Latest Updates
-
கேரளா ஸ்டைல் கூட்டுக்கறி ரெசிபி... இதை ஒரு தடவை செஞ்சு பாருங்க... சாதத்துக்கு பெஸ்ட் சைடிஷ் இதுதான்...! -
ராகி பூரியும்.. வெங்காய மசாலாவும்.. - 15 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 18 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கெட்ட நேரம் தேடிவரும் நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்: ஏப்ரல் முதல் வாரத்தில் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கும்.. -
சனி-சூரியன்-சந்திரன் மீன ராசியில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க இருமடங்கு துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போறாங்களாம் -
73 வயதிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஃபிட்டாக இருப்பதன் ரகசியம் இதாங்க.. நீங்களும் தெரிஞ்சுக்கோங்க... -
முட்டைக்கோஸை வழக்கமான பொரியல் செய்யாம இந்த மாதிரி பொரியல் செய்யுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
அரசியல்வாதிகள் ஏன் எப்போதும் வெள்ளை சட்டை மட்டுமே அணிகிறார்கள் தெரியுமா? இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
பன்னீரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி பன்னீர் கீமா மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
பிராமின் ஸ்டைல் வெஜ் குருமா ரெசிபி... ஈஸியா இப்படி செய்யுங்க... சப்பாத்தி, பூரிக்கு டக்கரா இருக்கும்...!
சனி செவ்வாய் சேர்க்கையால் மே 17 வரை இந்த ராசிக்காரங்க ரொம்பவும் எச்சரிக்கையாக இருக்கணும்..
ஜோதிட சாஸ்திரப்படி, இரட்டை யோகம் மிகவும் அசுபமாக கருதப்படுகிறது. கும்பத்தில் சனி, செவ்வாய் சேர்க்கையால் 12 ராசிகளிலும் ஒருவித மோசமான தாக்கம் இருந்தாலும், 3 ராசிக்காரர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
வேத ஜோதிடத்தின் படி, சனிக்கும் செவ்வாய்க்கும் இடையே ஒரு பகை உணர்வு உள்ளது. பகை உணர்வு கொண்ட இரண்டு கிரகங்கள் ஒரு ராசியில் ஒன்றாக பயணித்தால், அதன் விளைவாக பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். இந்நிலையில் 2022 ஏப்ரல் 29 முதல் மே 17 வரை செவ்வாய் மற்றும் சனி ஒன்றாக கும்ப ராசியில் சேர்ந்து பயணிக்கின்றன. இதில் சனி பகவான் ஏப்ரல் 29 ஆம் தேதி கும்ப ராசிக்கு வந்துள்ளார். இந்த ராசியில் ஏற்கனவே செவ்வாய் பயணித்து வருகிறார்.

கும்ப ராசியில் சனியும், செவ்வாயும் இணைவதால், அந்த ராசியில் இரட்டை யோகம் உருவாகிறது. ஜோதிட சாஸ்திரப்படி இந்த யோகம் மிகவும் அசுபமாக கருதப்படுகிறது. கும்பத்தில் சனி, செவ்வாய் சேர்க்கையால் 12 ராசிகளிலும் ஒருவித மோசமான தாக்கம் இருந்தாலும், 3 ராசிக்காரர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனெனில் இந்த யோகத்தால் 3 ராசிக்காரர்கள் அதிக சிரமங்களை சந்திக்க நேரிடும். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

கடகம்
கடக ராசியின் 8 ஆவது வீட்டில் சனி மற்றும் செவ்வாய் சேர்க்கை நிகழ்ந்துள்ளது. 8 ஆவது வீடு வயது, ஆபத்து மற்றும் விபத்து ஆகியவற்றின் வீடாக கருதப்படுகிறது. ஆகவே, கடக ராசிக்காரர்களுக்கு இந்த சேர்க்கையால் பெரிய பாதிப்பு ஏற்படும். பணியிடத்தில் எவ்வித ஆபத்தும் ஏற்படாதவாறு கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இக்காலத்தில் எந்த ஒரு சிறிய தவறும் பெரிய மோசமான விளைவை ஏற்படுத்தும். குறிப்பாக வாகனம் ஓட்டும் போது கவனமாக ஓட்ட வேண்டும்.

கன்னி
கன்னி ராசியின் 6 ஆவது வீட்டில் சனி மற்றும் செவ்வாய் சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இந்த வீடு கடன், எதிரிகள், ஆரோக்கியம் மற்றும் கடின உழைப்பு ஆகியவற்றை குறிக்கிறது. ஆகவே கனனி ராசிக்காரர்கள் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். எதிரிகளிடம் உஷாராக இருக்க வேண்டும். அதிக செலவுகளால் கடன் வாங்கும் வாய்ப்பு ஏற்படலாம். எனவே உங்கள் செலவுகளை கவனியுங்கள்.

கும்பம்
கும்ப ராசியின் முதல் வீட்டில் சனி மற்றும் செவ்வாய் சேர்க்கை நிகழ்ந்துளளதால், இக்காலம் கும்ப ராசிக்காரர்கள் அதிக சிரமங்களை சந்திக்க நேரிடும். இக்காலத்தில் இந்த ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மேலும் இக்கால கட்டத்தில் இந்த ராசிக்காரர்கள் அதிக கோபம் மற்றும் எரிச்சல் கொள்வார்கள். வாழ்க்கைத் துணை மற்றும் உடன் பணிபுரிபவர்களுடன் தகராறு ஏற்படுவதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது.

சனி-செவ்வாய் சேர்க்கையின் பாதிப்புகளை தவிர்ப்பதற்கான பரிகாரங்கள்:
* செவ்வாய் மற்றும் சனி சேர்க்கையால் அதிக பாதிப்புகளை சந்திப்பவர்கள், செவ்வாய் கிழமைகளில் பஜ்ரங் பானை சொல்ல வேண்டும்.
* சனி மற்றும் செவ்வாய் பகவானுக்கு உரிய மந்திரங்களை உச்சரிக்க வேண்டும்.
* சனி-செவ்வாய் சேர்க்கையால் பாதிக்கப்பட்டவர்கள் சனி மற்றும் செவ்வாய் தொடர்பான பொருட்களை தானம் செய்ய வேண்டும்.



Click it and Unblock the Notifications











