Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..!
ஒரே நாளில் 27 பெண்களை திருமணம் செய்துகொண்ட ஆண்...
பங்குனி என்பது தமிழ் மாதங்களில் கடைசி மாதம். அந்த மாதத்தில் வருகிற பௌர்ணமியன்று உத்திர நட்சத்திரமும் சேர்ந்து வரும். அதை மிக விமரிசையாக மக்கள் கொண்டாடுவார்கள்.
பங்குனி என்பது தமிழ் மாதங்களில் கடைசி மாதம். அந்த மாதத்தில் வருகிற பௌர்ணமியன்று உத்திர நட்சத்திரமும் சேர்ந்து வரும். அதை மிக விமரிசையாக மக்கள் கொண்டாடுவார்கள். குறிப்பாக, உலகத்தில் உள்ள எல்லா முருகன் கோவில்களிலும் மக்கள் கூட்டம் கூட்டமாகச் சென்று வழிபாடு நடத்துவார்கள்.

இந்த நாளில் விரதம் இருந்தால் வாழ்க்கை இனிமையாக இருக்குமாம். பங்குனி உத்திர விரதத்துக்கு கல்யாண விரதம் என்றே மற்றொரு பெயரும் இருக்கிறதாம். சரி அப்படி ஒரு புனித நாளில் யார்தான் இப்படியொரு திருமணத்தை செய்து கொண்டது என்று தானே கேட்கிறீர்கள்.

பங்குனி உத்திரம்
தமிழ் மாதத்தின் 12 ஆம் மாதமான பங்குனியில் 12ஆம் நட்சத்திரமான உத்திரம் இணைகிற முழு நிலா நாளான பௌர்ணமியைத் தான் நாம் பங்குனி உத்திரம் என்று சொல்கிறோம். அந்த பங்குனி உத்திரத்தின் போது மக்கள் முருகன் கோவிலில் குவிவது நமக்குத் தெரியும். அதனால் இது வெறுமனே முருகனுக்கு மட்டும் உகந்த நாள் என்று நினைத்துவிடாதீர்கள்.

பங்குனி உத்திர விரதப்பலன்
வளமான பலன்களை அள்ளித் தரக்கூடிய விரதங்களுள் பங்குனி உத்திர விரதமும் ஒன்று. இந்த விரதத்துக்கு கல்யாண விரதம், திருமண விரதம் என்று பல பெயர்கள் இருக்கின்றன. சிவன் பார்வதியை பங்குனி உத்திரத்தன்று அவருக்கு காட்சி தந்து திருமணம் செய்து கொண்டாராம். அதுபோல பங்குனி உத்தரத்தன்று விரதம் இருக்கும் பெண்களுக்கு சிவனைப் போன்ற மணமகன் கிடைப்பார் என்பது ஐதீகம். இந்த நாளில் ஓம்சிவாயநம, ஓம் பராசக்தி நம என்ற நாமத்தை 108 முறை ஜெபிக்க வேண்டும். மதியம் ஒரு வேளை உணவு உண்ணலாம். காலையும் இரவும் பால். பழம் சாப்பிடலாம்.

சூரியனும் சந்திரனும்
உத்திர நட்சத்திரத்தின் அதிபதி, அந்த நட்சத்திரத்துக்கு நாயகனாக இருப்பது சூரியன். அந்த நாளில் சந்திரனும் முழு நிலவாக இணைவது மேலும் அதிக பலன்களைத் தரும். இப்படி சூரியனும் சந்திரனும் இணையும் பங்குனி உத்திர நாளில் விரதம் இருந்தால் கிடைக்கும் பலன்கள் இரட்டிப்பாகக் கிடைக்கும்.

ஐய்யப்பன் பிறந்த நாள்
சாஸ்தாவின் அவதாரமாகத் திகழ்கிற ஐய்யப்பன் சபரிமலையில் கோயில் கொண்டிருக்கிறார். மாத பூஜை தவிர கோயில் நடை திறக்கும் முக்கிய நாட்களுள் பங்குனி உத்தரமும் ஒன்று. இதற்கு இன்னொரு முக்கிய காரணமும் இருக்கிறது. இந்த பங்குனி உத்திரத்தன்று தான் ஐய்யப்பன் பிறந்த நாளாம்.

ஸ்ரீராமர்- சீதா தேவி கல்யாணம்
பெண்களிடம் யாரைப் போல் கணவர் வேண்டுமென்றால் ராமனைப் போல என்று சொல்லக் கேட்டிருப்போம். அத்தகைய ராமபிரான் சீதையை மணந்தது இந்த பங்குனி உத்திரத்தன்று தான். அதனால் தான் இந்த நாளில் விரதம் இருப்பவர்கள் ராமனைப் போல கணவனைப் பெறலாம் எனவும் சொல்லப்படுகிறது.

27 பெண்ணை மணந்த ஆண்
என்னடா இது! ஒரே நாளில் எப்படி 27 பெண்ணை மணக்க முடியும் என்று தானே கேட்கிறீர்கள்?... அப்படித்தான் ஒருவர் மணந்திருக்கிறார். அவர் வேறு யாரும் இல்லைங்க. நாம் நிலா என்று கொஞ்சி விளையாடுகிற சந்திரன் தான் அது. பங்குனி உத்திர நாளன்று அஸ்வினி, பரணி, கார்த்திகை, ரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், பூரம், உத்தரம், அஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி ஆகிய 27 நட்சந்திரங்களையும் ஒரே நாளில் மணந்து கொண்டார். அவனவன் ஒரு மனைவியையே சமாளிக்க முடியாமல் திணறும்போது, 27 பேரை ஒரே நாளில் மணந்த சந்திரன் உண்மையிலேயே தைரியம் மிக்க ஆண்மகன் தான்.



Click it and Unblock the Notifications











