Latest Updates
-
எப்பவும் ஒரே மாதிரி பாஸ்தா செய்யாம, இப்படி முட்டை பொடிமாஸ் பெப்பர் பாஸ்தா செய்யுங்க.. அள்ளும்.. -
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசை நாளில் மறந்தும் இந்த 7 விஷயங்களை செஞ்சுடாதீங்க.. -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப கவர்ச்சியானவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் புதன்: ஆகஸ்ட் இறுதியில் இந்த 4 ராசிக்கு செல்வம் குவியப்போகுது! -
Aadi Amavasai 2026: தர்ப்பணம் என்றால் என்ன? ஆடி அமாவாசை அன்று ஏன் அவசியம் தர்ப்பணம் கொடுக்க வேண்டும் -
மூட்டு வலி நீங்க, இரத்தம் ஊற உதவும் முருங்கைக்கீரை கொள்ளு சூப் - எப்படி செய்யணும் தெரியுமா? -
சனிபெயர்ச்சியால் 2027-ல் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
21 நாட்கள் தொடர்ந்து 1 நெல்லிக்காய் சாப்பிடுங்க, உடம்புல நடக்குற அதிசயத்தை பாருங்க.. கூறும் டாக்டர்! -
பாலக் புலாவ் ரெசிபி - இந்த சத்தான புலாவை ட்ரை பண்ணுங்க - குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க -
பழைய விமானங்கள் ஓய்வு பெற்ற அவற்றின் நிலை என்னவாகும் தெரியுமா? இப்படிலாம் கூட பண்ணுவாங்களா?
புதன் உருவாக்கும் பத்ர ராஜயோகத்தால் பிப்ரவரி 7 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப் போகுது...
நவகிரகங்களின் இளவரசனாக கருதப்படும் புதன் 2023 பிப்ரவரி 07 ஆம் தேதி மகர ராசிக்கு செல்கிறார். புதன் மகர ராசிக்கு செல்லும் போது, மகர ராசியில் பத்ரா ராஜயோகம் உருவாகவுள்ளது.
ஜோதிட சாஸ்திரத்தின் படி, கிரகங்கள் ஒவ்வொன்றும் அவ்வப்போது ராசியை மாற்றும். அதில் சில கிரகங்கள் குறுகிய காலத்திலேயே ராசியை மாற்றும். அப்படி மாற்றும் போது சில நேரங்களில் சுப அல்லது அசுப யோகங்கள் உருவாகும் வாய்ப்புக்கள் உள்ளன. அந்த வகையில் நவகிரகங்களின் இளவரசனாக கருதப்படும் புதன் 2023 பிப்ரவரி 07 ஆம் தேதி மகர ராசிக்கு செல்கிறார். புதன் மகர ராசிக்கு செல்லும் போது, மகர ராசியில் பத்ரா ராஜயோகம் உருவாகவுள்ளது.

பத்ரா ராஜயோகம் என்பது புதனால் உருவாக்கப்படும் யோகமாகு. இது ஒரு மங்களகரமான மற்றும் அதிர்ஷ்டமான யோகம். இந்த யோகத்தால் ஒருவரது செல்வம், கௌரவம், திறன்கள் போன்றவை மேம்படும். புத்திகாரகனான புதன் சனி ஆளும் மகர ராசிக்கு செல்லும் போது உருவாகும் பத்ரா ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு இந்த யோகமானது அதிர்ஷ்டத்தை பிரகாசிக்க வைக்கும். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

ரிஷபம்
ரிஷப ராசியின் 9 ஆவது வீட்டில் பத்ரா ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இக்காலத்தில் உங்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்கள் தேர்வுகளில் நல்ல வெறறியைப் பெறுவார்கள். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்க வாய்ப்புள்ளது. ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். குழந்தைகளால் இக்காலத்தில் மகிழ்ச்சியான செய்தியைப் பெறுவீர்கள்.

மகரம்
மகர ராசியின் முதல் வீட்டில் பத்ரா ராஜயோகம் உருவாகிறது. எனவே இந்த ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை இக்காலத்தில் அதிகரிக்கும். அதோடு வாழ்க்கையில் வசதிகள் அதிகரிக்கும். இந்த காலத்தில் பணத்தை சேமிப்பதிலும், முதலீடு செய்வதிலும் ஆர்வம் அதிகரிக்கும் மற்றும் அதில் வெற்றியும் கிடைக்கும். இக்காலகட்டத்தில் முன்னேற்றத்திற்கு கிடைக்கும் எந்த ஒரு சந்தர்ப்பத்தையும் நழுவவிடாதீர்கள். திருமணமாகாதவர்களுக்கு இக்காலத்தில் நல்ல திருமண வரன் கிடைக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சிறப்பாக இருக்கும்.

கன்னி
கன்னி ராசியின் 5 ஆவது வீட்டில் பத்ரா ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் கன்னி ராசிக்காரர்கள் வியாபாரம் மற்றும் வேலையில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். அதோடு வியாபாரிகளுக்கு நல்ல லாபமும், பணிபுரிபவர்களுக்கு வருமான உயர்வும் கிடைக்கும். இது தவிர புதிய வருமான வழிகளும் கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு இக்காலத்தில் நல்ல வேலை கிடைக்கும். காதலிப்பவர்கள், தங்கள் துணையுடன் பயணம் செய்ய வாய்ப்புகள் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications