ஆடை அணியாமல்தான் விமானத்தில் பயணம் செய்வேனென்று ஏர்போர்ட்டில் அடம்பிடித்த நபர்...

விமானத்தில் நிர்வாணமாகப் பயணம் செய்ய அடம் பிடித்த ஆணைப் பற்றி இந்த பகுதியில் விளக்கமாகப் பார்க்கலாம். அதுபற்றிய தொகுப்பு தான் இது.

இப்போதெல்லாம் பிரபலமாக எந்த காரியத்த செய்யனும்ன்ங்ற விவஸ்தையே இல்லாமல் போச்சு. சும்மா சும்மா இன்ஸ்ட்டாகிராமில் சேலஞ்ச் பண்றது, வித்தியாசமா போட்டோ எடுத்து பேஸ்புக்கில் போடுவது, ஏடா கூடாம எதையாவது செய்வது இதையே வேலையா போச்சு இந்த மக்களுக்கு.

Man Wanted To Fly To Feel More Aerodynamic

அப்படி ஒருத்தர் செய்ஞ்ச காரியத்த பாருங்க. கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் ஏர்போர்ட்ல இப்படியுமா கிடப்பாரு. அய்யோ பார்க்கவே.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஏர்போர்ட் செக் அப்

ஏர்போர்ட் செக் அப்

38 வயதான இந்த ஆண் மாஸ்கோவில் உள்ள டோமோதெடோவோ விமான நிலையத்தில் விமான பயணம் மேற்கொள்ள சென்றார். முதலில் செக் அப் செய்ய போகும் போதெல்லாம் நம்ம ஆளு ஆடையுடன் தான் சென்றுள்ளார். உள்ளே சென்றதும் நம்ம ஆளு அவர் வேலையை காட்ட தொடங்கி விட்டார். உடம்பில இருக்கிற ஆடைகளை ஒவ்வொன்றாக கழட்டி கொண்டே விமானத்தை நோக்கி ஓட ஆரம்பித்து உள்ளார்.

குடிபோதையும் இல்லை

குடிபோதையும் இல்லை

இந்த மாதிரி கிறுக்குத்தனமாக பண்ண அவரை பிடித்து விமான நிலைய போலிஸாரும் விசாரித்து உள்ளனர். இத்தனைக்கும் அப்போது அவர் குடிபோதையிலும் இல்லை என்பது தெரிய வந்துள்ளது. அன்று முழுவதும் இது தான் பரபரப்பு செய்தியாக ஒளிபரப்பப்பட்டு உள்ளது.

ஏன் பிறந்த மேனியானார்

ஏன் பிறந்த மேனியானார்

பிறந்த மேனியில் இருந்த அவரை உடனே போலிஸார் சுற்றி வளைத்து விட்டனர். ஏன் இப்படி செய்தீர்கள் என்று கேட்டதற்கு பிறந்த மேனியாக விமானத்தில் பயணம் செய்ய வேண்டும் என்பது எனது ஆசை என்று வேடிக்கையான பதிலை கூறியுள்ளார்.

ஏரோடைனமிக் அனுபவம்

ஏரோடைனமிக் அனுபவம்

எல்லோர் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்றும் எல்லாரும் தன்னைப்பற்றி பேச வேண்டும் என்றும் நான் இந்த முடிவை எடுத்தேன் அவர் கூறியுள்ளார். பிறந்த மேனியில் ஏரோடைனமிக் அனுபவம் எப்படி இருக்கும் என்று பார்க்க தோன்றி யது என்றும் ஒரு வித்தியாசமான பதிலை அவர் கூறியுள்ளார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Wednesday, March 27, 2019, 15:30 [IST]
Desktop Bottom Promotion