தன் ஐந்து வயது மகனுக்கு பாலியல் தொல்லை கொடுத்து 60 முறை கத்தியால் குத்தி கொன்ற தந்தை

தன்னுடைய சொந்த மகனையே பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த தந்தையைப் பற்றித் தான் இங்கு பார்க்கப் போகிறோம். அதுபற்றிய முழுமையான விரிவான தொகுப்பு தான் இது.

By Mahibala

பெற்ற தாயின் கண்முன்னே தான் பெற்றெடுத்த மகனான சிறுவனை ஒரு தந்தையே கத்தியால் 62 முறை கத்தியால் கொடூரமான முறையில் கொலை செய்திருக்கிறார். அந்த குழந்தைக்கு வயதோ வெறும் ஐந்து வயது தான்.

எப்படி இந்த ஆளுக்கு இப்படியொரு அழகான பிஞ்சுக் குழந்தையைக் கொலை செய்ய மனசு வந்தது. அதுவும் என்ன காரணத்துக்காக கொலை செய்தார் என்று தெரிந்தால் இன்னும் கோபமும் அதிர்ச்சியும் உங்களுக்கு ஏற்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஓரினச் சேர்க்கை

ஓரினச் சேர்க்கை

Image Courtesy

அந்த ஆளுக்கு ஓரினச் சேர்க்கை பழக்கம் இருந்து வந்திருக்கிறது. அது அவருடைய மனைவிக்கும் தெரிந்து தான் இருந்திருக்கிறது. ஓரினச் சேர்க்கை பழக்கம் கொண்ட அவர் தன்னுடைய மகனுக்கு தந்தையே ஓரினச் சேர்க்கையின் மூலம் பாலியல் தொல்லை கொடுத்து வந்திருக்கிறார். இவர் தான் பெற்ற சொந்த மகனையே பலமுறை பாலியல் வன்கொடுமைகளுக்கு உட்படுத்தியிருக்கிறார்.

மனைவி கண்டுபிடிப்பு

மனைவி கண்டுபிடிப்பு

அந்த கொடூரனுக்கு இருந்து வந்த ஓரினச் சேர்க்கை பழக்கம் பற்றியும் அதற்கு தன்னுடைய சொந்த மகனே அதிலும் ஐந்து வயதே நிரம்பிய மகன் பலியாகிக் கொண்டிருப்பதும் அவனுடைய மனைவிக்குத் தெரிய வந்தது. இதனால் அவருக்குத் தாங்கிக் கொள்ள முடியாத அளவுக்கு வேதனையாகி விட்டது.

தகராறு

தகராறு

காதல் கணவரின் கொடூர முகம் தெரிய வந்ததும் எப்போதெல்லாம் அவர் தன் குழந்தையை அருகில் கூப்பிட்டாலும் பயந்தாள். அனுப்ப மறுத்தாள். ஒருகட்டத்தில் இதனால் குடும்பத்தில் தகராறு ஏற்படத் தொடங்கியது. பல சமயங்களில் அது அடிதடியில் கூட சென்று முடிந்திருக்கிறது.

பாலியல் வன்முறை

பாலியல் வன்முறை

தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்களும் குழந்தைக்கு பாலியல் தொந்தரவுகளும் அதிகமாகிக் கொண்டு போக, தன்னுடைய குழந்தை தான் பலாத்காரம் செய்ததை தாயிடம் கூறியதால் தான் பிரச்சினைகள் அதிகமாகிவிட்டது என்று கோபப்ட்ட அந்த காமப்பிசாசு கத்தியால் அந்த பிஞ்சுக் குழந்தையை 62 முறை கத்தியால் கொடூரமாகக் குத்தியே கொன்றிருக்கிறான்.

மனைவியும் கொலை

மனைவியும் கொலை

தன் குழந்தையைக் குத்திக் கொண்டிருப்பதை அழுகை குரல் கேட்டு என்னவென்று பார்க்க வந்த மனைவியையும் தடுக்க வந்த போது குத்தி கொலை செய்துவிட்டான்.

ரத்தத்தால் கடிதம்

ரத்தத்தால் கடிதம்

குழந்தையையும் மனைவியையும் குத்திக் கொன்றுவிட்டு, ரத்த வெள்ளத்தில் நின்றதோடு மட்டுமல்லாமல் நான் கொடுத்த வாழ்க்கையை உங்களிடம் இருந்து நானே எடுத்துக் கொள்கிறேன் என்று கூறியிருக்கிறான். அதுமட்டும் அல்லாமல், ரத்தத்தினால் நான் கொடுத்த வாழ்க்கையை நானே எடுத்துக் கொண்டேன் என்று கடிதம் எழுதியும் வைத்திருக்கிறான்.

காவல்துறை கைது

காவல்துறை கைது

இந்த சம்பவத்தை சத்தம் கேட்டு அறிந்து கொண்ட அக்கம் பக்கத்தார் காவல் நிலையத்துக்கு புகார் கொடுத்தார்கள். தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து குழந்தை மற்றும் மனைவியின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, அந்த நபரையும் கைது செய்து மேற்கண்ட அனைத்து விஷயங்களையும் வாக்குமூலமாக வாங்கிக் கொண்டார்.

எங்கே நடந்தது?

எங்கே நடந்தது?

இந்த கொடூரமான சம்பவம் நல்ல வேளை நம்ம நாட்டுல நடக்கல. இது ரஷ்ய நாட்டில் சமீபத்தில் நடந்த சம்பவம். அப்படியெல்லாம் கூடவா ஆண்கள் இருக்கிறார்கள். சொந்த வீட்டிலேயே தான் பெற்ற பிள்ளையையே இப்படி காமப்பொருளுாக்கினால் குழந்தைகள் என்ன செய்யும் பாவம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Thursday, March 7, 2019, 13:14 [IST]
Desktop Bottom Promotion