Just In
- 1 hr ago 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- 3 hrs ago தளர்ந்து போன சருமத்தை இறுக்கமாக்கி ஜொலிக்கிற மாதிரி மாத்த ஆசைப்படுறீங்களா? இந்த இயற்கை பொருட்களை யூஸ் பண்ணுங்க
- 3 hrs ago திருமணம் ஆக இருக்கும் இளம்பெண்கள் இந்த ஜூஸை குடியுங்கள்.. முகம் பொலிவுறும்..!
- 4 hrs ago சப்பாத்திக்கு ஒருடைம் உருளைக்கிழங்கு வெச்சு இப்படி கிரேவி செஞ்சு பாருங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
Don't Miss
- News மாஸ் காட்டிய சென்னைவாசிகள்! 40 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவு! 1980க்கு பிறகு இதுதான் அதிகம்
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
இதுவரை கேள்விப்படாத ஹிட்லரின் இன்னொரு முகம்!
உலகையே மிரட்டிய ஹிட்லரின் காதல் பக்கங்கள் மற்றும் ஜெர்மனியில் நடைப்பெற்ற மிக விசித்திரமான குழந்தை பெற்றுத்தரும் நடைமுறை.
ஹிட்லர் என்று சொன்னாலே மிக கொடுரமான பக்கங்களை மட்டும் தான் கேள்விப்பட்டிருப்ப்போம். ஆனால் அவருக்குள் இருந்த இன்னொரு முகம், அது கனிவானதாகவும் காதல் ததும்பியதாகவும் இருந்திருக்கிறது என்று தெரியுமா?
ஈவா ப்ரான், ஹிட்லரின் ஆஸ்தான காதலி. ஹிட்லருக்கும் ஈவாவுக்கும் கிட்டத்தட்ட 23 வருட வித்யாசம் இருக்கிறது. ஹிட்லரை பதினாறு வருடங்களாக பின் தொடர்ந்தவர் ஈவா. இவர்களது காதல் பக்கங்கள் மிகவும் சுவாரஸ்யமானதாக இருக்கிறது, திருமணம் செய்து கொண்ட சில மணி நேரங்களில் மரணத்தை தழுவிய இந்த காதல் ஜோடியின் சில காதல் பக்கங்கள்.
முதல் சந்திப்பு :
ஹிட்லர் ஈவாவை முதன் முதலில் சந்தித்த போது ஈவாவுக்கு பதினேழு வயது. ஹிட்லருக்கோ வயது நாற்பது. ஒரு போட்டோகிராபருக்கு அஸிஸ்டண்ட்டாக பணியாற்றுக் கொண்டிருந்த போது தான் சந்தித்தார்.
ஹிட்லர் மீதான தன்னுடைய காதல் குறித்து வீட்டில் சொன்னபோது, ஒருவர் விடாமல் அனைவரும் எதிர்த்தார்கள். எல்லாரையும் எதிர்த்து ஹிட்லரை கரம்பிடிக்க தயாரானார் ஈவா.
பொதுவெளியில் :
தான் அரசியலிலும், இந்த நாட்டின் மீதும் அக்கறை கொண்டுள்ளவன் என்றே தன்னை காட்டிக் கொள்ள நினைத்தார் ஹிட்லர். அதனால் தன்னுடைய ஆசாபாசங்களை பொதுவெளியில் காட்டிக் கொள்வதை தவிர்த்தார்.
பதினாறு வருடங்கள் ஈவாவைத் தெரியும் என்றாலும் கடைசி நேரத்தில் தான் திருமணம் செய்து கொண்டார்.
சந்தேகம் :
ஈவாவுடன் டேட்டிங் செல்வதற்கு முன்னால் ஹிட்லருக்கு ஈவா மீதும் சந்தேகம் இருந்தது. அவரோ அல்லது அவரது குடும்பத்தினர் யாராவது யூதர்களாகவோ அல்லது யூதர்களுடன் தொடர்பு கொண்டவர்களாக இருப்பார்களோ என்ற சந்தேகம் அவருக்கு அதிகம் இருந்தது.
இதனை விசாரித்து சொல்வதற்கென்றே ஒரு விசாரணைக் குழுவையும் ஒற்றர்களையும் நியமித்திருந்தார் ஹிட்லர்.
கட்டுப்பாடு :
ஹிட்லர் உடனான காதல் குறித்து ஈவா தன்னுடைய டைரியில் பல்வேறு குறிப்புகளை எழுதி வைத்திருக்கிறார். அதில், ஹிட்லர் தன்னை நிறைய கட்டுப்படுத்தியதாகவும் புகைப்பிடிக்கக்கூடாது, குடிக்கக்கூடாது, நடனமாடக்கூடாது, பொது இடத்தில் யாரையும் சந்திக்கக்கூடாது என்று எக்கசக்க விதிமுறைகள் விதிக்கப்பட்டது என்றிருக்கிறார்.
முதல் காதல் :
ஹிட்லரை காதலிப்பதற்கு முன்னதாக ஈவாக்கு ஃபரர் என்பவர் மீது காதல் இருந்திருக்கிறது. இருவரும் காதலித்துக் கொண்டிருந்த போது முதல் காதல் பிரிய நேரிட்டது. காதல் பிரிவால் மனதளவில் மிகவும் வருத்தத்தில் இருந்த ஈவா1932 ஆம் ஆண்டு மற்றும் 1935 ஆம் ஆண்டு என இரண்டு முறை தற்கொலைக்கு முயன்றிருக்கிறார்.
ஒரே கனவு :
ஈவாவுக்கு இருந்தது ஒரேயொரு கனவு அது என்ன தெரியுமா? தான் இறப்பதற்கு முன்னால் ஹிட்லர் தன்னை திருமணம் செய்து கொண்டு விட வேண்டும் என்பது தான். இறப்பதற்கு முந்தைய இரவு அதாவது சில மணி நேரங்களுக்கு முன்பே ஈவாவின் கனவு நிறைவேறியது. அந்த நாள் ஏப்ரல் 29,1945
நீ வேண்டாம் :
தான் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்திருந்த ஹிட்லர் ஈவாவையும் தன்னோடு அழைத்துச் செல்ல விரும்பவில்லை, நீ தற்கொலை செய்து கொள்ள வேண்டாம் என்று எதிர்த்தார். ஆனால் ஈவா விரும்பவில்லை, உறுதியுடன் காதலனைத் பின் தொடர்ந்தார்.
ஏன் ஈவா :
ஹிட்லரைச் சுற்றி பல பெண்கள் இருந்தார்கள், அவரை ஈர்த்த பல பெண்களில் ஈவா தான் தன்னுடைய காதலி என்று தேர்ந்தெடுக்க காரணம், ஈவாவின் உண்மையும் நேர்மையும் தான். அதோடு ஹிட்லரின் அரசியல் குறித்து எந்த கவனமும் செலுத்தாமல் இருந்தார்.
தாய் வாடகைக்கு :
1936 ஆம் ஆண்டு நாஸி படைகளின் ஆதரவாளரும், பள்ளிப்படிப்பை முடித்திருந்தவருமான ஹைல்ட்கார்ட் ட்ரூட்ஸ் ஒரு வேலைக்காக அழைக்கப்படுகிறார். அவரது மிக முக்கியமான வேலை என தெரியுமா? ஆர்ய குழந்தையை பெற்றுக் கொடுக்க வேண்டும்.
காரணம் :
ஜெர்மானியர்கள் இந்த டாஸ்கில் பங்கேற்க வேண்டும் என்று ஹிட்லர் கட்டளையிட்டிருந்தார் இதற்கு லெபனன்ஸ்பார்ன் என்று பெயர் வைக்கப்படிருந்தது. கிட்டத்தட்ட 200 மில்லியன் குழந்தைகளை இப்படி பெற்றெடுக்க வேண்டும். இது சாத்தியமானால் உலகம் முழுவதும் ஜெர்மானியர்களே நிறைந்திருப்பார்கள் என்று கற்பனை செய்தார்கள்.
இப்படியொரு விசித்திர ஐடியாவைக் கொடுத்தது, எஸ் எஸ் படைகளின் தலைவராக இருந்த ஹெய்ன்ரிச் ஹிம்லர்.
கட்டாயம் :
ஜெர்மனியின் மிக ஆக்ரோசமான படை என்று வர்ணிக்கப்படுகிற எஸ் எஸ் படையினர் கண்டிப்பாக ஜெர்மானியப் பெண்களுடன் உறவு கொள்ள வேண்டும், அதோடு நாட்டுக்காக குழந்தை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்றும் கட்டாயப்படுத்தப்பட்டது.
திட்டம் துவங்க காரணம் :
1900களில் ஜெர்மனி குழந்தைகள் பிறப்பது பெருமளவு குறைந்தது. காரணம் ஆண்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருப்பதும் கூடுதலாக அங்கு பொருளாதார நெருக்கடி, முதலாம் உலகப்போர் எல்லாம் சேர்ந்து கொண்டது.
கருக்கலைப்பு அங்கு மிக சாதரணமாக நடந்தது. 1930களில் வரலாறு காணாத அளவிற்கு மிகவும் குறைவாக போகவே இந்த திட்டம் அறிவிக்கப்பட்டது.
வசதி வாய்ப்புகள் :
தன்னுடைய குழந்தை ஓர் ஆர்யருக்கு பிறக்கப்போகிறது என்பதை நிரூபித்தால் அவருக்கு ஏராளாமன சலுகைகள் வழங்கப்பட்டன. கூடவே அந்தப் பெண்ணுக்கு ஏராளமான பணமும் வழங்கப்பட்டது.
இதற்கு கைமாறாக அந்த பெண் தான் குழந்தை பெற்றெடுத்த பிறகு, லெபென்ஸ்பார்ன் ஹோமில் குழந்தையை விட்டு விட வேண்டும். அங்கே குழந்தைக்கு உரிய கல்வி போதிக்கப்பட்டு வளர்க்கப்படும்.
எத்தனை குழந்தைகள் :
கிட்டத்தட்ட பத்து ஹோம்கள் இதற்கென்றே நியமிக்கப்பட்டிருந்தன. பன்னிரெண்டு வருடங்களில் இருபதாயிரம் குழந்தைகள் பிறந்தது. இவர்களில் ஹில்டிகார்ட் ட்ரூட்ஸ் சொன்ன தகவல் மிகவும் பரபரப்பை உண்டாக்கியது.
நான் ஹிட்லருக்கு குழந்தை பெற்றுக் கொடுத்தேன் என்றார். இவர் புண்ட் ட்யூட்சர் மேடல் படையில் தீவிரமான செயல்பாட்டாளராக இருந்தார். இந்த படை லேடி ஹிட்லர் க்ரூப் என்றே அழைக்கப்பட்டது.
அந்த நாள் :
எனக்கு பதினெட்டு வயதாகியிருந்தது, பள்ளிப்படிப்பை முடித்திருந்தேன் அதற்கடுத்து என்ன செய்வதென்ற திட்டமிடலும் இல்லை, என்ன செய்தவதென்று தெரியவும் இல்லை. இந்நிலையில் தான் பிடிஎம் தலைவர் என்னை அழைத்திருந்தார்.
அப்போது தான் திட்டத்தின் முக்கிய அம்சத்தைப் பற்றியும், அது நம் ஜெர்மனிக்கு எவ்வளவு அவசியமான தேவை என்பது குறித்தும் விளக்கினார்.
வீட்டிற்கு தெரியாமலே.... :
மருத்துவர் ஒருவர் பரிசோதிக்க இவர் ஜெர்மன் வம்சாவளியைச் சார்ந்தவர் தானா என்று உறுதிப்படுத்தப்பட்டது. தற்போது இவர் கருத்தரிக்க ஒரு ஸ்லீப்பிங் பார்ட்னர் வேண்டும். எஸ் எஸ் அலுவலர்கள் மத்தியில் இந்த தகவல் பகிரப்பட்டது.
பெற்றோர் இதற்கு ஒப்புக் கொள்ள மாட்டார்கள் என்பதையறிந்த ஹில்டிகார்ட் தான் ரெஸிடன்ஷியல் ப்ரோகிராம் ஒன்றில் பங்கேற்க போவதாகவும் அதனால் அங்கேயே தங்க வேண்டியது கட்டாயம் என்று சொல்லி வீட்டிலிருந்து வெளியேறினார்.
40 பேர் :
இப்படி தன்னைப் போலவே ஏராளமான பெண்கள் விண்ணப்பித்திருந்தது எஸ்கார்டட் வீட்டிற்கு சென்ற பிறகு தான் தெரிந்தது கிட்டத்தட்ட நாற்பது பெண்கள் வரை அங்கிருந்தார்கள்.
ஏராளமான டாக்குமெண்ட்களில் கையெழுத்து வாங்கப்பட்டது. இவர்களுக்கு பணிவிடை செய்ய எக்கசெக்க வேலைக்காரர்கள் இருந்தார்கள், செல்வசெழிப்பான வாழ்க்கை,சொகுசான வாழ்க்கையாகவும் இருந்தது.
மூன்று இரவு :
பெண்களின் பெயர்கள் மாற்றப்பட்டன. இங்கிருந்து வெளியில் செல்லும் வரை இது தான் உங்களுடைய பெயர் என்று சொல்லப்பட்டது. பின்னர் தங்களுக்கான இணை யாரென்று தேர்ந்தெடுக்க வேண்டும் அவருடன் மூன்று இரவுகளை கழிக்க வேண்டும்.
அங்கே எஸ் எஸ் பிரிவில் இருக்கும் அதிகாரிகளுக்கும் இது ஒரு டாஸ்க். தங்களது திருமணத்திற்கு முன்னதாக குறைந்தது நான்கு குழந்தைகளையாவது பெற்று கொடுத்திருக்க வேண்டும்.
எல்லாம் ஹிட்லருக்காக :
ஹில்டிகார்ட் கர்ப்பமானார். அவருடைய குழந்தை லெபென்ஸ்பார்ன் ஹோமுக்கு கொண்டு செல்லப்பட்டது. ஹிட்லர் மீது தீவிர ஈர்ப்பு கொண்டிருந்த இந்தப் பெண் அவர் சொன்னது போலவே தொடர்ந்து நிறைய குழந்தைகளை இப்படி பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று விரும்பினார் ஹில்டிகார்ட் ஆனால், அதற்குள்ளாக ஒரு ஆபிஸரை காதலித்து திருமணம் செய்து கொண்டுவிட்டார்.