Latest Updates
-
இன்றைய ராசிபலன் 10 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆபத்துகள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் 2027 வரை துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சத்தான பீர்க்கங்காய் சாதம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
இந்தியாவிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட மாவட்டம் எது? அது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
ஹைதராபாத் முட்டை மசாலா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - தோசை, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
குருபகவான் கடக ராசியில் உச்சமடைவதால் கோடி நன்மைகளை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சன்டே ஸ்பெஷல் - சிக்கன் வாங்குனா இந்த மாதிரி குழிப் பணியாரம் செஞ்சு பாருங்க - வித்தியாசமா, சூப்பரா இருக்கும் -
பாகிஸ்தானில் இந்திய ரூபாயின் மதிப்பு எவ்ளோ தெரியுமா? இந்திய ரூபாய் பாகிஸ்தானை விட வலிமையாக இருக்க காரணம் என்ன? -
கேரளா ஸ்டைல் நாடன் சிக்கன் கறி - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 09 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க அதிர்ஷ்ட படிக்கட்டில் வேகமாக ஏறப் போறாங்களாம்
மேஷத்தில் உருவாகும் புதாதித்ய யோகத்தால் இந்த ராசிக்காரங்க வாழ்க்கை சூப்பரா இருக்கப் போகுது...
ஏப்ரல் 15 முதல் புதனும் சூரியனும் மேஷ ராசியில் பயணிப்பதால், புதாதித்ய யோகம் உருவாகிறது. மேஷ ராசியில் உருவாகும் புதாதித்ய யோகத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு நற்பலன்கள் கிடைக்கப் போகிறது என்பதை இப்போது காண்போம்.
நவகிரகங்களின் தலைவர் சூரியன் மற்றும் புத்திகாரகன் புதன். கிரகங்கள் மனிதர்களின் வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அதுவும் கிரகங்களின் ராசி மாற்றம் மட்டுமின்றி, கிரகங்களின் சேர்க்கையும் மனித வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் ராசியை மாற்றும். அப்படி மாற்றும் போது சில கிரகங்கள் ஒன்றாக ஒரே ராசியில் பயணிக்கும்.

கிரகங்களில் வேலை, வியாபாரம், பேச்சு போன்றவற்றின் காரணியாக புதன் கருதப்படுகிறார். தைரியம், பதவி- கௌரவம் மற்றும் ஆட்சி-நிர்வாகம் போன்றவற்றின் காரணியாக சூரியன் கருதப்படுகிறார். சூரியனும், புதனும் ஒன்றாக ஒரு ராசியில் இருந்தால், அப்போது மங்களகரமான புதாதித்ய யோகம் உருவாகும்.

மேஷத்தில் புதாதித்ய யோகம்
2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 7 ஆம் தேதி செவ்வாய் கும்ப ராசிக்கு சென்றார். மறுநாள் ஏப்ரல் 8 ஆம் தேதி புதன் மேஷ ராசிக்கு சென்றார். இந்த மேஷ ராசியில் புதன் ஏப்ரல் 25 ஆம் தேதி வரை இருந்து, பின் ரிஷப ராசிக்கு செல்லவிருக்கிறார். அதே போல் மார்ச் 15 ஆம் தேதி முதல் மீன ராசியில் பயணித்த சூரியன், ஏப்ரல் 14 ஆம் தேதி மேஷ ராசிக்கு சென்றார். ஏப்ரல் 15 முதல் புதனும் சூரியனும் மேஷ ராசியில் பயணிப்பதால், புதாதித்ய யோகம் உருவாகிறது. மேஷ ராசியில் உருவாகும் புதாதித்ய யோகத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு நற்பலன்கள் கிடைக்கப் போகிறது என்பதை இப்போது காண்போம்.

மேஷம்
புதனும், சூரியனும் மேஷ ராசியின் முதல் வீட்டில் இணைவதால், இக்காலத்தில் இந்த ராசிக்காரர்களின் தைரியம், நம்பிக்கை மற்றும் புத்திசாலித்தனம் போன்றவை அதிகரிக்கும். இக்கால கட்டத்தில் முதலீடு செய்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வருமான ஆதாரங்கள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கும்.

ரிஷபம்
ரிஷப ராசியின் 12 ஆவது வீட்டில் புதாதித்ய யோகம் உருவாவதால், இக்காலத்தில் உங்களின் கௌரவம் உயரும். வெளிநாடு தொடர்பான வியாபாரத்தால் நன்மை கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் வெற்றி பெறுவார்கள். மொத்தத்தில், இக்காலத்தில் நல்ல பலன்கள் கிடைக்கும்.

மிதுனம்
மிதுன ராசியின் 11 ஆவது வீட்டில் புதனும், சூரியனும் இணைகிறார்கள். சொந்த ராசியில் புதன் சூரியனுடன் இணைவதால், இக்காலம் இந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ரியல் எஸ்டேட் தொடர்பான விஷயங்கள் தீரும். முக்கியமாக இக்காலத்தில் பண வரவு சிறப்பாக இருக்கும்.

சிம்மம்
புதன் மற்றும் சூரியன் சிம்ம ராசியின் 9 ஆவது வீட்டில் இணைகிறார்கள். இதனால் இக்கால கட்டத்தில் அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். பொருளாதார பக்கம் வலுவாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சந்தித்த தடைகள் இக்காலத்தில் நீங்கும். மேலும் இந்த ராசிக்காரர்களின் கௌரவம் உயரும்.



Click it and Unblock the Notifications