Just In
- 3 hrs ago 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- 3 hrs ago 40 வருடங்கள் கழித்து கருவுற்றால் இந்த விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்!
- 4 hrs ago தழும்புகள் உங்க சருமத்தை அசிங்கமா காட்டுகிறதா? இந்த எளிய வீட்டு வைத்தியங்களை யூஸ் பண்ணுங்க..சீக்கிரம் மறையும்!
- 4 hrs ago வெயில் காலத்தில் உங்க இதயம் பாதுகாப்பாக இருக்கணுமா? அப்ப இந்த 5 விஷயங்களை ஒழுங்கா பண்ணுங்க...!
Don't Miss
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு சாதகம்
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Automobiles சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Movies Actress Sujitha: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகி.. சூப்பர்ல!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
இந்த நட்சத்திரத்துல பிறந்தவங்களுக்குத்தான் சொந்த தொழில் செட் ஆகுமாம்..மத்தவங்க ரிஸ்க் எடுக்காதீங்க..
ஜோதிட சாஸ்திரத்தில் உங்களை பற்றி துல்லியமாக கணக்கிட உங்களுடைய நட்சத்திரம் பயன்படுத்தப்படுகிறது.
நமது எதிர்காலத்தை தீர்மானிப்பதில் நம்முடைய பிறந்த ராசிக்கு அடுத்து முக்கிய இடம் வகிப்பது நமது நட்சத்திரம்தான். நட்சத்திரங்கள் நமது வாழ்க்கையின் மீதும் எதிர்காலத்தின் மீதும் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது. ஜோதிட சாஸ்திரத்தில் உங்களை பற்றி துல்லியமாக கணக்கிட உங்களுடைய நட்சத்திரம் பயன்படுத்தப்படுகிறது.
மற்ற கணிப்புகளைத்தாண்டி நட்சத்திரங்கள் உங்களின் எதிர்காலம் எந்த துறையில் சிறப்பாக இருக்கும் என்பதை கணக்கிடக்கூடியவை. அதன்படி எந்த துறையில் வேலை அல்லது தொழில் செய்வது உங்கள் வாழ்க்கையை வளமாக்கும் என்று நட்சத்திரங்களின் உதவியுடன் கண்டறிந்து விடலாம். உங்கள் நட்சத்திரத்திற்கான சிறந்த துறை எதுவென்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
பரணி
" பரணியில் பிறந்தால் தரணி ஆளலாம் " என்று கூறுவார்கள். அது உண்மைதான், இவர்களுக்கு தொழில்நுட்ப வேலைகள், காவல்துறை, வியாபாரம் என இவர்கள் கைவைக்கும் அனைத்திலும் வெற்றிபெறுவார்கள். தீர யோசித்து அதற்கு பின் செயலில் இறங்குவது நல்லது.
கிருத்திகை
கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உணவகம், நகைத்தொழில், ஆன்மீகம் தொடர்பான பணிகள் மற்றும் ஜோதிடம் போன்ற துறைகளில் பணியாற்றினால் அவர்களின் வளர்ச்சி சிறப்பானதாக இருக்கும்.
ரோகிணி
ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு போக்குவரத்து துறையில் நல்ல எதிர்காலம் இருக்கும். மேலும் மிருகங்கள் தொடர்பான வேலைகள், கண்ணாடி தொடர்பான வேலைகள் போன்றவற்றில் நல்ல வளர்ச்சி இருக்கும்.
மிருகசீரிஷம்
மிருகசீரிஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பல தொழில்களில் சிறந்து விளங்குவார்கள். வாசனை தொழில், விவசாயம், இசைத்துறை, ஆசிரியர் மற்றும் கட்டட அமைப்பாளர் போன்ற துறைகளில் பணியாற்றுவது இவர்க்ளுக்கு நல்லது.
திருவாதிரை
இவர்கள் ஜோதிடம் மற்றும் கிரகை போன்றவற்றில் சிறந்து விளங்க வாய்ப்புள்ளது. இவர்கள் மற்றவர்களின் மனதை படித்து அவர்களுக்கு உதவுவதில் சிறந்து விளங்குவார்கள்.
புனர்பூசம்
புனர்பூச நட்சித்திரத்தில் பிறந்தவர்களுக்கு சிலைகள் செய்வது, எந்திரவியல், உணவு தயாரிப்பு மற்றும் உணவக உரிமையாளர் போன்ற பணிகள் பொருத்தமானதாக இருக்கும். இவர்கள் பிறக்கும் போதே நிர்வாகத்திறனுடன் பிறந்தவர்கள் ஆவர்.
பூசம்
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசியல்தான் சிறந்த துறை. தலைவராகும் தகுதி இவர்களுக்கு இயற்கையாகவே இருக்கும். மற்றவர்களுடன் எளிதில் தொடர்பு கொள்வதிலும், போட்டியிட்டு வெல்வதிலும் இவர்கள் வல்லவர்களாக இருப்பார்கள்.
ஆயில்யம்
ஆயில்ய நட்சத்திரத்திற்கு கீழ் பிறந்தவர்கள் நிதித்துறை, பங்குசந்தை, மருந்துகள் மற்றும் வழக்கறிஞர்கள் போன்ற துறையில் சிறந்து விளங்க வாய்ப்புள்ளது.
மகம்
மக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிறந்த மருத்துவராக வர வாய்ப்புள்ளது. குறிப்பாக தோல் மற்றும் குழந்தைநல மருத்துவராக இவர்களின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும். கற்பிக்கும் பணியும் இவர்களுக்கான நல்ல தேர்வுதான்.
பூரம்
பூர நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிறந்த இசைக்கலைஞராகவும், மற்ற கலைத்துறையிலும் சிறந்து விளங்குபவராக இருப்பார்கள். நடனக்கலை, சிற்பக்கலை போன்றவையும் வழக்கறிஞர், திருமண ஆலோசகர் போன்ற துறையும் இவர்களுக்கு நல்ல எதிர்காலத்தை அமைத்துத்தரும்.
உத்திரம்
இவர்களுக்கு கட்டிட அமைப்பும், தீயணைப்பு துறையும், விவசாயமும் சிறநத துறைகள். மேலும் ஓவியம் வரையும் திறமையும் இவர்களுக்கு இருக்க வாய்ப்புள்ளது.
அஸ்தம்
அஸ்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் துணி வியாபாரத்தில் இறங்கினால் கொடிகட்டி பறப்பார்கள், மேலும் நகை, ஹோட்டல் போன்றவையும் இவர்களின் சிறந்த எதிர்காலத்திற்கு உதவியாக இருக்கும். இவர்களுக்கு உருவாக்குவதிலும், வடிவமைப்பதில் அதிக ஆர்வம் இருக்கும்.
சித்திரை
சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வங்கிப்பணி, மின்சாரத்துறை, பத்திரிக்கை துறை போன்றவற்றில் சிறந்து விளங்குவார்கள். இவர்களின் எழுத்துக்கென்று தனிசக்தி இருக்கும்.
ஸ்வாதி
விளையாட்டுத்துறையில் தீவிரமாக இறங்கினால் இவர்கள் நிறைய சாதிப்பார்கள், குறிப்பாக மல்யுத்தம் இவர்களுக்கு சிறந்த தேர்வு. அரசாங்க பணிக்கு செல்ல இவர்களுக்கு அதிக வாய்ப்புள்ளது.
விசாகம்
பேசும் வேலை என்றால் மிகவும் பிடித்ததாக இருக்கும். எனவே இவர்கள் பேச்சாளராகவோ, தொலைக்காட்சி அல்லது வானொலியில் பெரிய இடத்திற்கு வர வாய்ப்புள்ளது. இராணுவம், விமர்சகர் போன்றவை இவர்களுக்கான வேறுசில தேர்வுகளாகும்.
MOST READ: பெண்களின் பாலியல் ஆசையை தூண்டும் பெண்கள் வயகரா பற்றிய அதிர்ச்சியளிக்கும் உண்மைகள்...!
அனுஷம்
உளவு பார்ப்பது, ஜோதிடம் பார்ப்பது போன்றவை இவர்களின் சிறந்த முன்னேற்றத்திற்கான துறையாகும். புகைப்படம் எடுப்பது, ஆராய்ச்சியில் ஈடுபடுவது, சொந்த தொழில் செய்வது போன்றவை இவர்களுக்கான வேறு வாய்ப்புகள்.
கேட்டை
நிர்வாக வேலைகள், அரசாங்க வேலைகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விளையாட்டு போன்றவற்றில் முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். தொலைத்தொடர்பு சம்பந்தப்பட்ட வேலைகளும் இவர்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும்.
மூலம்
காவல்துறை, அரசியல், உயிரியல் தொடர்பான வேலைகள் மற்றும் எந்திரங்கள் தொடர்பான வேலைகள் இவர்களுக்கான சிறந்த துறைகள். வேலைகளை நம்பாமல் சொந்த தொழிலில் ஈடுபடுவதும் இவர்களுக்கு நல்ல முன்னேற்றத்தை தரும்.
பூராடம்
கடல் தொடர்பான வேலைகள் மற்றும் கலை தொடர்பான வேலைகளில் இவர்கள் தாராளமாக இறங்கலாம். உடை வடிவமைப்பது, வீட்டை வடிவமைப்பது,அலங்காரம் தொடர்பான வேலைகளை இவர்கள் செய்யலாம்.
உத்திராடம்
சட்டத்துறை, ஜோதிடம், உளவியல் மற்றும் விமானம் போன்றவை இவர்களுக்கான முதன்மை தேர்வு. பாதுகாப்புத்துறை மற்றும் விளையாட்டில் அதிக கவனம் செலுத்தினால் இதிலும் அவர்கள் வெற்றிபெற வாய்ப்புள்ளது.
திருவோணம்
கற்பிக்கும் பணிதான் இவர்களுக்கான முதன்மையான துறையாகும். மொழிபெயர்ப்பு, நடிப்பு, மற்றும் கதை சொல்லுவது இவர்களுக்கு சிறப்பான எதிர்காலத்தை கொடுக்கும் துறைகள். விவசாயம் இவர்களின் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தை கொடுப்பதாக இருக்கும்.
அவிட்டம்
இசைத்துறையிலும், நிர்வாகத்துறையிலும் இவர்கள் பெரிய உயரங்களை தொடுவார்கள். தொழில்நுட்பத்துறை மற்றும் ஆராய்ச்சிகளில் இவர்களுக்கு நல்ல எதிர்காலம் உத்திரவாதமாக கிடைக்கும்.
சதயம்
இவர்களுக்கு மருந்துகள் தயாரிப்பு மற்றும் விற்பனை இரண்டுமே சிறப்பான தேர்வுகளாகும். மறுசுழற்சி செய்யும் வேலைகள், மெக்கானிக் வேலைகள் இவர்களுக்கு நல்ல எதிர்காலத்தை வழங்கும்.
பூரட்டாதி
இறப்பு தொடர்பான வேலைகள், மந்திர வித்தைகள், அமானுஷ்யம் தொடர்பான வேலைகள் இவர்களுக்கு சிறந்தவையாக இருக்கும். மற்றவர்களால் செய்ய முடியாத வேலைகளை செய்வதில் இவர்கள் வல்லவர்கள்.
உத்திரட்டாதி
இவர்கள் யோகா மற்றும் உடற்பயிற்சி கற்றுத்தருவது ஆன்மீகம் தொடர்பான வேலைகளில் ஈடுபடுவது போன்றவை நல்ல எதிர்காலத்தை உருவாக்கும். இவர்கள் மற்றவர்களுக்கு தானம் செய்வதில் சிறநதவராக இருப்பார்கள்.
ரேவதி
இவர்களுக்கு அபார கற்பனை ஆற்றல் இருக்கும். எனவே இவர்களுடைய கற்பனைத்திறனுக்கேற்ற பணியில் ஈடுபடுவது இவர்களுக்கான வளமான எதிர்காலத்தை உருவாக்கித்தரும். கட்டுமான தொழில் மற்றும் விவசாயம் அடுத்த நல்ல தேர்வுகளாக இருக்கும்.