Just In
- 3 hrs ago 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- 3 hrs ago 40 வருடங்கள் கழித்து கருவுற்றால் இந்த விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்!
- 4 hrs ago தழும்புகள் உங்க சருமத்தை அசிங்கமா காட்டுகிறதா? இந்த எளிய வீட்டு வைத்தியங்களை யூஸ் பண்ணுங்க..சீக்கிரம் மறையும்!
- 4 hrs ago வெயில் காலத்தில் உங்க இதயம் பாதுகாப்பாக இருக்கணுமா? அப்ப இந்த 5 விஷயங்களை ஒழுங்கா பண்ணுங்க...!
Don't Miss
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Movies Actress Sujitha: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகி.. சூப்பர்ல!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
உங்க ராசிக்கு இந்த வாரம் முழுக்க என்னவெல்லாம் நடக்கப்போகுது?... தெரிஞ்சிக்கணுமா?...
வார ராசிபலன்கள் 9.7.18 to 15.7.18 இந்த ஒரு வாரத்துக்கு 12 ராசிகளுக்குமான பலன்கள் எப்படியிருக்கப் போகிறது என்று பார்ப்போம்.
நம்மில் பெரும்பாலானோருக்கும் நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள்.
சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது? எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் சிலரோ ராசிபலன்களை முழு மனதாக நம்பி, அன்றைய தின பணிகளை தொடங்குவார்கள். அப்படி 14.5.18 முதல் 20.5.18 வரையிலும் ஒரு வாரத்துக்கு எந்த ராசிக்காரர்களுக்கு எப்படியிருக்கும் என்பதை பார்க்கலாம்.
மேஷம்
புதுப்புது எண்ணங்களாலும் முயற்சிகளாலும் பொருள் சேர்க்கை உண்டாகும். பெற்றோரின் உடல் நலத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துவது நல்லது. வீடு மற்றும் மனைகள் மூலம் லாபம் அதிகரிக்கும். விவாதங்களில் உங்களுககு சாதகமான சூழலே அமையும். உறவினர்களின் மூலமாக சுப செய்திக்ள வந்து சேரும். போட்டிகளில் கலந்து கொள்ளும் போது கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். தொழில் கூட்டாளிகளிடம் தேவையில்லாத விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. வெளியிடங்களில் இருந்து கடிதத்தின் மூலமான நல்ல செய்தி வந்து சேரும். ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையன்றும் சிவபெருமானை வழிபட்டு வாருங்கள். சங்கடங்கள் தீரும்.
ரிஷபம்
உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணியில் மேன்மையான சூழல் உண்டாகும். அனைவரிடமும் மரியாதை அதிகரிக்கும். கௌரவமான உயர் பதவிகள் உங்களைத் தேடி வரும். பொதுத் தொண்டு, சமூக சேவைகளில் ஈடுபடுவீர்கள். தந்தையின் வழியில் சொத்துக்களில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். மன தைரியத்துடன் புதிய புதிய திட்டங்களை முயற்சி செ்யது பார்க்கும் எண்ணம் உண்டாகும். அதில் வெற்றியும் கிடைக்கும். விளையாட்டு வீரர்களுக்கு இது மகிழ்ச்சியான வாரமாக அமையும். பொது சபைகளில் உங்களுக்கு ஆதரவுகள் பெருகும். ஆன்மீகப் பயணங்களில் ஈடுபடுகிறவர்களுக்கு நன்மை உண்டாகும். கால்நடை வளர்ப்பில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மகாலட்சுமியை வழிபட்டு வாருங்கள். கஷ்டங்கள் விலகி, செல்வம் பெருகும்.
மிதுனம்
உத்தியோகத்தில் உள்ளவர்கள் சக ஊழியர்களிடம் கொஞ்சம் நிதானமாக நடந்து கொள்ள வேண்டும். நண்பர்களின் மூலமாக வருமானம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் பெருகும். புதிய நபர்களிடம் கொஞ்சம் நிதானமாக நடந்த கொள்ள வேண்டும். வாகனப் பயணங்களி்ன் மூலமாக லாபம் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களால் வீட்டில் மகிழ்சியான சூழல் நிலவும். எதிர்பார்த்த தன வரவுகள் உண்டாகும். புதிய பொருள்கள் வாங்குவதற்கான சூழல் அமையும். பெரிய மகான்களின் தரிசனம் கிடைக்கும். செவ்வாய்க்கிழமை தோறும் முருகப் பெருமானை வழிபட்டு வாருங்கள்.
கடகம்
கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதங்கள் குறைந்து அன்பும் நெருக்கமும் அதிகரிக்கத் தொடங்கும். தொழில் சம்பந்தமாக இட மாற்றங்கள் உண்டாகும். பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான செயல்பாடுகள் நினைத்த பலன்களை உங்களுக்குத் தரும். மனதில் இருந்து வந்த கவலைகள் குறைந்து புத்துணர்ச்சி அடைவீர்கள். பொது சேவைகளில் ஈடுபடுகிறவர்களுக்கு புகழ் ஏற்படும். வீட்டில் பிள்ளைகளின் மூலமாக சுப செய்திகள் வந்து சேரும். உங்களின் செயல்பாடுகள் பிறருடைய விமர்சனத்துக்கு உள்ளாகும். பணியில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். எதிர்பாலின மக்களிடம் கவனமாக இருக்க வேண்டும். சனிக்கிழமை தோறும் ஆஞ்சநேயரை வழிபட்டு வாருங்க்ள.
சிம்மம்
உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. முக்கிய பொறுப்பான பணியில் உள்ளவர்களுக்கு கவலைகள் அதிகரிக்கும். எந்த செயல் செய்தாலும் அதில் கொஞ்சம் கவனமாக செயல்பட வேண்டும். தொழிலில் உங்களுடைய பங்காளிகளின் ஆதரவு உங்களுக்குக் கிடைக்கும். அலைச்சல்கள் இருந்தாலும் அதன்மூலம் அதிக லாபம் உண்டாகும். நல்ல காரியங்களுக்காக பிறருக்கு நன்கொடைகள் கொடுத்து மனம் மகிழ்வீர்கள். தொழில் சார்ந்த அலைச்சல்கள், பொருள் மற்றும் நேர விரயங்கள் உண்டாகும். எதிர்பார்த்த முடிவுகள் உங்களுக்கு சாதகமாக அமையும். சர்வதேச வாணிகத்தில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். தொழிலில் உங்களுக்கு மேன்மையான சூழலும் புதிய புதிய வாய்ப்புகளும் உண்டாகும். மனைவியிடம் கொஞ்சம் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. ஒவ்வொரு புதன் கிழமையும் பெருமாளை வழிபட்டு வாருங்கள்.
கன்னி
வீட்டில் பிள்ளைகளின் மூலம் சுப விரயச் செலவுகள் உண்டாகும். வெளிநாட்டு வேலைகளுக்கான முயற்சிகள் மேலோங்கும். புதிய வாய்ப்புகள் உண்டாகும். உயர் கல்விக்கான முயற்சிகள் நல்ல பலன்களைத் தரும். பரம்பரை சொத்துக்களால் நன்மை உண்டாகும். தொழிலில் உங்களுடைய பொறுப்புகள் உண்டாகும். கணவன், மனைவிக்கு இடையே சிறு சிறு பிரச்னைகள் உண்டாகும். வேலை செய்யும் இடங்களில் கோப்புகளைக் கையாளுகின்ற போது, கொஞ்சம் விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது. உங்களுடைய எண்ண ஓட்டங்களில் மாற்றங்கள் ஏற்படும். பிறருக்கு உதவி செய்யும் போது, கொஞ்சம் கவனமாக இருங்கள். திருமணப் பேச்சு வார்த்தைகள் கைகூடி வரும். சனிக்கிழமைகளில் பெருமாளை துளசி மாலை அணிவித்து வழிபட்டு வாருங்கள்.
துலாம்
வீட்டில் பெற்றோருடைய ஆதரவினால் மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். கால்நடைகளின் மூலமாக, உங்களுக்கு நீங்கள் எதிர்பார்த்த லாபம் கிடைக்க கொஞ்சம் கால தாமதமாகும். தொழிலில் மேன்மையான சூழல்கள் உண்டாகும். தலைமைப் பொறுப்பிற்கான முயற்சிகள் நிறைவேறும். கடல்வழியிலான பயணங்களால் ஆதாயங்கள் உண்டாகும். தந்தையிடம் சற்று கனிவாக நடந்து கொள்ளுங்கள். வாகனங்களில் பயணம் செய்யும்போது கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். பணியில் உள்ளவர்களுக்கு வேலை சம்பந்தமாக கொஞ்சம் அலைச்சல்கள் உண்டாகும். உங்களுடைய நட்பு வட்டாரம் பெருக ஆரம்பிக்கும். எதிர்காலத் திட்டங்கள் பற்றி யோசிக்க ஆரம்பிப்பீர்கள். வெள்ளிக் கிழமை தோறும் துர்க்கை அம்மனை வழிபட்டு வாருங்கள்.
விருச்சிகம்
தொழிலை அபிவிருத்தி செய்வதற்குத் தேவையான கடன் உதவிகள் உங்களுக்குக் கிடைக்கும். செய்யும் தொழிலில் புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். உயர் அதிகாரிகளுடன் பேசும்போது கொஞ்சம் நிதானத்துடன் பேசுங்கள். நிறுவனங்களில் சவாலான பணிகளில் ஈடுபட்டு, அனைவராலும் பாராட்டப்படுவீர்கள். ஆபரணங்கள் வாங்குவதற்கான செயல் திட்டங்களைத் தீட்டுவீர்கள். கடிதத்தின் மூலம் சுப செய்திகள் வந்து சேரும். வேலை சம்பந்தமான அலைச்சல்களால் மனமும் உடலும் சோர்வடையும். செய்யும் பணிகளில் கொஞ்சம் கவனமாக இருங்கள். விநாயகர் வழிபாடு மேற்கொண்டு வந்தால், சிக்கல்கள் நீங்கி, புதிய வழி பிறக்கும்.
தனுசு
தொழிலை அபிவிருத்தி செய்வதற்குத் தேவையான கடன் உதவிகள் உங்களுக்குக் கிடைக்கும். செய்யும் தொழிலில் புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். உயர் அதிகாரிகளுடன் பேசும்போது கொஞ்சம் நிதானத்துடன் பேசுங்கள். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களினால் எண்ணிய பலன்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் பணியாளர்களுடைய எண்ணங்களைப் புரிந்து கொண்டு செயல்படுவீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் கொஞ்சம் நிதானமாக நடந்து கொள்ள வேண்டும். கேளிக்கைகளில் ஈடுபட்டு மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். வாக்கு வன்மை மற்றும் பேச்சுத் திறமையினால் உங்களைப் பார்த்து உங்களுக்கு கர்வமாக இருக்கும் தருணங்கள் உண்டாகும். நிர்வாகத்தில் உங்களுக்கு சாதகமான சூழல்கள் உண்டாகும். புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வரும் வாய்ப்புகள் உருவாகும். கணவன் மனைவிக்கு இடையே மனக்கசப்புகள் நீங்கி, நெருக்கம் அதிகரிக்கும். கால பைரவர் வழிபாடு சிறந்த பலன்களைத் தரும்.
மகரம்
தொழிலில் கூட்டாளிகளின் ஆதரவுகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துங்கள். நண்பர்களுடன் கூடிப் பேசி மகிழ்வீர்கள். சுப செய்திகள் வந்து சேரும். சிந்தனையில் நல்ல மாற்றங்கள் பல உருவாகும். வீட்டில் குழந்தைகளின் தேவைகளை அறிந்து அதை நிவர்த்தி செய்து வைப்பீர்கள். தேவையற்ற விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. குடும்பத்திலும் நண்பர்களிடமும் மனக்கசப்புகள் நீங்கி, ஒற்றுமை அதிகரிக்கும். தொழிலில் நீங்கள் இழந்த பொருள்களை மீட்பதற்கான சூழல்களும் வாய்ப்புகளும் உங்களுக்கு உண்டாகும். பணிபுரிகின்ற இடத்தில் உள்ள சக ஊழியர்களை கொஞ்சம் அனுசரித்துச் செல்லுங்கள். சனீஸ்வரரை வழிபட்டு வாருங்கள். உங்களுடைய துன்பங்கள் நீங்கி, வளம் பெருகும்.
கும்பம்
தொழிலை அபிவிருத்தி செய்வதற்கான அத்தனை கடன் உதவிகளும் உங்களுடைய கைக்கு தானே தேடி வரும். வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினர்களின் மூலமாக சுப விரயச் செலவுகள் உண்டாகும். போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளைத் தட்டிச் செல்வீர்கள். சர்வதேச வாணிகத்தின் மூலமாக, நீங்கள் எதிர்பார்த்த பலன்கள் அத்தனையும் உங்களுக்குக் கிடைக்கும். அரசு அதிகாரிகளின் மூலமாக உங்களுக்கு சாதகமான சூழல்கள் உண்டாகும். கால்நடைகள் பராமரிப்பதில் கொஞ்சம் செலுத்தினால் லாபங்கள் இதிகரிக்கும். நண்பர்களுடன் கேளிக்கைகளில் ஈடுபட்டு மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். வீட்டுக்குத் தேவையான உபயோகப் பொருள்களை வாங்கிக் குவிப்பீர்கள். இன்பச் சுற்றுலாக்கள் செல்வதற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வந்து சேரும். உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். விவாதங்களில் உங்களுக்குச் சாதகமான பலன்கள் உண்டாகும். ஆன்மீக எண்ணங்கள் உங்களுக்கு மேலோங்கி நிற்கும். பிரத்யங்கார தேவி வழிபாடு உங்களுக்கு நன்மையைத் தரும்.
மீனம்
உடல் நலத்தில் உண்டான பிரச்னைகள் நீங்கி, நலம் உண்டாகும். மூத்த சகோதரர்களுடைய வாக்கு வாதத்தைத் தவிர்க்கவும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். பொது சபைகளில் உங்களுக்கு ஆதரவுகள் பெருகும். வேளாண்மை சம்பந்தப்பட்ட தொழிலில் இருப்பவர்களுக்கு லாபங்கள் இருமடங்கு ஆகும். செய்கின்ற தொழிலில் அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வதற்கான திட்டங்களைத் தீட்டுவீர்கள். நினைத்த செயல்களை பெரியோர்களுடைய ஆதரவினால் தடையின்றி வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்புகள் உண்டாகும். பண வரவு அதிகரிக்கும். அதனால் கடன் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். வியாழக் கிழமைதோறும் குரு பகவானை வழிபாடு செய்யுங்கள்.