Just In
- 4 hrs ago 18 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- 5 hrs ago Garlic Peels: பூண்டின் தோலில் இவ்வளவு நன்மைகளா? என்னென்ன-ன்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..
- 6 hrs ago Hair Care: பளபளப்பான மற்றும் வலிமையான முடி வேணுமா? கற்பூரத்தை இப்படி யூஸ் பண்ணுங்க... சர சரனு வளரும்...!
- 6 hrs ago 3 முள்ளங்கியும், 1 தக்காளியும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு செமயா இருக்கும்..
Don't Miss
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
சாணக்கிய நீதியின் படி ஆண்கள் இந்த ரகசியங்களை தெரியாம கூட மனைவியிடம் சொல்லக்கூடாதாம்... இல்லனா அவ்வளவுதான்...!
சாணக்யா ஒரு சிறந்த பொருளாதார நிபுணர் மற்றும் அரசியல்வாதி மற்றும் இராஜதந்திரி ஆவார். சாணக்கியரின் கொள்கைகள் அரசியலுக்கு மட்டுமின்றி மனித வாழ்க்கைக்கும் மிகவும் பயனுள்ளவை என்பதை காலம் இன்றுவரை நிரூபித்துக் கொண்டிருக்கிறது
சாணக்யா ஒரு சிறந்த பொருளாதார நிபுணர் மற்றும் அரசியல்வாதி மற்றும் இராஜதந்திரி ஆவார். சாணக்கியரின் கொள்கைகள் அரசியலுக்கு மட்டுமின்றி மனித வாழ்க்கைக்கும் மிகவும் பயனுள்ளவை என்பதை காலம் இன்றுவரை நிரூபித்துக் கொண்டிருக்கிறது. சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் மனித வாழ்க்கையை எளிதாகவும் வெற்றிகரமாகவும் மாற்றுவதற்கான பல அம்சங்களைக் குறிப்பிட்டுள்ளார். தொழில், நட்பு, திருமண வாழ்க்கை, செல்வம் மற்றும் பெண்கள் பற்றி பல விஷயங்களைப் பற்றி சாணக்கியர் தன்னுடைய சாணக்கிய நீதியில் கூறியுள்ளார்.
சாணக்கியர் தன்னுடைய சாணக்கிய நீதியில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான உறவு மற்றும் அவர்களின் குணாதிசயங்களைப் பற்றி விவாதிக்கிறார். இதை பின்பற்றுவதன் மூலம் உங்கள் திருமண வாழ்க்கையை மகிழ்ச்சியாக மாற்றலாம். கணவர் தங்கள் மனைவியிடம் தற்செயலாகக் கூட சொல்லக்கூடாத சில விஷயங்களைச் சொல்கிறார் சாணக்கியர் கூறியுள்ளார். இந்த விஷயங்களை அவர் தனது சாணக்கிய நீதியில் குறிப்பிட்டுள்ளார். இந்த தகவலை உங்கள் மனைவியிடமிருந்து மறைக்க வேண்டும், ஏனெனில் எதிர்காலத்தில் நீங்கள் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். சாணக்கிய நீதியின் கூற்றுப்படி, கணவர்கள் தங்கள் மனைவிகளிடம் சொல்லக்கூடாத விஷயங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
உங்கள் பலவீனங்கள்
தெரியாமல் கூட, எந்த ஒரு ஆணும் தன் மனைவியிடம் தன்னுடைய பலவீனங்களைப் பற்றி கூறாமல் கவனமாக இருக்க வேண்டும் என்று சாணக்கியர் கூறியுள்ளார். சாணக்கிய நீதியில் ஆண்கள் எப்போதும் தங்கள் பலவீனத்தை மனைவியிடமிருந்து மறைக்க வேண்டும் என்று கூறுகிறார். கணவனின் பலவீனம் மனைவிக்குத் தெரிந்தால், மனைவிகள் கணவரின் பலவீனத்தைப் பயன்படுத்தி தங்கள் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வார்கள் என்று சாணக்கியர் நம்புகிறார். அத்தகைய சூழ்நிலையில், கணவன் தனது பலவீனத்தை மனைவியிடம் இருந்து எப்போதும் மறைக்க வேண்டும் என்கிறார் சாணக்கியர்.
அவமானம்
கணவர்கள் தங்கள் மனைவியிடம் எப்போதும் தங்கள் அடைந்த அவமானங்களைப் பற்றி சொல்லக் கூடாது என்று சாணக்கிய நீதி குறிப்பிடுகிறது. இதை ஆண்கள் எப்போதும் மனதில் கொள்ள வேண்டும். கணவரின் அவமானத்தை மனைவியால் சகித்துக்கொள்ள முடியாது என்றும் இதை அறிந்தால் பிரச்சினைகள் அதிகரிக்கும் என்றும் சாணக்கியர் கூறுகிறார்.
செய்த நன்கொடை
தானம் அல்லது தொண்டு எப்போதும் இரகசியமாகச் செய்ய வேண்டும் என்று பல சாஸ்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. தானம் பற்றிய தகவல்கள் எப்போதும் ரகசியமாக வைக்கப்பட வேண்டும் என்றும் சாணக்கியர் கூறியுள்ளார். மற்றவர்களுக்கு ஏதாவது தானம் செய்தால் அதை மனைவிக்கு தெரிவிக்கக் கூடாது என்று சாணக்கிய நீதி கூறுகிறது.
சேமிப்பு பற்றிய தகவல்கள்
சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் தனது சம்பாத்தியத்தைப் பற்றி எந்தக் கணவனும் தன் மனைவியிடம் கூறக்கூடாது என்று குறிப்பிட்டுள்ளார். பெண்கள் தங்கள் கணவரின் சேமிப்பைப் பற்றி அறிந்தால், அவர்கள் அதைக் கைப்பற்றி, தங்கள் கணவர்கள் பணத்தைச் செலவு செய்வதைத் தடுப்பார்கள் என்று சாணக்கியர் கூறுகிறார். கணவனின் சேமிப்பைப் பற்றி மனைவிக்குத் தெரிந்தால், அவரும் அதிகப் பணத்தைச் செலவழிக்க முயற்சி செய்யலாம்.
நல்ல திருமண வாழ்க்கை பற்றி சாணக்கியர் என்ன கூறுகிறார்
சாணக்கிய நீதியின் படி, ஒருவர் வாழ்க்கையில் வெற்றிபெற, அவரது திருமண மற்றும் குடும்ப வாழ்க்கையில் அமைதியும் மகிழ்ச்சியும் இருப்பது அவசியம். அதற்கு கணவனும்-மனைவியும் இணைந்து செயல்பட வேண்டும். மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்கு நேர்மறை சிந்தனை மிக முக்கியமான விஷயம், அது இல்லையெனில் உங்கள் உறவு மோசமடையத் தொடங்கும். பதற்றம், மகிழ்ச்சியின்மை மற்றும் சிக்கல்கள் நிறைந்த உறவுகள் ஒரு நபரின் வெற்றிக்கான பாதையில் தடையாக மாறும். இந்தப் பிரச்சனைகள் தொடரும் வரை, நீங்கள் எவ்வளவு கடினமாக உழைத்தாலும், எவ்வளவு திறமையாக இருந்தாலும், உங்களுக்கு வெற்றி கிடைக்காது. எனவே தம்பதிகளாக இணைந்து இந்த தடைகளை கடந்து வெற்றிக்காக உழைக்க வேண்டும்.