Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
2020 கார்த்திகை தீபத்தின் தேதி, நேரம் மற்றும் சிறப்பம்சங்கள்!
தீபாவளி திருநாளை போலவே கார்த்திகை தீப நாளிலும் விளக்குகள் ஏற்றி வழிபடுவது வழக்கமாகும். எண்ணெய் ஊற்றிய அகல் விளக்குகளை வீடு மற்றும் கோயில்களில் ஏற்றி வழிபடுவர்.
தமிழ் மாத நாட்காட்டியின் படி கார்த்திகை தீபம் என்பது ஒரு முக்கிய விழாவாக கொண்டாடப்படுகிறது. கார்த்திகை மாத பௌர்ணமி அன்று கார்த்திகை நட்சத்திரம் வரும் நாளில் கார்த்திகை தீபம் கொண்டாடப்படுகிறது. கார்த்திகை தீப நாளன்று சிவபெருமானின் இரண்டாவது புதல்வனும், முருகன், சண்முகன், சுப்ரமணியன் என்று அழைக்கப்படும் தமிழ் கடவுள் முருகப்பெருமானை வழிபடுவது வழக்கம்.

தீபாவளி திருநாளை போலவே கார்த்திகை தீப நாளிலும் விளக்குகள் ஏற்றி வழிபடுவது வழக்கமாகும். எண்ணெய் ஊற்றிய அகல் விளக்குகளை வீடு மற்றும் கோயில்களில் ஏற்றி வழிபடுவர். கார்த்திகை தீப நாள் பற்றி மேலும் அறிந்து கொள்ள இந்த பதிவு உங்களுக்கு உதவும்.

2020 ஆம் ஆண்டு கார்த்திகை தீபம்:
இந்த ஆண்டு 2020 கார்த்திகை தீபம் நவம்பர் மாதம் 29 ஆம் நாள் கொண்டாடப்படவுள்ளது.

கார்த்திகை நட்சத்திர நேரம்:
நவம்பர் 29ஆம் தேதி கார்த்திகை நட்சத்திரம் அதிகாலை 3.19 மணிக்கு தொடங்கி நவம்பர் 30ம் தேதி காலை 6.04 மணிக்கு நிறைவடைகிறது.

கார்த்திகை தீப நாளின் சிறப்பம்சம்:
கார்த்திகை தீபம் குறித்து பல்வேறு கதைகள் சொல்லப்படுகிறது. முருகப்பெருமான் பிறந்த நாளாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது. தாரகாசுரன் என்னும் அரக்கனை அழிக்க சிவபெருமானின் மூன்றாவது கண்ணான நெற்றிக்கண்ணில் இருந்து உருவானவர் முருகப்பெருமான். முருகப்பெருமான் ஆறு முகத்துடன், 12 கைகளுடன் பிறந்தார். 6 கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டார். துலா, நிதத்தனி, அப்ரயந்தி, வர்ஷயந்தி, மேகயந்தி, சிபுனிகா ஆகியோர் அந்த 6 கார்த்திகை பெண்கள் ஆவர். மற்றொரு புராணத்தின்படி அந்த 6 கார்த்திகை பெண்கள் பெயர்கள் வேறுபடுகிறது. அவர்கள் பிரபா , அபா, தேஜா, பவ்யா, ஷோபா, சுக்ரிதி போன்றோர் ஆவர்.
முருகப்பெருமானின் 6 முகங்களும் 6 வெவ்வேறு குணங்களை குறிப்பிடுகின்றன. தத்புருஷம், அகோரம், சத்யோஜதம், வாமதேவம், ஈசானம், அதோமுகம் போன்றவை இந்த குணங்களாகும்.

சிவனின் நெற்றிக்கண்ணில் தோன்றிய கதை
மற்றொரு புராணத்தின்படி, முருகப்பெருமான் சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து வெளிவந்த நெருப்பில் இருந்து உருவானவர் என்றும் சரவண பொய்கை ஆற்றில் 6 பகுதிகளாக பிறந்தார் என்றும் கூறப்படுகிறது. தேவி பார்வதி அந்த ஆற்றில் இருந்து ஒவ்வொரு பகுதியையும் எடுத்து ஒன்றாக்கி இறைவன் முருகனுக்கு வடிவம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. அந்த நிகழ்வு இந்த நாளில் நடந்ததாகவும் கூறப்படுகிறது.

கார்த்திகை தீப நாளுடன் ஒருங்கிணைந்த மற்றொரு புராணம்
விஷ்ணு பகவான் மற்றும் பிரம்ம தேவருக்கு இடையில் யார் சிறந்தவர் என்ற போட்டி எழுந்தது. அந்த நேரத்தில் சிவபெருமான் ஜோதி வடிவமாக தோன்றிய நாளாக இந்த நாள் கருதப்படுகிறது. இவர்கள் இருவரின் அகந்தையை அழிக்கும் நோக்கத்தோடு சிவபெருமான் ஜோதி வடிவமாக இருவர் முன்னிலையில் தோன்றினார். இந்த ஜோதியின் தொடக்கத்தையும் முடிவையும் கண்டுபிடிக்குமாறு இருவரிடமும் சிவபெருமான் கூறினார். அந்த ஒளியின் முடிவைக் காண பகவான் விஷ்ணு பன்றி உருவம் கொண்டு பூமிக்கு அடியில் சென்றார். பிரம்ம தேவர் அன்னத்தின் உருவத்தைக் கொண்டு அந்த ஒளியின் தொடக்கத்தைக் காண மேல் நோக்கி சென்றார். நீண்ட தூரம் பயணித்தும் விஷ்ணு பகவான் அந்த ஒளியின் அடியைக் காண முடியவில்லை. பிரம்ம தேவரும் ஒளியின் தொடக்கத்தைக் காண முடியவில்லை.
ஆனால் பிரம்மதேவர் ஒரு தந்திரம் செய்தார். அவர் மேல் நோக்கி பயணிக்கும்போது சிவபெருமானின் தலையில் இருந்து ஒரு தாழம்பூ விழுந்து கீழே வந்து கொண்டிருந்தது. அந்த பூவிடம் பிரம்மதேவர் இந்த போட்டியில் வெற்றி பெற்றார் என்பதற்கு சாட்சியாக இருக்க தாழம்பூவின் உதவியை நாடினார். தாழம்பூவும் இதற்கு சம்மதம் தெரிவித்தது. இருப்பினும் உண்மையை அறிந்த சிவபெருமான் பிரம்மதேவரை தண்டிக்கும் விதமாக அவருடைய ஐந்து தலைகளில் ஒன்றைத் துண்டித்தார். தவறான சாட்சி கூறியதற்காக தாழம்பூவிற்கும் தண்டனை அளிக்கப்பட்டது. அன்றுமுதல் சிவபூஜையில் தாழம்பூவை பக்தர்கள் சேர்த்துக் கொள்வதில்லை.



Click it and Unblock the Notifications











