மகா சிவராத்திரியில் 'இந்த' மந்திரங்களை கூறி சிவனை வழிபட்டால் உங்கள் வாழ்வில் சகலமும் கிடைக்குமாம்!

இந்த மகா சிவராத்திரியில் சிவபெருமானின் சக்தி வாய்ந்த சில மந்திரங்களை உச்சரிப்பதன் மூலம் தன்னை முழுவதுமாக அர்ப்பணித்துக் கொள்கிறது.

சிவபெருமான் அழிக்கும் கடவுள் என்று கூறப்படுகிறது. அவர் பிரம்மா, விஷ்ணு மற்றும் மகேஷ் கொண்ட புனித மும்மூர்த்திகளில் ஒருவர் சிவன்(மகேஷ்). அவரது மூர்க்கமான மற்றும் கடுமையான ஆளுமை இருந்தபோதிலும், சிவபெருமான் எளிதில் மகிழ்ச்சியடைபவர் என்று கூறப்படுகிறது. சிவபெருமான் அழிக்கும் கடவுள் என்று கூறப்பட்டாலும், அவர் கருணையின் அடையாளம். சிவபெருமானின் திருவிளையாடல்களில் அவரின் பல விளையாட்டுக்களை தெரிந்துகொள்ளலாம். சிவன் தனது பக்தர்களை எல்லாவிதமான தீமைகளிலிருந்தும், அசம்பாவிதங்களிலிருந்தும் எப்போதும் காப்பாற்றுகிறார். மார்ச் 1ஆம் தேதி வரும் மகா சிவராத்திரியில் சிவனை வழிபட்டு பல நன்மைகளை பெறுங்கள்.

maha-shivratri-2022-powerful-mantras-of-lord-shiva-that-you-can-chant

சிவபெருமானை முழு பக்தியுடனும் அர்ப்பணிப்புடனும் வழிபட்டால் அவரின் அருளைப் பெறலாம் என்பது ஐதீகம். பக்தர்கள் அவருடைய ஆசீர்வாதத்தைப் பெற அடிக்கடி மந்திரத்தை உச்சரிப்பார்கள். இந்த மகா சிவராத்திரியில் சிவபெருமானின் சக்தி வாய்ந்த சில மந்திரங்களை உச்சரிப்பதன் மூலம் தன்னை முழுவதுமாக அர்ப்பணித்துக் கொள்கிறது. சிவபெருமானை மகிழ்விக்க நீங்கள் ஜபிக்கக்கூடிய சில மந்திரங்களை இக்கட்டுரையில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பஞ்சாக்ஷரி சிவ மந்திரம்

பஞ்சாக்ஷரி சிவ மந்திரம்

ஓம் சிவாய நம

பொருள்: சிவபெருமானை வணங்குகிறேன். சிவன் உயர்ந்த கடவுள் மற்றும் ஒருவரின் உள்ளம். இந்த மந்திரத்தை உச்சரிப்பதன் மூலம் ஒரு நபர் சிவனை அழைக்க முடியும். இந்த மந்திரம் சுய உந்துதலை அதிகரிப்பதிலும் பாதுகாப்பைத் தேடுவதிலும் கவனம் செலுத்துகிறது.

மஹாமிருத்யுஞ்சய மந்திரம்

மஹாமிருத்யுஞ்சய மந்திரம்

ஓம் த்ரயம்பகம் யஜாமஹே சுகந்திம் புஷ்டி வர்தனம் |

உர்வாருகமிவ பந்தனான் மிருத்யோர் முக்ஷிய மாம்ர்தாத் ||

பொருள்: ஓம் சிவாய நமக, நாங்கள் மூன்று கண்களை உடைய சிவனை வணங்குகிறோம். அவர் நறுமணமுள்ள மேனியை கொண்டுள்ளவர். எப்போதும் தனது அன்பாலும் ஆசீர்வாதங்களாலும் உலகை பாதுகாக்கிறார். இந்த அழியாத உலகத்திலிருந்து தங்களைப் பிரித்துக்கொள்ள விரும்பாத மரணத்திலிருந்து விடுதலை பெற விரும்புகிறோம்.

ருத்ர மந்திரம்

ருத்ர மந்திரம்

ஓம் நமோ பகவதே ருத்ரே

பொருள்: ஓ ருத்ரா (சிவபெருமானின் மூர்க்கமான மற்றும் போர்வீரன் வடிவம்), என் பக்தியின் மூலம் உன்னை மகிழ்விக்க நான் இங்கு வந்துள்ளேன்.

சிவ காயத்ரி மந்திரம்

சிவ காயத்ரி மந்திரம்

ஓம் தத்புருஷாய வித்மஹே

மஹாதேவாய தீமஹி தன்னோ

ருத்ரஹ் பிரச்சோதயாத்

பொருள்: ஓம். உலகின் பெரிய கடவுளே, உமது நாமத்தை உச்சரித்து தியானம் செய்ய நான் இங்கு வந்துள்ளேன். எனக்கு நல் புத்தியையும் ஞானத்தையும் கொடுங்கள். அன்புள்ள ருத்ரா, தயவுசெய்து என் மன கவலைகளை நீக்கி மகிழ்ச்சியுற செய்யுங்கள்.

சிவ தியான மந்திரம்

சிவ தியான மந்திரம்

கராசரண கிருதம் வா காய்ஜம் கர்மஜம் வா ஷ்ரவண்ணயஞ்சம் வா மாம்சம் வா பரதம் |

விஹிதம் விஹிதம் வா ஸர்வ் மேதத் க்ஷமஸ்வ ஜே ஜே கருணாப்தே ஸ்ரீ மஹாதேவ் சம்போ ||

பொருள்: ஒருவர் எதிர்கொள்ளும் மன அழுத்தம், நிராகரிப்பு, தோல்வி, மனச்சோர்வு மற்றும் பிற எதிர்மறை சக்திகளிலிருந்து உடல், மனம் மற்றும் ஆன்மாவைச் சுத்தப்படுத்த, உன்னதமான உங்களை வணங்குகிறேன். என்னை ஆசிர்வதியுங்கள்.

சிவ ஸ்தோத்திரம்

சிவ ஸ்தோத்திரம்

நமஸ்தே அஸ்து பகவான் விஸ்வேஷ்வராய மஹாதேவாய த்ராயம்பக் ஆய திரிபுராந்தக ஆய த்ரிகாலாக்னி-

காலாய கால அக்னி- ருத்ராய நீலகண்டாய மிருத்யுஞ்சயாய ஸர்வேஸ்வராய சதாசிவாய ஸ்ரீமன் மஹாதேவாய நமஹ்.

பொருள்: உன்னதமான இறைவனே, உங்களை வணங்குகிறேன். நீங்கள் பிரபஞ்சத்தின் இறைவன், எல்லாவற்றிலும் பெரியவர்! மூன்று கண்களை உடையவர், மூன்று உலகங்களையும் (நிழலிடா, உடல் மற்றும் காரண) ஒளிர்பவர். கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் தனக்குள்ளேயே கட்டுப்படுத்துபவர். நீங்கள் உலகத்தை ஒழுங்குபடுத்துகிறீர்கள். எல்லாவற்றையும் உங்களால் செய்ய முடியும். உங்களது உடல் நீலவானம் மற்றும் சமுத்திரம் போன்ற பரந்து விரிந்து மரணம் மற்றும் காலத்தின் அதிபதியான எமனை வென்றவன்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion