Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..!
இந்த பொருட்களை தானமாக கொடுப்பது உங்கள் வாழ்வில் பெருந்துயரத்தை ஏற்படுத்துமாம் தெரியுமா?
தானம் கொடுப்பது எவ்வளவு நன்மையை வழங்குகிறதோ அதே அளவிற்கு தவறான பொருட்களை தானம் கொடுப்பது உங்கள் வாழ்க்கையில் துன்பத்தையும் ஏற்படுத்தும் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது.
இந்த உலகத்தில் மிகவும் புனிதமான ஒரு காரியம் என்றால் அது தானம் செய்வதுதான். தன்னிடம் இருக்கும் ஒரு பொருளை தேவைப்படுபவர்களுக்கு தானமாக கொடுக்கும்போது அது அவர்களுக்கு புண்ணியத்தையும், வாழக்கையில் மகிழ்ச்சியையும், மகத்துவத்தையும் வழங்கும்.

தானம் கொடுப்பது எவ்வளவு நன்மையை வழங்குகிறதோ அதே அளவிற்கு தவறான பொருட்களை தானம் கொடுப்பது உங்கள் வாழ்க்கையில் துன்பத்தையும் ஏற்படுத்தும் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது. சாஸ்திரங்களின் படி சில குறிப்பிட்ட பொருட்களை தானம் கொடுப்பது உங்கள் வாழ்வில் துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும் என்று இந்த பதவில் பார்க்கலாம்.

பிளாஸ்டிக்
நாம் அனைவருமே பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை வழக்கமாக கொண்டிருப்போம். சாப்பிட, பொருட்களை சேமிக்க என பலவற்றில் பிளாஸ்டிக்கை பயன்படுத்துகிறோம். எதுவாக இருப்பினும் பிளாஸ்டிக் பொருட்களை ஒருபோதும் தானம் செய்யக்கூடாது. இது உங்கள் வாழ்வில் வறுமையையும், துயரத்தையும் ஏற்படுத்தும்.

துடைப்பம்
துடைப்பத்தை மற்றவர்களுக்கு கொடுப்பது என்பது லக்ஷ்மி தேவியை உங்கள் வீட்டை விட்டு வெளியே அனுப்பும் செயலாகும். இதனை செய்தால் உங்கள் சேமிப்பு அனைத்தும் விரைவில் கரையும். உங்கள் வீட்டில் ஒருபோதும் பணம் தங்காது.

உபயோகித்த துணிகள்
ஏழைகளுக்கு உங்களின் உபயோகித்த துணிகளை தானம் கொடுப்பது என்பது நல்ல செயல்தான். ஆனால் ஒருவருக்கு தானம் என்ற பெயரில் உங்களின் துணிகளை கொடுப்பது என்பது தவறான செயலாகும். நீங்கள் செய்த நல்ல செயல்களால் கிடைக்கும் புண்ணியங்கள் கூட பழைய துணிகளை மற்றவர்களுக்கு கொடுப்பதன் மூலம் பாவங்களாக மாறக்கூடும்.

எண்ணெய்
எண்ணெயை தானமாக கொடுப்பது சனிபகவானை வழிபடஉதவும் ஒரு வழியாகும். ஆனால் பயன்படுத்தப்பட்ட, பழமையான எண்ணெயை தானமாக சனிபகவானின் சாபத்தை பெற்றுத்தரும்.

கெட்டுப்போன உணவு
உணவு முற்றிலும் கெட்டு போகாவிட்டாலும் பழைய உணவுகளை தானமாக கொடுப்பது உங்கள் வாழ்க்கையில் துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும். மேலும் இது குடும்பத்தினரிடையே பல சிக்கல்களை உண்டாக்கலாம்.

கூரான பொருட்கள்
கத்தரிக்கோல், கத்தி போன்ற கூரான பொருட்களை ஒருபோதும் தானமாக கொடுக்காதீர்கள். இவ்வாறு செய்வது உங்கள் வீட்டில் பல கஷ்டங்களை ஏற்படுத்தும், மேலும் உங்களுக்கு நெருக்கமானவர்கள் உங்களுக்கு துரோகம் செய்யும் வாய்ப்புகள் அதிகம்.

ஸ்டேஷனரி பொருட்கள்
நல்ல நிலையில் இருக்கும் புத்தகங்கள், பேனா போன்றவற்றை பிறருக்கு கொடுப்பது நல்லதுதான். மாறாக கிழிந்த புத்தகங்கள், உடைந்த பேனா போன்றவற்றை ஒருபோதும் தானமாக கொடுக்காதீர்கள். இது உங்கள் வாழ்வில் மனஅழுத்தத்தை ஏற்படுத்தும்.

தேவையற்ற பொருட்கள்
உங்களுக்கு தேவைப்படாத பொருட்கள் என்று நினைக்கும் எதையும் தானம் செய்யாதீர்கள். மற்றவர்களுக்கு தேவைப்படுவது எதுவோ அதனை தானம் செய்யுங்கள்.



Click it and Unblock the Notifications











