Latest Updates
-
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது
இந்த பொருட்களை தானமாக கொடுப்பது உங்கள் வாழ்வில் பெருந்துயரத்தை ஏற்படுத்துமாம் தெரியுமா?
தானம் கொடுப்பது எவ்வளவு நன்மையை வழங்குகிறதோ அதே அளவிற்கு தவறான பொருட்களை தானம் கொடுப்பது உங்கள் வாழ்க்கையில் துன்பத்தையும் ஏற்படுத்தும் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது.
இந்த உலகத்தில் மிகவும் புனிதமான ஒரு காரியம் என்றால் அது தானம் செய்வதுதான். தன்னிடம் இருக்கும் ஒரு பொருளை தேவைப்படுபவர்களுக்கு தானமாக கொடுக்கும்போது அது அவர்களுக்கு புண்ணியத்தையும், வாழக்கையில் மகிழ்ச்சியையும், மகத்துவத்தையும் வழங்கும்.

தானம் கொடுப்பது எவ்வளவு நன்மையை வழங்குகிறதோ அதே அளவிற்கு தவறான பொருட்களை தானம் கொடுப்பது உங்கள் வாழ்க்கையில் துன்பத்தையும் ஏற்படுத்தும் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது. சாஸ்திரங்களின் படி சில குறிப்பிட்ட பொருட்களை தானம் கொடுப்பது உங்கள் வாழ்வில் துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும் என்று இந்த பதவில் பார்க்கலாம்.

பிளாஸ்டிக்
நாம் அனைவருமே பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை வழக்கமாக கொண்டிருப்போம். சாப்பிட, பொருட்களை சேமிக்க என பலவற்றில் பிளாஸ்டிக்கை பயன்படுத்துகிறோம். எதுவாக இருப்பினும் பிளாஸ்டிக் பொருட்களை ஒருபோதும் தானம் செய்யக்கூடாது. இது உங்கள் வாழ்வில் வறுமையையும், துயரத்தையும் ஏற்படுத்தும்.

துடைப்பம்
துடைப்பத்தை மற்றவர்களுக்கு கொடுப்பது என்பது லக்ஷ்மி தேவியை உங்கள் வீட்டை விட்டு வெளியே அனுப்பும் செயலாகும். இதனை செய்தால் உங்கள் சேமிப்பு அனைத்தும் விரைவில் கரையும். உங்கள் வீட்டில் ஒருபோதும் பணம் தங்காது.

உபயோகித்த துணிகள்
ஏழைகளுக்கு உங்களின் உபயோகித்த துணிகளை தானம் கொடுப்பது என்பது நல்ல செயல்தான். ஆனால் ஒருவருக்கு தானம் என்ற பெயரில் உங்களின் துணிகளை கொடுப்பது என்பது தவறான செயலாகும். நீங்கள் செய்த நல்ல செயல்களால் கிடைக்கும் புண்ணியங்கள் கூட பழைய துணிகளை மற்றவர்களுக்கு கொடுப்பதன் மூலம் பாவங்களாக மாறக்கூடும்.

எண்ணெய்
எண்ணெயை தானமாக கொடுப்பது சனிபகவானை வழிபடஉதவும் ஒரு வழியாகும். ஆனால் பயன்படுத்தப்பட்ட, பழமையான எண்ணெயை தானமாக சனிபகவானின் சாபத்தை பெற்றுத்தரும்.

கெட்டுப்போன உணவு
உணவு முற்றிலும் கெட்டு போகாவிட்டாலும் பழைய உணவுகளை தானமாக கொடுப்பது உங்கள் வாழ்க்கையில் துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும். மேலும் இது குடும்பத்தினரிடையே பல சிக்கல்களை உண்டாக்கலாம்.

கூரான பொருட்கள்
கத்தரிக்கோல், கத்தி போன்ற கூரான பொருட்களை ஒருபோதும் தானமாக கொடுக்காதீர்கள். இவ்வாறு செய்வது உங்கள் வீட்டில் பல கஷ்டங்களை ஏற்படுத்தும், மேலும் உங்களுக்கு நெருக்கமானவர்கள் உங்களுக்கு துரோகம் செய்யும் வாய்ப்புகள் அதிகம்.

ஸ்டேஷனரி பொருட்கள்
நல்ல நிலையில் இருக்கும் புத்தகங்கள், பேனா போன்றவற்றை பிறருக்கு கொடுப்பது நல்லதுதான். மாறாக கிழிந்த புத்தகங்கள், உடைந்த பேனா போன்றவற்றை ஒருபோதும் தானமாக கொடுக்காதீர்கள். இது உங்கள் வாழ்வில் மனஅழுத்தத்தை ஏற்படுத்தும்.

தேவையற்ற பொருட்கள்
உங்களுக்கு தேவைப்படாத பொருட்கள் என்று நினைக்கும் எதையும் தானம் செய்யாதீர்கள். மற்றவர்களுக்கு தேவைப்படுவது எதுவோ அதனை தானம் செய்யுங்கள்.



Click it and Unblock the Notifications