Just In
- 1 hr ago உலகத்தின் தலையெழுத்தையே மாற்றிய காகிதத்தை முதலில் கண்டுபிடித்த நாடு எது தெரியுமா? சத்தியமா இந்தியா இல்ல...!
- 2 hrs ago செஃப் வெங்கடேஷ் பட்டின் ஸ்பெஷல் ரெசிபியான காலிஃப்ளவர் மல்லி ப்ரையை எப்படி செய்யணும் தெரியுமா?
- 2 hrs ago இந்த 3 வைட்டமின்கள் உங்க உடலில் குறைவாக இருந்தா உங்களுக்கு உயிருக்கு ஆபத்தான புற்றுநோய் வர வாய்ப்பிருக்காம்...
- 4 hrs ago மாரடைப்பை வரத்தூண்டும் கெட்ட கொலஸ்ட்ரால் குறையணுமா? இந்த பழங்களை அடிக்கடி சாப்பிடுங்க..
Don't Miss
- Finance பெத்த மகனுக்கே தெரியாமல் 20 வருடங்களாக ஏழை போல் வாழ்ந்த பில்லியனர்..!!
- Travel கோயம்புத்தூரில் இருந்து உங்கள் நண்பர்களுடன் ரோடு ட்ரிப் செல்ல பெஸ்ட் ஐடியாக்கள் இதோ!
- News நாளை காலை 9 மணி.. வைகோவின் அரசியலுக்கு முக்கியமான நேரம்.. சென்னை ஐகோர்டில் இன்று என்ன நடந்தது?
- Movies ’லொள்ளு சபா’ சேசு காலமானார்.. மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், உயிர் பிரிந்தது
- Automobiles இன்சூரன்ஸ் இல்லாத வெளிநாட்டு காரில் பயணித்த நாம் தமிழர் வேட்பாளர்! வைரலாகும் புகைப்படம்!
- Technology அதிர்ச்சி தந்த ஆராய்ச்சி.. ப்ளூடூத் யூஸ் பண்ணுறீங்களா? அப்போ இதை கவனியுங்க.. உடல் விளைவுகளால் சிக்கல்..
- Education முதல் முயற்சியிலேயே நீட் தேர்வில் வெற்றி பெற முடியுமா...
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு புதிய தலைவலி.. பழைய அவமானத்தை மறக்காத முகமது ஷமி.. அதிரடி திருப்பம்
நாரதரை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய சிறப்புகள்
நாரதர் கலகம் மூட்டுபவர் என்றும், அவர் திருலோக சஞ்சாரி என்று மட்டுமே நாம் அறிவோம். ஆனால் அவர் பெருமாளுக்கே சாபம் கொடுத்தவர் என்று நம்மில் பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
" நாரதர் கலகம் நன்மையில்" முடியும் என்ற பழமொழியை நாம் அடிக்கடி உபயோகிப்போம். ஏனெனில் கலகம் மூட்டுவதில் கைதேர்ந்தவர் நாரதர். நம் நண்பர்களையே நாம் அடிக்கடி 'டேய் நாரதா" என்று அழைத்திருப்போம். அந்த அளவிற்கு நம் அன்றாட வாழ்வில் கலந்திருக்கும் ஒரு கதாபத்திரம் தேவரிஷி நாரதர் ஆவார். பல அரக்கர்களிடம் இருந்து தேவர்கள் மற்றும் மனிதர்களின் காப்பாற்ற பலவித சூழ்ச்சிகள் செய்து அனைவரையும் காப்பாற்றியவர் என பல கதைகளை நாம் கேள்விப்பட்டிருப்போம். இவரின் பேச்சுதிறமைக்கு மயங்காதவர் எவரும் இருக்க முடியாது.
இதிகாசங்களிலும் சரி, புராணங்களிலும் சரி இவர் இல்லாத கதைகள் எதுவும் இருக்க வாய்ப்பில்லை. அந்த அளவிற்கு இவர் முக்கியமானவர். கையில் ஒரு வீணையுடன் எப்பொழுதும் "நாராயண" "நாராயண" என்று கூறிக்கொண்டே இவர் மூட்டும் கலகங்கள் ஆரம்பத்தில் பிரச்சினைகளை எழுப்பினாலும் இறுதியில் அனைவருக்கும் நன்மையை மட்டுமே ஏற்படுத்தும். குறிப்பாக ஞானப்பழத்தை வைத்து சிவ குடும்பத்தில் இவர் மூடிய கலகம் மிகவும் பிரசித்தம். இவரின் சிறப்புகளை அறிந்தால் கலகத்தை மட்டுமே ஏற்படுத்துபவர்களை இனி நாரதர் என கூறமாட்டோம். ஏனென்றால் இவர் ஏற்படுத்தும் கலகம் உலகத்திற்கு நன்மையையும் , நல்ல படிப்பினையையும் பெற்றுத்தரும், எனவே கலகம் செய்யும் அனைவரும் நாரதர் ஆகிவிட முடியாது.