Latest Updates
-
காலிஃப்ளவரும், பட்டாணியும் இருந்தா.. இந்த மாதிரி கிரேவி செய்யுங்க.. சப்பாத்தி வேற லெவல்-ல இருக்கும்.. -
குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
ஆட்டு ஈரலை இப்படி வறுவல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட போட்டி போட்டு காலி பண்ணுவாங்க... -
பெண்களே! தொப்பை குறையணுமா? அப்ப இந்த ஃபிட்னஸ் கோச் சொல்ற 5 உடற்பயிற்சியை வீட்லயே செய்யுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கு சுக்கிர திசை ஆரம்பிக்குது.. இனி கையில் பணம் குவியப்போகுது.. -
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
இந்த வாரம் மட்டன் வாங்குனா.. இந்த சுக்கா கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 08 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்குமாம்...! -
வார ராசிபலன் (01 March 2026-07 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும்! -
மட்டன் வாங்குனா இந்த மாதிரி நெல்லூர் ஸ்டைலில் குழம்பு வைச்சு பாருங்க... தோசை, சாதத்துக்கு சூப்பரா இருக்கும்...
பண பிரச்சனை அதிகமா இருக்கா? அப்ப கிருஷ்ண ஜெயந்தி அன்னைக்கு இத செய்யுங்க.. உடனே சரியாயிடும்...
பகவான் கிருஷ்ணரின் மனைவி ருக்மணி, லட்சுமி தேவியின் அவதாரம். எனவே கிருஷ்ணரை வழிபடும் போது ஒருசில விஷயங்களை தவறாமல் செய்தால், கிருஷ்ணருடன் லட்சுமி தேவியும் மகிழ்ச்சியடையலாம் என்று நம்பப்படுகிறது.
கிருஷ்ண ஜெயந்தி ஒவ்வொரு ஆண்டும் மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும் இந்துக்களின் விழாவாகும். பகவான் கிருஷ்ணர் ஆவணி மாதத்தில் வரும் அஷ்டமி நாளில் பிறந்தார். அதன் பின்னர் ஒவ்வொரு ஆண்டும் இந்த விழா கொண்டாடப்பட்டு வருகிறது. கிரகொரியன் நாட்காட்டியின் படி, ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.

உலகத்தில் இருந்து தீமையையும், பாவத்தையும் அழிப்பதற்காக விஷ்ணு பகவான் கிருஷ்ண அவதாரத்தில் பிறந்தார். அப்போதிருந்து ஒவ்வொரு ஆண்டும், இந்த விழா சிறப்பாக கிருஷ்ண ஜன்மாஷ்டமி என கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு கிருஷ்ண ஜன்மாஷ்டமி ஆகஸ்ட் 30, திங்கட்கிழமை கொண்டாடப்படுகிறது. பகவான் கிருஷ்ணரின் மனைவி ருக்மணி, லட்சுமி தேவியின் அவதாரம். எனவே கிருஷ்ணரை வழிபடும் போது ஒருசில விஷயங்களை தவறாமல் செய்தால், கிருஷ்ணருடன் லட்சுமி தேவியும் மகிழ்ச்சியடையலாம் என்று நம்பப்படுகிறது.
பின்வரும் விஷயங்களை கிருஷ்ண ஜெயந்தி நாளில் செய்தால், அது பல நன்மைகளை வழங்கும். அதுவும் நீங்கள் பண பிரச்சனையால் கஷ்டப்பட்டால், கீழே கொடுக்கப்பட்டுள்ள விஷயங்களை செய்யும் போது, கிருஷ்ணர் மற்றும் லட்சுமி தேவியின் அருள் முழுமையாக கிடைத்து, பணப்பிரச்சனைகள் நீங்கி, கடனில் இருந்தும் விடுபடுவீர்கள்.

மாடு அல்லது கன்று சிலை
ஜோதிடர்களின் கூற்றுப்படி, கிருஷ்ண ஜெயந்தி நாளில் மாடு அல்லது கன்றுக்குட்டியின் சிலையை வீட்டிற்கு வாங்கி வருவது நல்லது. இதனால் வீட்டின் நிதி நிலைமை படிப்படியாக மேம்படும். மேலும் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பும் தம்பதிகளும் இவ்வாறு செய்வது நன்மை பயக்கும்.

ஏழு பெண் குழந்தைகளுக்கு பாயாசம் கொடுக்கவும்
நீங்கள் ஒரு நல்ல வேலையைத் தேடிக் கொண்டிருந்தால் அல்லது உங்கள் வருமானத்தை அதிகரிக்க நினைத்தால், கிருஷ்ண ஜெயந்தி நாளில் உங்கள் வீட்டிற்கு ஏழு பெண் குழந்தைகளை அழைத்து அவர்களுக்கு பாயாசத்தைக் கொடுங்கள். உங்கள் வருமானம் அதிகரிக்க நினைப்பவர்கள், அடுத்த ஐந்து வெள்ளிக்கிழமைகளுக்கு இச்செயலைத் தொடரவும்.

பாரிஜாத மலர்
கிருஷ்ணரின் அருளைப் பெற கிருஷ்ண ஜெயந்தி நாளில் அவருக்கு பாரிஜாத பூவை வழங்கலாம். அதோடு சங்கில் பாலை நிரப்பி, அதை கிருஷ்ணருக்கு படைத்தால், கிருஷ்ணரின் அருளுடன் லட்சுமி தேவியின் அருளையும் பெறலாம். மேலும் இச்செயலால் லட்சுமி தேவி உங்களின் அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றுவார். அதோடு இச்செயலை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் செய்வது மிகவும் நல்லது.

துளசி
கிருஷ்ண ஜெயந்தி நாளில் துளசியை மாலை வேளையில் வழிபட்டால், கடன் பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும். மேலும் துளசி செடியை 11 முறை சுற்றிக் கொண்டே ஓம் நமோ வாசுதேவாய என்னும் மந்திரத்தை உச்சரிக்கவும். இது எல்லா கடன்களில் இருந்தும் உங்களை விடுவிக்கும்.

குங்குமப்பூ பால்
கிருஷ்ண ஜெயந்தி அன்று நள்ளிரவு 12 மணிக்கு பாலில் குங்குமம் சேர்த்து கிருஷ்ணருக்கு அபிஷேகம் செய்தால், வீட்டில் மகிழ்ச்சியும், செழிப்பும் இருக்கும் மற்றும் நிதி நிலையையும் இது மேம்படுத்தும்.



Click it and Unblock the Notifications











