Latest Updates
-
புதன் ரிஷப ராசிக்கு செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் புயலடிக்கப் போகுதாம் -
ஆந்திரா ஸ்டைல் பாலக் கீரை தொக்கு ரெசிபி - செஞ்சு பாருங்க, டிபன், சாதத்துக்கு செமையா இருக்கும் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா.. ஒருவாட்டி இந்த தொக்கு செய்யுங்க.. இட்லி, தோசை, சாதத்துக்கு செமயா இருக்கும்.. -
ஐபிஎல் மோகத்தால் உறவில் விரிசலா? கிரிக்கெட் ஜுரத்திலும் குடும்ப அமைதியை காப்பது எப்படி? -
இந்த 4 ராசி பெண்கள் உலகின் சிறந்த அம்மாவாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
கோடைக்கால சரும பிரச்சனைகளை தடுக்கணுமா? அப்ப தேனை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
ஜான்வி கபூர் - ஷிகர் பஹாரியா திருமணம்? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த போனி கபூரின் அதிரடி விளக்கம்! -
உங்க கிட்னி ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப இந்த பழங்களை அடிக்கடி சாப்பிடுங்க -
2 ஆண்டுகள் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 4 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
காரைக்குடி சுரைக்காய் மசியல் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, செம சைடிஷா இருக்கும்
இந்த தீபாவளி மறக்க முடியாத தீபாவளியா இருக்க உங்க ராசிப்படி நீங்க என்ன பண்ணனும் தெரியுமா?
ஜோதிடத்தில் தீபாவளியை கொண்டாடுவதற்கு என்று சில வழிமுறைகள் உள்ளது. அதன்படி உங்கள் ராசிப்படி நீங்கள் எப்படி தீபாவளி கொண்டாட வேண்டும் என்று நமது ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
தீபாவளி பண்டிகை நெருங்கிவிட்டது, தீபாவளி கொண்டாட்டங்கள் களைகட்ட தொடங்கிவிட்டது. ஒவ்வொரு வருட தீபாவளியும் நமது புது அனுபவத்தை வழங்குகிறது. இந்த வருட தீபாவளியும் உங்களுக்காக ஒரு அனுபவத்தை தர காத்திருக்கிறது. அந்த அனுபவம் எப்படிப்பட்ட அனுபவமாக இருக்கப்போகிறது என்பதை உங்களின் செயல்கள்தான் முடிவுசெய்யும்.

ஜோதிடத்தில் தீபாவளியை கொண்டாடுவதற்கு என்று சில வழிமுறைகள் உள்ளது. அதன்படி உங்கள் ராசிப்படி நீங்கள் எப்படி தீபாவளி கொண்டாட வேண்டும் என்று நமது ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியும், பணப்பிரச்சினைகளும் இல்லாமல் இருக்க வேண்டுமெனில் உங்கள் ராசிப்படி தீபாவளி அன்று நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்
தீபாவளி அன்று உங்களின் லாக்கரில் சந்தனம் அல்லது குங்குமப்பூவை வெள்ளை நிறத்துணியில் கட்டி வையுங்கள். அது உங்கள் இல்லத்தில் செல்வத்தையும், வளத்தையும் அதிகரிக்கும்.

ரிஷபம்
தீபாவளி அன்று இரவு பசு நெய்யில் இரண்டு விளக்குகளை ஏற்றி வைக்கவும், அதன் இரண்டு திரிகளையும் ஒன்றாக இணைத்து வைக்கவும். இதனை உங்கள் வீட்டின் தனிமையான இடத்தில் வைத்து விட்டு உங்கள் வேண்டுதலைக் கூறவும். இது உங்கள் வேண்டுதலை நிறைவேற்றும்.

மிதுனம்
தீபாவளி நாளில் லக்ஷ்மி தேவியை வணங்கிய பிறகு ஒரு தேங்காயை நாணயத்துடன் சேர்த்து உங்கள் வேண்டுதலை கூறவும். அந்த தேங்காயை ஒரு சிவப்புத் துணியில் சுற்றி வீட்டின் தனிமையான மற்றும் சுத்தமான இடத்தில் வைக்கவும். உங்களின் வேண்டுதல் நிறைவேறியவுடன் அந்த தேங்காயை லக்ஷ்மி கோவிலில் வைத்து விடவும்.

கடகம்
தீபாவளி நாள் அன்று விஷ்ணு கோவிலில் மஞ்சள் நிற துணியை முக்கோண வடிவில் வெட்டி அதனை கொடியாக அந்த கோவிலில் கட்டி வைக்கவும். இந்த கொடி காற்றில் ஊசலாடும் படி கட்டவும், இது உங்களின் அதிர்ஷ்டத்தை பலமடங்கு அதிகரிக்கும். அடுத்த வருடம் வரை இந்த கொடி விழாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

சிம்மம்
தீபாவளி அன்று இரவில் உங்கள் வீட்டின் பிரதான வாயிலில் ஒரு நெய் விளக்கை ஏற்றி வையுங்கள். அந்த விளக்கை விடியும் வரை அணையாமல் பார்த்துக் கொண்டால் அது உங்களின் அதிர்ஷ்டத்தையும் அதிகரிக்கும்.

கன்னி
உங்களால் பணத்தை சேமிக்க முடியவில்லை என்றால் தீபாவளி அன்று உங்கள் லாக்கரில் தேங்காயை, லக்ஷ்மி படத்துடன்சேர்த்து ஒரு மஞ்சள் துணியில் சுற்றி வைக்கவும். இது உங்களின் வீட்டில் இருக்கும் பணக்கஷ்டத்தை நீக்கும்.

துலாம்
உங்கள் வாழ்க்கையில் அதிகளவு நிதி பிரச்சினை இருந்தால் அந்த துன்பத்தில் இருந்து தப்பிக்க தீபாவளி அன்று இரவு லக்ஷ்மி தேவியை வணங்கும் போது அவரின் பாதத்தில் கமல மாலையை வைக்கவும். பூஜை முடிந்த பிறகு அந்த கமல மாலையை நீங்கள் பணம் வைக்கும் இடத்தில் சிவப்பு நிற துணியில் சுற்றி வைக்கவும். இது உங்களின் அனைத்து பணப்பிரச்சினைகளையும் தீர்க்கும்.

விருச்சிகம்
உங்கள் பொருளாதார நிலை குறித்து நீங்கள் திருப்தியடையவில்லை என்றால் ஏதாவது ஒரு கோவிலில் இரண்டு வாழைக்கன்றுகளை நட்டு வைத்து அதனை நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள். அந்த மரம் காய்கள் கொடுக்கும்போது அதனை நீங்கள் பயன்படுத்தாமல் கோவிலுக்கே கொடுத்துவிடுங்கள்.

தனுசு
உங்கள் ராசிப்படி தீபாவளி அன்று வெற்றிலையில் ஸ்ரீ என்னும் எழுத்தை குங்குமத்தால் எழுதி அதனை உங்கள் வீட்டு லாக்கரில் வைக்கவும். அடுத்த நாள் இந்த வெற்றிலையை எடுத்து ஒரு பசுமாட்டிற்கு கொடுத்து விடவும்.

மகரம்
நீங்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு உங்களால் பணத்தை சேமிக்க முடியவில்லை என்றால் தீபாவளி அன்று சிவப்பு வண்ண இனிப்புகளை வைத்து விஷ்ணுவை வழிபடவும். இது உங்களுக்கு நல்ல பலனைத் தரும்.

கும்பம்
தீபாவளி அன்று இரவு தேங்காயில் நெய் ஊற்றி விளக்கேற்றி அதனை வைத்து லக்ஷ்மியை வழிபடவும், இது உங்களின் பொருளாதார நிலையை உயர்த்தும்.

மீனம்
உடனடியாக பணத்தைப் பெற லக்ஷ்மி தேவியின் கோவிலுக்கு நறுமண பொருட்களை தானம் செய்யுங்கள். . தீபாவளி நாளிலிருந்து, இந்த நடைமுறையை தவறாமல் பின்பற்றுங்கள், இவ்வாறு செய்வதன் மூலம், நீங்கள் விரைவில் செல்வந்தராக இருப்பீர்கள்.



Click it and Unblock the Notifications