Just In
- 23 min ago 12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு சுக்கிர சேர்க்கை: மே மாசம் இந்த 3 ராசிக்கு தொழில் பிரகாசிக்கப் போகுது..
- 1 hr ago இந்த ராசிக்காரர்கள் திருப்பதிக்கு அடிக்கடி போகக்கூடாது.. ஏன் தெரியுமா?
- 2 hrs ago தோசை மாவு இல்லையா? வேர்க்கடலையை வெச்சு இப்படி தோசை சுடுங்க.. வேற லெவல் டேஸ்ட்ல இருக்கும்..
- 5 hrs ago Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
Don't Miss
- News ரூ 4 கோடிக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை.. மே 2ல் காவல் துறையில் ஆஜராவேன்.. நயினார் நாகேந்திரன்
- Movies மொத்தத்துக்கும் வேட்டு வைத்த டாப் நடிகர்.. தலை காட்ட முடியாமல் தவிக்கும் டைரக்டர்.. ரொம்ப பாவம்!
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
இந்த தானியங்களை கொண்டு சிவனை வணங்கினால் உங்கள் பாவங்கள் மன்னிக்கப்படும்
சில பொருட்களை கொண்டு சிவபெருமானை வழிபடுவது சிவபெருமானின் கோபத்தை அதிகரிக்கும். அதேபோல சில பொருட்களை கொண்டு ஈசனை வழிபடுவது அவரின் பூரண அருளை உங்களுக்கு பெற்றுத்தரக்கூடும்.
இந்துக்கள் வழிபடும் மும்மூர்த்திகளுள் ஒருவர்தான் சிவபெருமான். அழிக்கும் கடவுளான சிவனை ருத்ரமூர்த்தியாகவே பெரும்பாலான மக்கள் அறிவார்கள். ஆனால் உண்மையில் சிவபெருமான் தன் பக்தர்களுக்கு சாந்த மூர்த்தியாக இருந்து அருளை வழங்குபவர். நல்லவர்களா, கெட்டவர்களோ தன்னை முழுமையாக சரண்டைந்தவர்களுக்கு அவர்கள் விரும்பும் வரத்தை வழங்குபவர். இதற்கு நம் இதிகாசங்களிலும், புராணங்களிலும் பல உதாரணங்கள் உள்ளது.
சிவபெருமானை வழிபடுவதற்கென சில வழிமுறைகள் உள்ளது. ஏனெனில் சில பொருட்களை கொண்டு சிவபெருமானை வழிபடுவது சிவபெருமானின் கோபத்தை அதிகரிக்கும். அதேபோல சில பொருட்களை கொண்டு ஈசனை வழிபடுவது அவரின் பூரண அருளை உங்களுக்கு பெற்றுத்தரக்கூடும். அந்த வகையில் சில தானியங்களை கொண்டு ஈசனை வழிபட்டால் அவருக்கு உங்களுக்கு பல்வேறு நன்மைகளை வழங்குவார். இந்த பதிவில் எந்தெந்த தானியங்களை கொண்டு சிவபெருமானை வழிபட வேண்டும் என்பதை பார்க்கலாம்.
திங்கள் வழிபாடு
திங்கள் கிழமை சிவபெருமானை வழிபடுவது மிகவும் விஷேசமானது. திங்கள் கிழமையன்று சிவலிங்கத்தை குளிர்ந்த பால், வில்வ இலைகள் மற்றும் பஞ்சாமிர்தம் கொண்டு வழிபடுவது சிவெபருமானை அதிகம் மகிழ்விக்க கூடியதாகும்.
வேதங்களின் படி தானியங்களின் முக்கியத்துவம்
இந்த தானியங்கள் ஒவ்வொன்றும் வேதங்களில் குறிப்பிடதக்க முக்கியத்துவத்தை கொண்டுள்ளது. புராண கால முனிவர்கள் பூமியில் உள்ள ஒவ்வொரு தானியமும் சிவபெருமானை எப்படி சரணாகதி அடைகிறது என்று கூறி இருக்கிறார்கள். எந்தெந்த தானியங்கள் புனிதமான முக்கியத்துவம் கொண்டது என்று மேற்கொண்டு பார்க்கலாம்.
பார்லி
நீங்கள் உங்கள் வாழ்க்கையில் அதிக பிரச்சினைகளையும், துயரங்களையும் எதிர்கொள்பவராய் இருந்தால் நீங்கள் சிவபெருமானை பார்லி தானியத்தை கொண்டு வழிபடவேண்டும். இது சிவபெருமானின் அருளை பெற்றுத்தருவதோடு மட்டுமின்றி இது உங்கள் வாழ்க்கையில் நேர்மறை சக்திகளை அதிகரித்து நீங்கள் இழந்த மகிழ்ச்சியை மீட்டுத்தரும். உங்கள் வாழ்க்கையில் உள்ள அனைத்து தீயசக்திகளையும் விரட்டும்.
கம்பு
சிவபெருமானை கம்பு தானியத்தை கொண்டு வழிபடுவது திருமணமான தம்பதிகளுக்கு இடையே இணக்கத்தை ஏற்படுத்தும். சிறந்த மனைவி அல்லது கணவன் வேண்டுமென விரும்புபவர்கள் நிச்சயம் இந்த தானியத்தை வைத்து சிவபெருமானை வழிபடவேண்டும். மேலும் இது நீங்கள் செய்த பாவங்களில் இருந்து உங்களுக்கு விமோட்சணத்தை வழங்கும்.
MOST READ: இந்த ராசிக்காரர்கள் எங்க போனாலும் அங்க ஒரே பஞ்சாயத்துதான்... இது உங்க ராசி இல்லயே?
அரிசி
இந்து மதத்தின் படி அரிசியை வைத்து கடவுளை வழிபடுவது அனைத்து சுபகாரியங்களிலும் இருக்கும் முக்கிய சடங்காகும். சிவபுராணத்தின் படி அரிசியை வைத்து சிவபெருமானை வழிபடுவது ஒருவரின் நிதி நிலைமையை அதிகரிக்கக்கூடும், மேலும் வருமானத்தையும் அதிகரிக்கும்.
கோதுமை
குழந்தை இல்லாமல் தவிர்ப்பவர்கள் சிவபெருமானை வழிபட வேண்டியது அவசியம் என புராணங்கள் கூறுகிறது. முனிவர்களின் கூற்றுப்படி குழந்தை இல்லாத தம்பதிகள் திங்கள் கிழமைகளில் கோதுமை வைத்து வழிபடுவது அவர்களுக்கு விரைவில் குழந்தை செல்வத்தை பெற்றுத்தரும்.
எள் விதைகள்
நீண்ட நாட்களாக நோயால் அவதிப்படுபவர்கள் அதிலிருந்து விடுபட சிவபெருமானை எள் கொண்டு வழிபடுவது நல்லது. இவ்வாறு வழிபடுவது விரைவில் அவர்கள் நோயிலிருந்து விடுபட்டு மகிழ்ச்சியாக வாழ உதவும்.
பச்சைப்பயிறு
புராணங்களில் குறிப்பிட்டுள்ளபடி சிவபெருமானை பச்சைப்பயிறு கொண்டு வழிபடுவது உங்களின் பாவங்களை விலக்கி உங்கள் வாழ்க்கையில் நேர்மறை சக்திகளை கொண்டு வரும். நீங்கள் வாழ்வில் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியும் உங்களை வெற்றியை நோக்கி அழைத்துச்செல்லும்.