ஆனால் அதுதான் இவர்களின் துரதிர்ஷ்டத்திற்கு காரணமாகவும் அமைகிறது. அவர்கள் வரும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள நீண்ட காலம் எங்கும் இருப்பதில்லை. எதுவாக இருந்தாலும் இவர்களுக்கு விரைவில் நடக்க வேண்டும். அவர்கள் அதிர்ஷ்டசாலியாக இருக்க விரும்பினால், அவர்கள் இன்னும் அதிகமாக பொறுமையை கடைபிடிக்க வேண்டும்.



Click it and Unblock the Notifications











