Just In
- 11 min ago இந்த 4 ராசிக்காரர்களில் ஒருவர் உங்க நண்பராக இருந்தா நீங்க வாழக்கையில் எதுக்குமே கவலைப்பட வேணாமாம்...!
- 1 hr ago தக்காளி சட்னி செய்யும் போது இந்த ஒரு பொருளை மட்டும் அதிகமா சேர்த்துக்கோங்க.. டேஸ்ட் சூப்பரா இருக்கும்..
- 5 hrs ago Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- 10 hrs ago 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
Don't Miss
- News செட்டில்மென்ட் பத்திரம்.. நீங்க சொத்து வாங்கறீங்களா? தான பத்திரத்தில் இது ரொம்ப மேஜர்.. அடேங்கப்பா
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த விக்கெட் கீப்பரும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை செய்த தோனி
- Movies ஓவர்சீஸில் என்ன அலப்பறை பண்றாங்க பாருங்க.. கில்லி ரீ ரிலீஸ்.. சும்மா வசூல் அள்ளப்போகுது!
- Finance வித்தியாசமா இருக்கே.. மாசம் ரூ.9 லட்சம் சம்பாதிக்கும் AI பெண் மாடல்..!
- Technology ஆர்டர் பிச்சிக்கும் பாருங்க.. ரூ.10,000 போதும்.. 108MP கேமரா.. 256GB மெமரி.. வருகிறது itel போன்.. எந்த மாடல்?
- Automobiles பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
ஒத்தைக்கு ஒத்தை பார்த்துக்கலாம் என்ற கெத்தான 6 ராசிக்காரர்கள் யார்? நீங்களும் இந்த ராசியா?
தான் உண்டு தன் வேலை உண்டு என்பதோடு எல்லா விஷயத்திலும் ஜெயித்து காட்டும் துணிவு கொண்ட 6 ராசிக்காரர்க்ள பற்றி தான் இந்த கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளது. அது பற்றிய முழுமையான தொகுப்பு தான் இது.
உதவி என்பது ரொம்பவும் முக்கியமான விஷயம். உதவி கேட்பதும் சரி, உதவி செய்வதும் சரி இரண்டு பேருக்கு இடையே ஒரு நல்ல உறவை ஏற்படுத்தும். ஆனால் சில பேர்கள் எந்த காரியமாக இருந்தாலும் தாங்கள் ஒத்தையாக இருந்து சமாளிப்பார்கள். இவர்களுக்கு உதவி கேட்பதே பிடிக்காது.
வெற்றிக் கனியை தாங்கள் மட்டுமே ருசிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள். இது அவர்களுடைய தன்னிறைவை குறிக்கிறது. அப்படி ஒத்தையாக மல்லுக்கட்டும் ராசிக்காரர்கள் பற்றி தான் இக்கட்டுரையில் நாம் காண போகிறோம்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு குரூப் ஆக இருந்து செயல்படவும் பிடிக்கும் அதே நேரத்தில் தன்னந்தனியாக இருந்து செயல்படவும் பிடிக்கும். ஆனால் பெரும்பாலும் இவர்கள் தன்னந்தனியாக நின்று செயல்படவே விரும்புவார்கள். இவர்களுக்கு உதவி கேட்பதும் நன்றி சொல்வதும் அந்த அளவுக்கு பிடிக்காது. இவர்கள் தங்கள் சுய மதிப்பீட்டை எப்பொழுதும் உயர்வாகவே வைத்து இருப்பார்கள். எனவே ஒண்டிக் கட்டையாக இருந்தே வெற்றி பெற துடிப்பவர்கள் இந்த ராசிக்காரர்கள்.
MOST
READ:
தன்
ஐந்து
வயது
மகனுக்கு
பாலியல்
தொல்லை
கொடுத்து
60
முறை
கத்தியால்
குத்தி
கொன்ற
தந்தை
மேஷம்
இவர்கள் எந்த ஒரு காரியத்தையும் தங்களால் மட்டுமே சிறப்பாக செய்ய முடியும் என்று நினைப்பவர்கள். அதனாலேயே தங்களால் முடிந்த வேலைகளை மட்டுமே இவர்கள் தேர்ந்தெடுப்பார்கள். அப்படியே உதவி தேவைப்பட்டாலும் கடைசில தான் மற்றவர்களின் உதவியை நாடுவார்கள். அதிலும் அவசர அவசரமாக வேலையை செய்வதால் மற்றவர் உதவியை நாடினால் நேரம் வேஸ்ட் ஆகும் என்று நினைத்து கேட்க மாட்டார்கள்.
கன்னி
வெற்றி ஒன்றே போதும் இவர்களை வழிநடத்த. இவர்களும் ஒத்த ஆளாக நின்று எதையும் முடிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள். தங்கள் கைகளில் நிறைய வேலைகளை வைத்துக் கொண்டு செயல்படக் கூடியவர்கள். சுய ஈடுபாடு கொண்டவராக இருப்பார்கள். இதனால் மற்றவர்களிடம் அதிக நேரம் செலவழிக்க விரும்பமாட்டார்கள்.
MOST READ: இந்த ரேகைதான் துரதிஷ்ட ரேகை... இது உங்க கையில எப்படி இருக்குனு கொஞ்சம் பாருங்க...
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு மற்றவர்களிடம் உதவி கேட்க பிடிக்கும். ஆனால் அதைவிட தன் கை உதவியையே விரும்புபவர்கள். எனவே தங்கள் தேவைகளுக்கு மற்றவர்களிடம் சென்று கெஞ்சிக் கொண்டு இருக்கமாட்டார்கள். சுய தொழில் சுய ஆதிக்கம் என்று செயல்படுபவர்கள். எனவே தங்கள் வழியில் குறுக்கே வரும் மற்றவர்களின் எண்ணங்கள் ஏன் அவர்களையே காலி செய்து விடுவார்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் மற்றவர்களின் மேல் எப்பொழுதும் நம்பிக்கை இல்லாமல் இருப்பார்களாம். இவர்களுக்கு மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று கவலைப்பட மாட்டார்களாம். தான் உண்டு தன் வேலை உண்டு என்று போய்க்கிட்டே இருப்பார்களாம். எனவே இந்த தலைப்பு இவர்களுக்கு நல்லாவே பொருந்தும். வேலை மட்டும் இல்லைங்கோ சாப்பிடுவது, டீவி பார்ப்பதில் கூட தனிமையை நாடுவார்களாம்.
MOST
READ:
இதுல
நீங்க
எப்படி
உட்காருவீங்கனு
சொல்லுங்க...
நீங்க
எப்படிப்பட்ட
ஆள்னு
நாங்க
சொல்றோம்
மிதுனம்
இவர்களுக்கு மற்றவர்கள் செய்யும் வேலையை பாராட்டும் மனப்போக்கு இவர்களுக்கு கிடையாது. எனவே மற்றவர்களின் ஒத்துழைப்பு இல்லாத வேலையை செய்யவே இவர்கள் விரும்புவார்கள். நிறைய நம்பிக்கையுடன் ஒரே வழியை தேர்ந்தெடுத்து தனியாக காரியத்தை முடிக்கும் வல்லமை படைத்தவர்கள். எனவே இவர்களுக்கு எல்லாருடன் சேர்ந்து புதுப்புது வழிகளில் வேலை செய்வது பிடிக்காது.