Latest Updates
-
ரம்ஜான் ஸ்பெஷல் தெலுங்கானா மட்டன் கறி - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 21 மார்ச் 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
குரு-சந்திரன் உருவாக்கும் கஜகேசரி ராஜயோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு சகல நன்மைகளும் தேடிவரப்போகுது...! -
தமிழ்நாட்டின் ஸ்டார் அரசியல்வாதிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிட போகிறார்கள் தெரியுமா? -
தேர்தல் பிரச்சாரங்களின் போது ஏன் இளநீர் அரசியல் தலைவர்களின் விருப்பமான பானமாக உள்ளது தெரியுமா? -
கோடை வெயிலால் முகம் டல்லா, கருப்பா இருக்கா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
பாய் வீட்டு சிக்கன் பிரியாணி ரெசிபி... இந்த ரம்ஜானுக்கு இப்படி பிரியாணி செஞ்சு பாருங்க... தாறுமாறா இருக்கும்! -
வெண்டைக்காய் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி மொறுமொறுன்னு சிப்ஸ் செஞ்சு சாப்பிடுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க புரியாத புதிராக இருப்பார்களாம்... இவங்கள யாராலும் புரிஞ்சிக்க முடியாதாம்...! -
மீன ராசியில் அரிய சனி-செவ்வாய் சேர்க்கை: ஏப்ரலில் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்..
மேஷத்தில் உருவாகும் புதாதித்ய யோகத்தால் இந்த ராசிக்காரங்க வாழ்க்கை சூப்பரா இருக்கப் போகுது...
ஏப்ரல் 15 முதல் புதனும் சூரியனும் மேஷ ராசியில் பயணிப்பதால், புதாதித்ய யோகம் உருவாகிறது. மேஷ ராசியில் உருவாகும் புதாதித்ய யோகத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு நற்பலன்கள் கிடைக்கப் போகிறது என்பதை இப்போது காண்போம்.
நவகிரகங்களின் தலைவர் சூரியன் மற்றும் புத்திகாரகன் புதன். கிரகங்கள் மனிதர்களின் வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அதுவும் கிரகங்களின் ராசி மாற்றம் மட்டுமின்றி, கிரகங்களின் சேர்க்கையும் மனித வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் ராசியை மாற்றும். அப்படி மாற்றும் போது சில கிரகங்கள் ஒன்றாக ஒரே ராசியில் பயணிக்கும்.

கிரகங்களில் வேலை, வியாபாரம், பேச்சு போன்றவற்றின் காரணியாக புதன் கருதப்படுகிறார். தைரியம், பதவி- கௌரவம் மற்றும் ஆட்சி-நிர்வாகம் போன்றவற்றின் காரணியாக சூரியன் கருதப்படுகிறார். சூரியனும், புதனும் ஒன்றாக ஒரு ராசியில் இருந்தால், அப்போது மங்களகரமான புதாதித்ய யோகம் உருவாகும்.

மேஷத்தில் புதாதித்ய யோகம்
2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 7 ஆம் தேதி செவ்வாய் கும்ப ராசிக்கு சென்றார். மறுநாள் ஏப்ரல் 8 ஆம் தேதி புதன் மேஷ ராசிக்கு சென்றார். இந்த மேஷ ராசியில் புதன் ஏப்ரல் 25 ஆம் தேதி வரை இருந்து, பின் ரிஷப ராசிக்கு செல்லவிருக்கிறார். அதே போல் மார்ச் 15 ஆம் தேதி முதல் மீன ராசியில் பயணித்த சூரியன், ஏப்ரல் 14 ஆம் தேதி மேஷ ராசிக்கு சென்றார். ஏப்ரல் 15 முதல் புதனும் சூரியனும் மேஷ ராசியில் பயணிப்பதால், புதாதித்ய யோகம் உருவாகிறது. மேஷ ராசியில் உருவாகும் புதாதித்ய யோகத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு நற்பலன்கள் கிடைக்கப் போகிறது என்பதை இப்போது காண்போம்.

மேஷம்
புதனும், சூரியனும் மேஷ ராசியின் முதல் வீட்டில் இணைவதால், இக்காலத்தில் இந்த ராசிக்காரர்களின் தைரியம், நம்பிக்கை மற்றும் புத்திசாலித்தனம் போன்றவை அதிகரிக்கும். இக்கால கட்டத்தில் முதலீடு செய்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வருமான ஆதாரங்கள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கும்.

ரிஷபம்
ரிஷப ராசியின் 12 ஆவது வீட்டில் புதாதித்ய யோகம் உருவாவதால், இக்காலத்தில் உங்களின் கௌரவம் உயரும். வெளிநாடு தொடர்பான வியாபாரத்தால் நன்மை கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் வெற்றி பெறுவார்கள். மொத்தத்தில், இக்காலத்தில் நல்ல பலன்கள் கிடைக்கும்.

மிதுனம்
மிதுன ராசியின் 11 ஆவது வீட்டில் புதனும், சூரியனும் இணைகிறார்கள். சொந்த ராசியில் புதன் சூரியனுடன் இணைவதால், இக்காலம் இந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ரியல் எஸ்டேட் தொடர்பான விஷயங்கள் தீரும். முக்கியமாக இக்காலத்தில் பண வரவு சிறப்பாக இருக்கும்.

சிம்மம்
புதன் மற்றும் சூரியன் சிம்ம ராசியின் 9 ஆவது வீட்டில் இணைகிறார்கள். இதனால் இக்கால கட்டத்தில் அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். பொருளாதார பக்கம் வலுவாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சந்தித்த தடைகள் இக்காலத்தில் நீங்கும். மேலும் இந்த ராசிக்காரர்களின் கௌரவம் உயரும்.



Click it and Unblock the Notifications











