Latest Updates
-
சத்தான எள்ளுப்பொடி சாதம் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - உடம்பு இரும்பு மாதிரி மாறிடும் -
பரோட்டா கடை வெஜ் சால்னா ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு தெரிஞ்சு ட்ரை பண்ணுங்க.. -
திருமண சீசனில் தங்கம் விலை திடீர் உயர்வு: பட்ஜெட்டை சமாளிக்க முடியாமல் திணறும் குடும்பங்கள்! -
ஜூன் 15-ல் உருவாகும் அரிய புதாதித்ய ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
ஆண்களே! சரும நிறத்தை அதிகரிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
இந்தியாவின் டாப் 5 பணக்கார முதலமைச்சர்கள் இவங்கதான் - தமிழ்நாடு முதலமைச்சர் எத்தனாவது இடத்தில் உள்ள தெரியுமா? -
காலசர்ப்ப யோகத்தால் இன்று முதல் ஜூன் 23 வரை இந்த 3 ராசிக்கு கஷ்ட காலமா இருக்கும்.. உஷார்.. -
வெயில் மற்றும் மழையால் வீட்டில் புழுக்கமா? இந்த 4 வாஸ்து செடிகள் இருந்தால் குளிர்ச்சியும் பணவரவும் நிச்சயம்! -
கீரை வாங்குனா இந்த மாதிரி வித்தியாசமா மிளகூட்டல் செஞ்சு பாருங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும் -
1/2 கிலோ மட்டன் வாங்குனா.. இப்படி ஒருடைம் செய்யுங்க.. ருசி அல்டிமேட்டா இருக்கும்..
இந்த பொருட்களை தானமாக கொடுப்பது உங்கள் வாழ்வில் பெருந்துயரத்தை ஏற்படுத்துமாம் தெரியுமா?
தானம் கொடுப்பது எவ்வளவு நன்மையை வழங்குகிறதோ அதே அளவிற்கு தவறான பொருட்களை தானம் கொடுப்பது உங்கள் வாழ்க்கையில் துன்பத்தையும் ஏற்படுத்தும் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது.
இந்த உலகத்தில் மிகவும் புனிதமான ஒரு காரியம் என்றால் அது தானம் செய்வதுதான். தன்னிடம் இருக்கும் ஒரு பொருளை தேவைப்படுபவர்களுக்கு தானமாக கொடுக்கும்போது அது அவர்களுக்கு புண்ணியத்தையும், வாழக்கையில் மகிழ்ச்சியையும், மகத்துவத்தையும் வழங்கும்.

தானம் கொடுப்பது எவ்வளவு நன்மையை வழங்குகிறதோ அதே அளவிற்கு தவறான பொருட்களை தானம் கொடுப்பது உங்கள் வாழ்க்கையில் துன்பத்தையும் ஏற்படுத்தும் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது. சாஸ்திரங்களின் படி சில குறிப்பிட்ட பொருட்களை தானம் கொடுப்பது உங்கள் வாழ்வில் துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும் என்று இந்த பதவில் பார்க்கலாம்.

பிளாஸ்டிக்
நாம் அனைவருமே பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை வழக்கமாக கொண்டிருப்போம். சாப்பிட, பொருட்களை சேமிக்க என பலவற்றில் பிளாஸ்டிக்கை பயன்படுத்துகிறோம். எதுவாக இருப்பினும் பிளாஸ்டிக் பொருட்களை ஒருபோதும் தானம் செய்யக்கூடாது. இது உங்கள் வாழ்வில் வறுமையையும், துயரத்தையும் ஏற்படுத்தும்.

துடைப்பம்
துடைப்பத்தை மற்றவர்களுக்கு கொடுப்பது என்பது லக்ஷ்மி தேவியை உங்கள் வீட்டை விட்டு வெளியே அனுப்பும் செயலாகும். இதனை செய்தால் உங்கள் சேமிப்பு அனைத்தும் விரைவில் கரையும். உங்கள் வீட்டில் ஒருபோதும் பணம் தங்காது.

உபயோகித்த துணிகள்
ஏழைகளுக்கு உங்களின் உபயோகித்த துணிகளை தானம் கொடுப்பது என்பது நல்ல செயல்தான். ஆனால் ஒருவருக்கு தானம் என்ற பெயரில் உங்களின் துணிகளை கொடுப்பது என்பது தவறான செயலாகும். நீங்கள் செய்த நல்ல செயல்களால் கிடைக்கும் புண்ணியங்கள் கூட பழைய துணிகளை மற்றவர்களுக்கு கொடுப்பதன் மூலம் பாவங்களாக மாறக்கூடும்.

எண்ணெய்
எண்ணெயை தானமாக கொடுப்பது சனிபகவானை வழிபடஉதவும் ஒரு வழியாகும். ஆனால் பயன்படுத்தப்பட்ட, பழமையான எண்ணெயை தானமாக சனிபகவானின் சாபத்தை பெற்றுத்தரும்.

கெட்டுப்போன உணவு
உணவு முற்றிலும் கெட்டு போகாவிட்டாலும் பழைய உணவுகளை தானமாக கொடுப்பது உங்கள் வாழ்க்கையில் துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும். மேலும் இது குடும்பத்தினரிடையே பல சிக்கல்களை உண்டாக்கலாம்.

கூரான பொருட்கள்
கத்தரிக்கோல், கத்தி போன்ற கூரான பொருட்களை ஒருபோதும் தானமாக கொடுக்காதீர்கள். இவ்வாறு செய்வது உங்கள் வீட்டில் பல கஷ்டங்களை ஏற்படுத்தும், மேலும் உங்களுக்கு நெருக்கமானவர்கள் உங்களுக்கு துரோகம் செய்யும் வாய்ப்புகள் அதிகம்.

ஸ்டேஷனரி பொருட்கள்
நல்ல நிலையில் இருக்கும் புத்தகங்கள், பேனா போன்றவற்றை பிறருக்கு கொடுப்பது நல்லதுதான். மாறாக கிழிந்த புத்தகங்கள், உடைந்த பேனா போன்றவற்றை ஒருபோதும் தானமாக கொடுக்காதீர்கள். இது உங்கள் வாழ்வில் மனஅழுத்தத்தை ஏற்படுத்தும்.

தேவையற்ற பொருட்கள்
உங்களுக்கு தேவைப்படாத பொருட்கள் என்று நினைக்கும் எதையும் தானம் செய்யாதீர்கள். மற்றவர்களுக்கு தேவைப்படுவது எதுவோ அதனை தானம் செய்யுங்கள்.



Click it and Unblock the Notifications